மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம்

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம், தொகுப்பு ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப்பிரியன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. சதை தின்னும் கழுகுகள் மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த நேரத்தில் சின்னச் சின்ன சந்துகளிலும் மறைவிடங்களிலும் பூட்டிய அறைகளுக்குள்ளும் பாலியல் தொழிலிடங்களிலும், உறவினர்களாலும் நண்பர்களாலும் காமுகர்களாலும் எத்தனையெத்தனை உடல்கள் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ. பெண்களின் […]

Read more

என்னத்தச் சொல்ல…,

என்னத்தச் சொல்ல…, செ.சரவணா, ஜெயலக்ஷ்மி எண்டர்பிரைஸஸ், விலை 110ரூ. கிராமப்புறங்களில் ஒவ்வொரு மனிதரையும் ஓர் அடையாளமோ அடைமொழியோ சொல்லித்தான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட மண்மணம் கமழும் சாதாரண மனிதர்கள் எட்டுப்பேரின் அடைமொழிக்கான காரணக் கதைகள். கற்பனை என்றாலும் நிஜம்போல் நகர்கிறது கதை. அதற்குப் பக்கபலம் சேர்க்கிறது நெல்லை தமிழ் நடை. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஏழாம் நம்பர் வீடு

  ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்), சுப்ரஜா, வாதினி, விலை 499ரூ. யதார்த்த வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நாற்பத்திரண்டு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் சின்னச் சின்னதாக சட்டென்று நகர்ந்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு சீக்கிரம் மனதைவிட்டு நகராது என்பது நிஜம்! நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027247.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

வேத வாழ்வில் பெண் குரல்

வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115. வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன. வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் […]

Read more

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி, தமிழில்: சசிகலா பாபு, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. […]

Read more

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார், அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 250ரூ. அன்புவழி அழகிய பெரியவன் 2011 வரை எழுதிய மொத்த கதைகளையும் தொகுத்து ‘அழகிய பெரியவன் கதைகள்’ வெளியான பிறகு, நீண்ட இடைவெளி கழித்து இப்போது புதிய கதைகளோடு இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. பொருளாதாரீதியில் பின்தங்கியும், கூடவே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியும் இருக்கும் குடும்பங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே துளிர்க்கும் அன்பைக் கோடிட்டுக் காட்டும் விதமாக இருக்கின்றன இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். இளம் தலைமுறையின் பாகுபாடற்ற மனப்பாங்கை வெளிப்படுத்தும் கதைகளோ மனிதத்தை விதைக்கின்றன. நன்றி: […]

Read more

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி, ப்ராணா, கௌதம் பதிப்பகம், விலை 66ரூ. சின்னச் சின்னதாய் பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு. சாதாரண மக்களின் வாழ்வியலோடு நகரும் கதைகள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவிபிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. இந்நுாலில், 50 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள், கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற பாணியிலான கதைகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியருக்கு, எழுத்துலகில் நட்பு வட்டாரம் அதிகம் என்பதை, தன் ஒவ்வொரு கதைக்கும், ஒரு பிரபலத்திடம் முன்னுரை கேட்டு, அதை பயன்படுத்தியிருக்கிறார். ரா.கி.ரங்கராஜன் முதல், இயக்குனர் ராஜு முருகன் வரை, கதைக்கு முன்னுரை தந்துள்ளனர். ‘சாவி வார இதழில், எட்டு ஆண்டுகளில், 150 சிறுகதைகள் […]

Read more

சிதறு தேங்காய்

சிதறு தேங்காய்,  வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.112, விலை ரூ.80. ‘குமுதம்‘ வார இதழில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய குறுங்கதைகளின் தொகுப்புதான் ‘சிதறு தேங்காய்‘. மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்கசப்புகளுக்கு கதைகள் மூலம் தீர்வு வழங்குகிறது இந்த நூல். கதைகள் யாவும் இதுவரை அதிகம் கேள்விப்படாதவை என்பதுதான் சிறப்பு. சில கதைகள் நூலாசிரியரின் அனுபவ கதைகள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. சொல்லப்படாத சில கதைகளில் ஒன்று, ராமாயணத்தில் சீதை மட்டும் தீக்குளிக்கவில்லை;கற்பை நிரூபிக்க லட்சுமணனும் தீக்குளித்தான் என்பதுதான். மராத்திய ராமாயணமான பவர்த் ராமாயணத்தில் […]

Read more

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1, தமிழில்: மதுமிதா,சாகித்திய அகாதெமி, பக்.496, விலை ரூ.365. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 34 தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறுகதைகளின் மாந்தர்களை நீங்கள் உங்கள் வீட்டருகே, தெருவில், கடைவீதியில், பொது இடங்களில் சந்திக்கலாம். ஆதரவற்றவர்கள், அனாதைக் குழந்தைகள், ஒருவேளை உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள், அவர்களின் உளவியல்ரீதியிலான சிக்கல்கள் எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். எனினும் இக்கதைகளின் ஊடே மனிதநேயமும், பிறருக்காக வாழ்தலும் பிரதானப்படுத்தப்படுகிறது. கிணறு தோண்டியவன் எப்போதோ இறந்து போயிருக்கலாம். ஆனால் அவன் இன்னும் தாகம் கொண்ட வழிப்போக்கர்களுக்கு உயிரளித்துக் […]

Read more
1 20 21 22 23 24 80