வாழ்வியல்

வாழ்வியல், த.திலகர்; விஜயா திலகர் பதிப்பகம், பக். 128, விலை ரூ.150;  சுவாமி சின்மயானந்தரால் தொடங்கப்பட்ட சின்மயா மிஷன் அமைப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டு புரிந்து வரும் நூலாசிரியர் திலகர், சுவாமிஜியிடம் கற்ற, கேட்ட விஷயங்களைப் பல்வேறு தலைப்புகளில் நூலாக வடித்துள்ளார். மனம் ஒரு குரங்கு – அதைக் கட்டுப்படுத்த வேண்டும். செய்யும் விஷயத்தில் முழு மனதைச் செலுத்துவதே தியானம் . நாம் எந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும், மணவாழ்க்கையில் நிம்மதியாக இருப்பது எப்படி, ஓம் என்ற எழுத்தின் சிறப்பு, பள்ளிப் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம்,  பக்.232, விலை ரூ.200. நூலாசிரியர் இந்திய ஆட்சிப்பணியின்போது தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு 10 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தந்துள்ளார். பெருக்கெடுக்கும் வார்த்தை பிரவாகம், பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையான நடை நம்மைக் கவர்கிறது. பணியில் சிறக்க' என்ற தலைப்பில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பற்றிய ஒப்பீடு, நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனம் சிறக்க ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், கடும் உழைப்புத் திறன் ஆகியவை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளார். […]

Read more

சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம், பெ.சிதம்பரநாதன், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.300 வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மா மனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவு செய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில் மேம்பாடு, மொழிப் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை, உலகமயமாதல், இட ஒதுக்கீடு, கல்வி மறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப் பிரச்னைகள், சமூக சேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம் அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில் நுட்பத்தாலும் காந்தியக் கொள்கை வழி நின்று தீர்வுகளைச் சொன்னவர் அருட்செல்வர். ஒரு […]

Read more

மறைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள்

மறைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள், மா.பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், பக். 186, விலை 100ரூ. பண்டைய அமைப்பு முறையை விமர்சன பார்வையுடன் விவரித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனைகளின் களமாக உள்ளது. பண்டைய இந்தியாவில் பவுத்த சிந்தனையின் தாக்கம், மறைக்கப்பட்ட சம்பவங்களை, வரலாற்றின் ஊடாக தேடி, உண்மையை அறிய முயலும் நுால். அரிய தகவல்களை தேடிக் கண்டு, பொருத்தமாக கட்டுரைகளில் சேர்த்துள்ளார். விழிப்புணர்வு செய்திகளுடன், ஆய்வு ரீதியாக தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. கருத்துக்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. அரிச் சந்திரன் கதையில் புனைவை நீக்க முயற்சிக்கிறார். […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 372, விலை 400ரூ. முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். – த.பாலாஜி நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030004.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம், அதிசயக் கோவில் அங்கோர் வாட், அமுதன், தினத்தந்தி பதிப்பகம், பக்.272, விலை ரூ.150. கம்போடியா நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடியா நாட்டில் உள்ள பல கோயில்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. கம்போடியா நாட்டு வரலாற்றையும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இருந்த தொடர் புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்போடியா நாட்டின் மன்னராக பல்லவநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் வாட் கோயிலுக்கும் காஞ்சிபுரத்தில் […]

Read more

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 140, விலை 120ரூ. வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், 8/12/19 […]

Read more

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து,

உன்னத வாழ்க்கைக்கு… தன்னிலை உயர்த்து, இரா.திருநாவுக்கரசு; இரண்டு பாகங்கள்; குமரன் பதிப்பகம், ஒவ்வொரு பாகமும் பக்.168, விலை ரூ.150. தினமணி இளைஞர்மணியில் தொடராக வெளிவந்த 52 கட்டுரைகளின் நூல் வடிவம். ஒருவர் தன்னையறிந்தால், தன் திறமைகளை, ஆற்றலை அறிந்தால் வாழ்வில் உயர முடியும். மனிதன் உடம்பால் ஆனவன். அவனுக்கு மனம் இருக்கிறது. எண்ணங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன. வாழ்வில் முன்னேற திட்டமிட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டும். கட்டுபாட்டோடு இருக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும். […]

Read more

என்றும் காந்தி

என்றும் காந்தி, ஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250 சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.‘ நன்றி: தமிழ் இந்து, 21-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய், ஆர்.சொபாரிவாலா, தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, விலை: ரூ.399 ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. […]

Read more
1 3 4 5 6 7 88