துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள், அறிவியல் வெளியீடு, விலைரூ.150. அறிவியல கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். 50 கட்டுரைகள் அடங்கியுள்ளது. மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. முதலில், உலகையே ஆளும் வைரஸ் என்ற தலைப்பில், ராமானுஜம் எழுதிய கட்டுரை உள்ளது. அடுத்து, யார் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், முனைவர் கண்ணப்பன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், உதவும் பொறியியல் நுட்பங்கள் பற்றி ஒரு கட்டுரையை டாக்டர் டில்லிபாபு எழுதியுள்ளார். இது போல் பல பொருட்களில், அறிவியல் வளர்ச்சியை […]

Read more

பழவேற்காடு வரலாறு

பழவேற்காடு வரலாறு, பழவை வீ.ராதாகிருஷ்ணன், வைகரி பால்டேனியல் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. “பழவேற்காடு’ தொடர்பாக இதுவரை யாருமே சொல்லாத வரலாற்று உண்மைகளைப் பல்வேறு சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். பழவேற்காடு ஒரு மீன்பிடித் துறைமுகம், கடற்பகுதி, ஏரி என்று மட்டும் நினைப்பவரின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறது இந்நூல். இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்பே புதுப்பொலிவு பெற்றன. தலைசிறந்த துறைமுகப்பட்டினங்களும் உருவாயின. அவற்றுள் பழவேற்காடும் ஒன்று. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “எரிதேரியன் கடற்பயணக் குறிப்புகள்’ என்ற நூலில்தான் பழவேற்காடு ஏரியைப் […]

Read more

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம், விஜய் மகேந்திரன், புலம் வெளியீடு, விலை: ரூ.150. தமிழ் சினிமா இசையை சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை, திரைப்பயணம் குறித்த அறியப்படாத, சுவாரஸ்யமான, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களால் நிரம்பியுள்ளது ‘ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ நூல். தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த திலீப்பாக இருந்த காலம்தொட்டு, ரஹ்மானை ஒரு ரசிகராகப் பின்தொடர்ந்துவரும் விஜய் மகேந்திரன், ரசனையைத் தாண்டி ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய சமநிலை நோக்குடன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். […]

Read more

ஊழியர்கள் வேலை வழக்குகள்

ஊழியர்கள் வேலை வழக்குகள், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், கதிஜாஜி புத்தகம் வெளியீடு குழு, விலை 80ரூ. ஊழியர்களின் வேலையில் ஏற்படும் பிரச்சனை தொடர்பான வழக்குகள், அவற்றின் தீர்ப்புகள் ஆகியவற்றைக் கூறும் இந்த நூல், சமூக அக்கறை உள்ள பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. காணாமல் போன பெண்ணை தேடுவதில் அக்கறை கொள்ளாத காவலர்கள், உணவுப்பொருளில் கலப்படம், தொலைக்காட்சித் தொடர் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றையும் எடுத்துக் கூறப்பட்டு இருக்கின்றன. தொழிற்சங்கம் உருவான வரலாறு, புரட்சி எண்ணம் கொண்ட 19 தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவையும் இந்த நூலில் தர […]

Read more

விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும்,  மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு, முரண்களரி படைப்பகம், பக்.128, விலை ரூ.150. இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையும், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவும் எழுதிய கட்டுரைகள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரையின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு இந்நூல். உலகில் பல நாடுகள் நிலா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோதிலும், நிலாவில் தண்ணீர் உள்ளது என்பதைக் கண்டறிந்து சாதனை படைத்தது சந்திரயான் -1. அது கண்டறிந்ததை உறுதிப்படுத்த மேற்கொண்ட அடுத்த பயணம்தான் சந்திரயான் -2. அதன் பயணத்தின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இவற்றை […]

