ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும்

ஒன்பது ஆட்தின்னிகளும், ஒரு போக்கிரி யானையும் , கென்னத் ஆண்டர்சன், தமிழில்:கமலநாத் , பாரதி புத்தகாலயம், விலை 210ரூ. வேட்டை இலக்கியம் என அறியப்படும் பிரிவில் தேசிய அளவில் ஜிம் கார்பெட் புகழ்பெற்றவர். வட இந்தியாவுக்கு ஜிம் கார்பெட் என்றால் தென்னகத்துக்கு கென்னத் ஆண்டர்சன். இவருடைய ஆங்கில நூல்கள் மிகக் குறைவாகவே மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ள நிலையில், இப்புத்தகம் தமிழில் வெளியாகியுள்ளது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027156.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? (சிறு கதைகள்)- உமா பார்வதி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.144, விலை ரூ.160. பல்வேறு நாளிதழ்களில், மாத இதழ்களில் வெளியான 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கதைகளும் கதைக் கருவில் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. அம்மாவோடு நாளைக் கழிக்க ஆசைப்படும் பத்து வயது சிறுவன் சஞ்சுவின் ஏக்கம் ஒருபுறம்; ஒரே மகனின் ஏக்கத்தையும், தனிமையையும் போக்க நினைத்தாலும், அலுவலகத்தில் கெடுபிடி, ஆடிட்டிங் என்று நீண்ட தூரம் மின்சார ரயிலில் பயணம் செய்து, மனமும் உடலும் சோர்ந்து […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம், விலை 1000ரூ. எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மகத்தான பணிகளுள் ஒன்று இந்தத் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த 100 சிறுகதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இது. அங்கிருந்து புதிதாகப் பல எழுத்தாளர்களைக் கண்டடைவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

போர்ஹெஸ் கதைகள்

போர்ஹெஸ் கதைகள், தமிழில் பிரம்மராஜன், யாவரும் வெளியீடு, விலை 550ரூ. 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிய எழுத்தாளர்களில் ஒருவரான போர்ஹெஸ், உலகம் முழுக்க எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்தவர். தன் வாழ்நாளில் நாவலே எழுதாத இவர் லத்தீன் அமெரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். ஐநூறு பக்க நாவல் தரும் பிரம்மாண்டத்தையும் திகைப்பையும் தனது சிறுகதைகளில் உருவாக்கிவிடக் கூடியவர். அனுபவங்கள், தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறு எல்லாமும் ஒரு புனைவுதானோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய போர்ஹெஸின் சிறந்த கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தமிழின் […]

Read more

கண்ணன் கதை

கண்ணன் கதை, ருக்மணிசேஷசாயி, சாயி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. நவீன மொபைல் போன் மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகள், நம் நாட்டு இதிகாசங்களின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதிலும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை, ‘பகவத் கீதை’ என்ற பாடமாக நமக்கு தந்தவர் கிருஷ்ணர். இந்த நுாலில் இடம்பெறும் கிருஷ்ணரின் அவதாரத்தின் இளம் பருவ வரலாற்றை, சிறுவர்கள் […]

Read more

மனசுக்குள் மாயவலை

மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, விலை 90ரூ. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத வித்தியாசமான கோணங்களில் இருபத்தேழு சிறுகதைகள். வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கிற, கேட்கிற, சந்திக்கிற சம்பவங்களே கதைக்களமாகவும் யதார்த்தமே கதைகளின் கருவாகவும் இருப்பது, படிப்பதற்கான சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. நன்றி: குமுதம், 21/11/18 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

கள்ளிவட்டம்

கள்ளிவட்டம், பா.சரவணகுமரன், போதிவனம், விலை 100ரூ. கீழத்தஞ்சை:மண்ணும் மனங்களும் நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள். மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.604, விலைரூ.600; வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன. வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி […]

Read more

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன், பக். 100, விலை 99ரூ. குழந்தைகளுக்கான கதைகள் என்று தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் தான் இந்த கதைகள் உள்ளன. பல கதைகளில் குழந்தைகளுக்கு தக்க அறிவுரை மற்றும் ஆலோசனையும், பல கதைகளில் நாம் அறிந்திராத தகவல்களும் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மொழியிலிருந்து ரஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்த கதைகளை, ஆங்கிலவழி தமிழில் தந்திருக்கிறார் ஊடகவியலாளர் பாண்டியராஜன். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலில் பல நுால்கள் வெளிவந்தாலும், இந்நுால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறது. குழந்தைகள் […]

Read more

வெற்றி வித்துக்கள்

வெற்றி வித்துக்கள், நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக்.146, விலை ரூ.100. நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன. அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ, அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான […]

Read more
1 18 19 20 21 22 80