தமிழிலக்கணக் கோட்பாடுகள்

தமிழிலக்கணக் கோட்பாடுகள் (விரிவாக்கப் பதிப்பு), பொன்.கோதண்டராமன் (பொற்கோ), பூம்பொழில் வெளியீடு,  பக்.124, விலை ரூ.120. உலகிலேயே எழுத்து வடிவில் தோன்றிய முதல் இலக்கண நூல் என்கிற சிறப்பு தொல்காப்பியத்துக்கு இருப்பதைப் போலவே, தொல்காப்பியருக்கென்று ஒரு கொள்கையும் இருக்கிறது. அதுதான் தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கை. “அந்த இலக்கணக் கொள்கையைப் பின்னால் வந்த எந்த இலக்கணக்காரரும் புரிந்து கொண்டதாகத்தெரியவில்லை. தமிழர்கள் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய பொருள்தான் தொல்காப்பியர் உணர்த்தும் இலக்கணக் கொள்கை’ என்கிறார் நூலாசிரியர் பொற்கோ. கல்லூரி நிகழ்ச்சிகளில், கருத்தரங்குகளில் பேசிய உரையின் தொகுப்பாக அமைந்துள்ளது […]

Read more

போராடக் கற்றுக்கொள்

போராடக் கற்றுக்கொள், முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப., விஜயா பதிப்பகம், விலை 200ரூ. உலகில் நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் நான் என்கிற ஆஸ்கர் வைல்டின் கூற்றுடன் தொடங்குகிறது உன்னை அறிந்துகொள்வது எப்படி என்கிற கட்டுரை. இது ஆன்மிகத் தேடலுக்கான கட்டுரை அல்ல. தன்னை அறிவதற்காக 12 வழிகளைப் பட்டியலிட்டு விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். இவற்றைக் கடைபிடித்தால் நம்மை உயர்த்துகிற வழிகள். உதாரணத்துக்கு காலையில் ஆறுமணிக்கு எழுகிறவர் ஐந்து மணிக்கே எழுவது, உடற்பயிற்சி செய்யாதவர் தினமும் ஒரு மணி நேரம் செய்தல், மாதந்தோறும் […]

Read more

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள், (பெண் தொன்மம் குறித்த ஆய்வுகள்), பெ. நிர்மலா, பல்கலைப் பதிப்பகம், விலை: ரூ.140. ‘பல்வேறு வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு உன்னதமான வையாகவும் முன்மாதிரிகளாகவும் காட்டப்படும் காலத்துக்கு ஒவ்வாத ஆண், பெண் பற்றிய புனைவுக் கற்பனைகளை அடையாளம் காட்டுகின்றன இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், சிற்பங்கள், புராணங்கள், வழிபாட்டு மரபுகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் காணப்படுகிற பால் வேற்றுமைப் பதிவுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள், நாம் வாழும் ஆணாதிக்கச் சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. நன்றி: தமிழ் […]

Read more

திறனாய்வியல்

திறனாய்வியல், ச. சிவகாமி, மாதவி பதிப்பகம், விலைரூ.100. திறனாய்வு செய்வது எப்படி என்ற வினாவிற்கு ஏற்ற விடையாய், வருங்காலத் திறனாய்வாளருக்கும் வாசல் திறக்கிறது. ஆய்வுக் கட்டுரை ஆக்கம் என்னும் முன்னுரையாய் அமைந்த முதல் கட்டுரை, திட்டமிடல், செயல்படல், முழுமையாக்கல் எனத் திறனாய்வுக் கட்டுரை எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறது. பொருண்மைச் சிந்தனை என்ற கட்டுரை, எவ்வகைப் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை முன்வைக்கிறது. திருவுந்தியார் என்னும் கட்டுரை, சைவ இலக்கியத்தை -சைவ சித்தாந்தத்தை ஆய்கிறது. நாட்டுப்புறவியலின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற […]