Read more

என் வானம் என் பூமி

என் வானம் என் பூமி, சுப.சோமசுந்தரம், காவ்யா, விலைரூ.110. கட்டுரை, சிறுகதை, மரபு, புதுமை என அனைத்துக் கலவையாக திகழ்கிறது இந்நுால். முதலாவது பகுப்பான என் பூமி சொற்பொழிவுடன் துவங்குகிறது. இதில் சில சிறுகதைகளாகவும், சில கட்டுரைகளாகவும் உள்ளன. இரண்டாம் பகுப்பான என் வானம், தொ.பரமசிவம், வள்ளுவம், தொல்காப்பியம் என இலக்கிய, இலக்கணத்தைப் பேசுகின்றன. இயல்பான நடை, மொழிப்பற்று, ஜாதி பேதமற்ற போக்கு இவை தனித்தன்மைகளாக வெளிப்படுகின்றன. இலக்கியக் கருத்துகளிலும் நகைச்சுவை கலந்து சுவைக்கச் செய்துள்ளது, ‘தும்மல்’ பற்றிய கட்டுரை. கண்ணகி மூட்டிய தீயையும், […]

Read more

ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு

ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், பக்.180, விலைரூ.180; கரோனா தீநுண்மியின் தோற்றம், பரவுதல், பாதிப்பு குறித்த நூலாசிரியருடைய கருத்துகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரபலங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. பொதுவாகவே சீன அரசைப் பொறுத்தவரை மனித உயிர்கள் புல்லுக்குச் சமம். இதில் அந்நாட்டினுடைய குடிமக்களும் அடக்கம் என்று சீனாவைப் பற்றி கூறும் நூலாசிரியர், ஊஹான் ஆய்வகத்தில் உணவு போட்டு வளர்த்து, பின் உலகம் முழுவதும் கலாட்டா பண்ணச் சொல்லி சீனாக்காரன் ஏவிவிட்ட கூட்டமான்னு சீனாக்காரனுக்கும் அந்த […]

Read more

படேல் நேரு

படேல் நேரு – விடுதலை நெருப்பும் எதிரெதிர் துடுப்பும், மீனாட்சி புத்தக நிலையம், ஜெகாதா, பக். 288, விலை ரூ. 250. சுதந்திரத்திற்கு முன்பும்பின்பும் நேருவும் படேலும்எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்ததையும், படேல், நேரு இருவரின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்றுதலையும், நம்பிக்கையையும் விவரித்துக் கூறும் நூல். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் படேல்-நேருவிடையே வேறுபட்ட கருத்துகள் இருந்தன. முதலாளித்துவ சமூகம் பயனுள்ளது என்பதில் படேல் உறுதியாக இருந்தார். புதிய சோஷலிச உலகம் என்ற நேருவின் கனவை படேல் நிராகரித்தார். நாட்டு […]

Read more

தமிழ் சமஸ்கிருதம் உறவு

தமிழ் சமஸ்கிருதம் உறவு, தி.முருகரத்தினம், வீரா.அழகிரிசாமி, க.மணிவாசகம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், விலை 200ரூ. தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே உள்ள உறவு தொடர்பாக ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுமன்ற கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் அரங்கேற்றிய கட்டுரைகளில் 10 கட்டுரைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இந்த நூலில் பிரசுரிக்கப்ட்டுள்ளன. ஒவ்வொரு அறிஞரும், தமிழ் மற்றும் திராவிடத்தின் தாக்கம் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சமஸ்கிருதம் எந்த வகையிலும் தமிழில் பாதிப்புச் செய்யவில்லை என்பதையும், தமிழ் இலக்கணம், வடமொழி இலக்கணத்திற்குக் காலத்தால் முந்தியது என்பதையும், மொழிகளுக்கெல்லாம் முதல்மொழி சமஸ்கிருதம் […]

Read more

சான்றோர்கள் வாழ்வில்

சான்றோர்கள் வாழ்வில், பாவலர் மலரடியான், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.60 அரசியல்வாதிகள், ஆன்மிக அறிஞர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திய கருத்துக்கள் நிறைந்த நுால். காந்தி முதல் கண்ணதாசன் வரை, அறிஞர்களின் நகைச்சுவைகள் விரவிக் கிடக்கின்றன. நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் தாயிடம், உங்கள் மகன் நிலவில் கால் பதித்த நிகழ்ச்சி மகிழ்ச்சி தந்ததா என்று நிருபர் கேட்டார். தாயின் பதில் நெகிழ்ச்சி தருகிறது. உயர்ந்தது தாய் மனம். – சீத்தலைச் சாத்தன் நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 2 3 4 5 6 88