ஒன்ஸ் அபான் ய டைம்

Once upon A Time, சேது, மொழிபெயர்ப்பு கே.டி. ராஜகோபாலன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 180ரூ. மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். மொழிபெயர்த்திருப்பவர் கே.டி.ராஜகோபாலன். குறிப்பாகத் தளங்கள் எதையும் புனையாவிட்டாலும், கேரளாவில் நடப்பதாக களங்கள் சித்தரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து மகளோடு வாழும் கதையின் நாயகி, ஒரு மாபெரும் கூட்டாண்மை நிறுவன குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும்கூட. பெரும் போராட்டங்களுக்கு இடையே, […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ.நீலன், அருள் பதிப்பகம், பக். 190, விலை 125ரூ. பிரம்மம் எது? என்று தேடும் தத்துவச் சிந்தனை கொண்ட நூல். சங்கரரின் அத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் காட்டும், ‘பிரம்மம்’ பற்றிய வாதங்களைத் தொகுத்துள்ளார். தாளில் போட்ட வட்டத்தை அளக்கலாம். ஆனால், வானில் போட்ட வானவில்லை அளக்கும் முயற்சி தான் பிரம்மத்தை வரையறை செய்வது. ஆனாலும், தெளிவாக தேடி அறிய முயற்சித்துள்ளார். வினா – விடைப் பாங்கில் நூல் முழுவதும் ஆர்வமாக நகர்கிறது. ஆன்மா எது? பிரம்மம் எது? உலகம் […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, தொகுப்பு டாக்டர் ஆர். வைத்தியநாதன், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குரு பரம்பரையை வரிசைப்படுத்தி, வண்ணத்தாளில், உரிய படங்களுடன், அதற்கான தகவல்களுடன் இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் முனைவர் மட்டும் அல்ல பட்டயக்கணக்காளரும் கூட. வழிவழியாக இந்த மடத்தின் சீடர் கூட்டத்தில் பிரதானமானவர் என்பதை முன்னுரையில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காஞ்சி மாமுனிவர், அவரது அருளுரைகள் தாங்கிய, ‘தெய்வத்தின் குரல்’ தமிழகம் நன்கு பழகியதொன்றாகும். நம் நாட்டில் வேதநெறி தழைக்கவும், […]

Read more

பக்தி யோகம்

பக்தி யோகம், (ஸ்ரீமத் பகவத் கீதை 12வது அத்தியாயம்), மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி), பக். 192, விலை 80ரூ. சனாதன தர்மம் எனப்படும் இந்து மத நெறியை, பகவத் கீதை பார்வையில் அழகாக விளக்கும் நூல். பக்தி நெறி மூலம் பழகும், இறையின் நாம கீர்த்தனமே உயிருக்கு ஆதாரமான உரமூட்டும் சிந்தனையை வளர்க்கும் என்ற பார்வையில், முரளிதர சுவாமிகள் பகவத் கீதையில் பக்தியோகத்தை தன் சொற்பொழிவுகளில் தெரிவித்த கருத்து, இங்கே அழகிய மாலையாக உருவாகியிருக்கிறது. பக்தியில் பிரகலாதன் போல அல்லது துருவன் போல […]

Read more

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை, சாலமோன் மனுவேல், பக். 448, விலை 80ரூ. குமரி மாவட்டத் தமிழரின் படைப்பு இந்நூல். நூலின் முதல் 80 பக்கங்கள் அணிந்துரை, கருத்துரை, மதிப்புரை, என்னுரை, முன்னுரை என, தனி நூலளவுக்கு நீளுகிறது. அண்ணாவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, அரசியல், பேச்சுகள், எழுத்துகள் என்று தொடரும் நூலில், ஆங்காங்கே அண்ணாவின் சிந்தனைகளும், அவற்றில் சுய முன்னேற்றம் அடங்கி இருப்பதும் எழுதப்பட்டு உள்ளது. புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல். இதயத்தின் மகிழ்ச்சியே முகத்தின் மலர்ச்சி. […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 90, விலை 60ரூ. முழுநேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம் என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார், க.நா.சு., வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் அழகிய சிங்கர். சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட, 3,000 பக்கங்களுக்கு மேல் அவர் படித்த, 20 புத்தகங்களின் விபரங்கள் தான், ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற இந்த சிறிய நூல். எல்லாரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் இவை. எஸ்.ராமகிருஷ்ணன் […]