Read more

ஒப்பு நோக்கில் காந்தியடிகள்

ஒப்பு நோக்கில் காந்தியடிகள் – மார்க்ஸிலிருந்து வள்ளலார் வரை, கா.செல்லப்பன்,  எழிலினி பதிப்பகம், விலை: ரூ.180. உலகப் பேரறிஞர்களுடன் காந்தியை ஒப்பீடு செய்து பேராசிரியர் கா.செல்லப்பன் எழுதியுள்ள இந்நூல் முக்கியமானது. காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் போதாமைகளை இந்நூல் தகர்க்கும். ‘தனது வாழ்க்கையே ஒரு சத்திய வேட்கை. தம் வாழ்க்கையே சத்தியத்தின் பரிசோதனைக் களம் எனக் கருதியதால், தமது சுயசரிதையை ‘சத்திய சோதனை’ என்று காந்தி குறிப்பிட்டார். ‘புத்தரும் மகாவீரரும் ஏசுவும் அஹிம்சையைப் போதித்தனர். ஆனால், காந்திஜிதான் அதை அரசியலில் பயன்படுத்தி வெற்றியும் கண்டார்’ […]

Read more

துரிஞ்சிலாற்றின் பயணம்

துரிஞ்சிலாற்றின் பயணம், க.ஜெய்சங்கர், நறுமுகை, பக்.208, விலை ரூ.190. நதிக்கரை நாகரிகங்கள் என்றாலே நமக்கு காவிரி, கங்கை, யமுனை என்றுதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சிறிய நதிகளும் பெரும் கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை “துரிஞ்சிலாற்றின் பயணம்’ நூல் பறைசாற்றுகிறது. கவுத்தி வேடியப்பன் மலையில் தொடங்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் துரிஞ்சில் ஆறு வெறும் 65 கிலோ மீட்டர்தான், ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் 55 ஊர்களில் – அங்குள்ள மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது. இதில், தமிழ் மக்களின் நீர் […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்,  வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்,திருப்புகழ்ச் சங்கமம்,  பக்.464,  விலை ரூ.396. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன், இறைவியைப் போற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமிழகத்துக் கோயில்கள் மட்டுமல்லாது, திருவேங் கடம், காஷ்மீர், காசி, இமயமலை போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் தீட்சிதர். இவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை. இந்நூலில் தீட்சிதர் 66 தலங்களில் பாடிய […]

Read more

தமிழ் நாட்டுப்புறவியல்

தமிழ் நாட்டுப்புறவியல், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.250. நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பை ஆய்வு நோக்கில் வழங்கும் நுால். தேவராட்டத்தை நடத்துவோர், நடத்தப்படும் ஊர்கள், ஆட்ட முறை என்று ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துகிறது. தேவராட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் உருமி மேளத்தைத் தேவதுந்துபி என்று மாற்றுப்பெயர் கொண்டு குறிப்பிடுவதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுப்புறவியலை மானுடவியல் சிந்தனையுடன் இணைத்து உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கிறது. நாட்டுப்புறவியலில் புதிய அணுகுமுறையாக உள்ளது. உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை, தமிழ் வாசகர்களுக்கு எளிய நடையில் மொழிபெயர்த்து தந்துள்ளார். நாட்டுப்புறவியலில் […]

Read more

தமிழ் இலக்கியத்தின் வரலாறு

தமிழ் இலக்கியத்தின் வரலாறு, பால.இரமணி, ஏகம் பதிப்பகம், பக்.184, விலை  ரூ.150. தமிழ் இலக்கியத்தின் வரலாறு குறித்து இதிலுள்ள எட்டு கட்டுரைகளும் அழுத்தமாகவும், ஆழமாகவும், சுருக்கமாகவும் செவ்விலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சொல்லிச் செல்கின்றன. “தமிழில் இதுவரை பல இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இலக்கியத்தின் வரலாறு உரைக்கும் முதல் நூல், முன்னோடி நூல் இது ஒன்றுதான்’ என்று வ.நாராயண நம்பி பதிவு செய்துள்ளது போலவே, 184 பக்கங்களில் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை மிகமிக எளிமையாக எடுத்துரைக்கும் நூல் இதுவாகத்தான் இருக்கும். காப்பியம், […]

Read more

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?, இராம்குமார் சிங்காரம், தாய் வெளியீடு, விலை:ரூ.120. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். தொழிலில் முன்னேறுவதற்கான பாதைகள் தடைபட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பல துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட இராம்குமார் சிங்காரம் எழுதியிருக்கும் ‘நீங்க இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்னும் நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொருவரும் வருமானத்தை உயர்த்தி வசதியாக வாழ்வதற்கான 25 உத்திகளைத் தரும் 25 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கைந்து பக்கங்களில் சுருக்கமாக […]

Read more
1 2 3 4 5 88