தண்ணீர் அஞ்சலி

தண்ணீர் அஞ்சலி, காகிதம் பதிப்பகம், பக், 64, விலை 50ரூ. ‘குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு’ -இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்திவிடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இலக்கணம் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு சொக்கனின் இந்நூலைப் படித்தால் அடிப்படையான இலக்கணத்தை அறிந்து கொண்ட உணர்வைத் தருகிறது. நன்னூல், தொல்காப்பியம், இலக்கிய உதாரணங்களை மட்டும் சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று திரைப்பாடல்களையும், பட்டிமன்ற நகைச்சுவையையும் உதாரணமாகக் காட்டுவது படிப்போரை எளிதில் விளங்க வைக்கும் உத்தி. புதிய தலைமுறையை நல்ல தமிழில் எழுத வைக்கும் முயற்சி இது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128,விலை 60ரூ. மனிதனுக்க வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. நன்றி: குமுதம், 4/1/2017.   —-   உள்ளம் உலகம், சேகர் பதிப்பகம், விலை 125ரூ. “உருவகக் கடல் கவியரசு” என்று புகழ் பெற்ற […]

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 143, விலை 60ரூ. பாதியாரின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க., டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ.., வையாபுரிப்பிள்ளை, ம.பா.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதி பற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப் பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு […]

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைப் போல், இன்று நமது அரசியல் கொள்ளையரிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, ஆர்.சி.சம்பத்,கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன், புரையோடிப்போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான்/ நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப் போன்ற தலைசிறந்த நடிகன், இத்துனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியத்தையும் இந்த நூல் மூலம் அறிய வைக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

தெய்வத்தின் அருள்

தெய்வத்தின் அருள், தொகுப்பாசிரியர் கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், விலை 60ரூ, காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்களை எழுத்தாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கியுள்ளார். 1 முதல் 10 தொகுதிகள். ஒவ்வொன்றும் விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.   —- புலவர் த. கோவேந்தனின் மொழிபெயர்ப்பு கவிதைகள், கொற்றவை வெளியீடு, விலை 400ரூ. கவிஞர், கட்டுரையாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர், த.கோவேந்தன், அவர் வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தக் கவிதைகளின் தொகுப்பே இந்த […]

Read more

ஆட்சி பீடம்

ஆட்சி பீடம், ஏர்பாத் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. வீரமும் ஈரமும் கொண்ட உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக (கலீபா) பொறுப்பேற்றதும் எளிமைக்கோர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். அவர்களின் வரலாற்றை ச.சி.நெ. அப்துல் ரசாக் சுவைபட எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —- திருக்குர்ஆன் விளக்கவுரை, மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்), இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 130ரூ. மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ஸல்) எழுதிய திருக்குர்ஆன் விளக்கவுரை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இதை மவுலவி எம்.ஐ.முகம்மது […]

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more
1 436 437 438 439 440 505