Read more

வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள் தமிழ் மண் தமிழர் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், பக் 348, விலை 350ரூ. தொல்லியல், கல்வெட்டு ஆராய்ச்சியாளரான நூலாசிரியர், தனது 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பில் தமிழ் மண், தமிழர், தமிழ் வரலாறு தொன்மைக்காலம் முதல் கி.பி. 1947-ஆம் ஆண்டு வரையில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் தொன்மைகளை அகழ்வாய்வு, கல்வெட்டு, மொழியாய்வு வல்லுநர்களின் கருத்துகளைக் கொண்டு விவரிக்கிறார் நூலாசிரியர். தமிழ் மன்னர்களைப் பற்றியும், அவர்களது உணர்வுகள் குறித்தும் “நந்திக்கலம்பகம்’‘ நூலின் மூலம் […]

Read more

உரையாசிரியர்களின் உரைவளம்

உரையாசிரியர்களின் உரைவளம், கண்ணகி கலைவேந்தன், தமிழய்யா வெளியீட்டகம், பக். 480, விலை 500ரூ. கரந்தை தமிழ்ச்சங்கமும், திருவையாறு கல்விக்கழகமும் நடத்திய அனைத்துலக உரைநடைத்தமிழ் 14ஆவது ஆய்வு மாநாட்டின் கட்டுரைத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் 80 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இலக்கணம், இலக்கியம், தற்கால உரைநடை முன்னோடிகள் என 3 பிரிவுகளாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி என்பது மக்களின் தொடர்பியல் சாதனமாக உள்ள நிலையில், காலத்திற்கேற்ப மக்கள் அம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழிகளின் கால தூதுவர்களாகவும், இணைப்புப் பாலமாகவும் திகழ்பவர்களே உரையாசிரியர்கள் என்பது பொதுவான கருத்து. […]

Read more

லாபம் தரும் பட்ஜெட்

லாபம் தரும் பட்ஜெட், விகடன் பிரசுரம், பக். 168, விலை 115ரூ. பசுமை விகடனில் பல வாரங்கள் தொடராக வெளிவந்து விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். நெடுங்காலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நாம், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் விவசாயம் செய்ய ரசாயன உரங்களைப் பயன்படுத்த தொடங்கினோம். இதன் காரணமாக, உணவு தானியங்களிலும், காய்கறிகளிலும் நஞ்சு கலக்கப்படுவதுடன், மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி வருகிறது. ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் பயணப்படுவதற்காக […]

Read more

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன், யமுனா ராஜேந்திரன், பிரக்ஞை பதிப்பகம், பக்.168, விலை 130ரூ. உலக அளவில் வெளியான குழந்தைகள் பற்றிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல். வெறுமனே திரைப்படங்கள் குறித்தும், கதைச்சுருக்கம், நடிகர், நடிகையர் பற்றியும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், படம் உருவானதன் பின்னணி, கேமரா கோணங்களின் சிறப்பு, காட்சிகளின் முக்கியத்துவம் என்று பலவகையிலும் சிறப்பான திரைப்படங்களைப் பலமுறை பார்த்து, ஆராய்ந்து விரிவாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. நெதர்லாந்து திரைப்படமான “பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்’‘ (1996) படத்தில், சொந்த மண்ணைப் பிரிவதனால் சமூகத்தின் மீது […]

Read more
1 438 439 440 441 442 505