மேடையிலே வீசிய பூங்காற்று

மேடையிலே வீசிய பூங்காற்று, இரா.இராமமூர்த்தி, வசந்த ஸ்ரீ பதிப்பகம், பக். 142, விலை 140ரூ. உலக உயிர்கள் உய்யத் தாமே ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமானின் அழகிய தோற்றத்தை நுவல்கிறது, ‘கண்ணி கார்நறுங் கொன்றை!’ மேலும், ‘சுடுசொல் சொல்லேல்’ எனும் சிறுகதையில், பிறரை மட்டந்தட்டி பேசுவதிலும் நயத்தக்க நாகரிகம் வேண்டும் என்பதை, அரசியல் மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் அலங்கரிக்கும் பேச்சாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் நுாலாசிரியர். ‘சுதந்திர மாண்பு, பட்டியலும் பாட்டியலும், எதிர்பாராத நிகழ்ச்சி, மெய்யும் பொய்யும், வாழை இலை, திருட்டுச் சாப்பாடு, கோட்டில் […]

Read more

பரிசுக் கதைகள் பதினெட்டு

பரிசுக் கதைகள் பதினெட்டு,  சோ.சுப்புராஜ், சக்தி வேலம்மாள் பதிப்பகம், பக்.230, விலை ரூ.150. வார,மாத இதழ்களும், இணைய இதழ்களும், தமிழ் அமைப்புகளும் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 18 சிறுகதைகளின் தொகுப்பு. எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. குடிக்க ஒரு வாய் கூட தண்ணீர் கூட தர யோசிக்கும் வறண்ட கிணறுகளைக் கொண்டது அந்த கிராமம். வயதான கணவர் தொலைதூரம் சைக்கிளில் சென்று கொண்டு வந்த தண்ணீரை, பஞ்சம் பிழைக்க வந்த கிணறு வெட்டும் சங்கையாவின் […]

Read more

குறள் இனிது! கதை இனிது!

குறள் இனிது! கதை இனிது!. இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை 200ரூ. தேர்ந்தெடுத்த நூற்றியெட்டு குறட்பாக்களுக்கு பொருத்தமான குட்டிக் குட்டி நன்னெறிக் கதைகள். ராமாயணம், மகாபாரதம் வரலாற்று நிகழ்வுகள் என்று பலவற்றோடும் தொடர்புடைய கதைகளைச் சொல்லியிருப்பது திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் அழகுபடுத்தியிருப்பதோடு, படிப்போரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது. குட்டீஸை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: குமுதம், 13/3/2019.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இராமாயணக் கதைகள்

இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது. வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் […]

Read more

நீதிக்கதைகள்

நீதிக்கதைகள், சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பக். 246, விலை 80ரூ. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து நீதிக் கதைகள் நான்காம் தொகுப்பை எழுதியிருக்கிறார், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர். எத்தனையோ நீதிக் கதைகளை படித்திருந்தாலும், இதில் உள்ள நீதிக் கதைகளை படிக்கும் போது, நமக்கு அந்தளவுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது உறுதி. நீதிக் கதைகள் ஒவ்வொன்றையும் படிக்க அலுப்பு தட்டாத வகையில் தொகுத்து தந்துள்ளார். மகாபலிக்கு மகாலட்சுமி கட்டிய ரக் ஷை கயிறு, திருவிளையாடற்புராணத்தில் வரகுண பாண்டியனின் […]

Read more

பேசும் பரம்பொருள் – பகுதி-2

பேசும் பரம்பொருள் – பகுதி-2, சுதா சேஷய்யன், வானதி பதிப்பகம், பக். 480; ரூ.350 ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார். இதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை […]

Read more

பதிலிகள்

பதிலிகள், மணிநாத், காவ்யா, பக். 140, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனை, மனித நேயம், அடித்தட்டு மக்களிடம் அக்கறை, நேர்த்தியான படைப்பாக்கம் கொண்ட பதிலிகள் எனும் இந்நூலானது, லவகுசா பாலம், அவலம், நீர்க்கோடுகள், பசி, உறுத்தல் உள்ளிட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலில் உள்ள சிறுகதைகள், செம்மலர், தாமரை, வண்ணக்கதிர், கல்கி, மக்கள் வீதி, கணையாழி உள்ளிட்ட இதழ்களில் ஏற்கனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026541.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வானொலிக் கதைகள்

வானொலிக் கதைகள், தளவை மா.சவுந்தரராசன், அருள்மொழி பிரசுரம், பக். 320, விலை 220ரூ. இலங்கை சர்வதேச வானொலியில், ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒலிபரப்பாகிய, ‘வெற்றிப்பாதை’ நிகழ்ச்சியில் வாசிப்பட்டு, நேயர்களின் வரவேற்பை பெற்றது. அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீதின் குரல்வளத்தில் வாசிக்கப்பட்ட இந்த சிறுகதைகள், இப்போது வாசகர்களின் பார்வைக்கு நூலாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர்,6/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027124.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சொல்லித் தருவது இல்லை

சொல்லித் தருவது இல்லை, சீத்தலைச் சாத்தன், ஒப்பிலான் பதிப்பகம், விலை 120ரூ. ஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள். முதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகளில் பல கதைகள் உள்ளன. நன்றி: தினமலர், 3/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 17 18 19 20 21 80