தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை, சு. சீனிவாசன், அறிவில் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, பக். 264, விலை 250ரூ. இன்றைய சூழலில் கணினி நம் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆயினும் தமிழ்வழிக் கல்வி கற்ற ஒருவர் கணினிகளை எங்ஙனம் இயக்க இயலும் என்பதும், மொழி குறித்த ஆய்வுக்கு கணினி எவ்வகையில் துணைபுரியும் என்பதும் நீண்ட நாள்களாக நிலவிவரும் ஐயங்களாக இருக்கின்றன. இந்தப் பொருண்மையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிக […]

Read more

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம், (தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்), சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக். 160, விலை 120ரூ. இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் (ஙஅட) வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை […]

Read more

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார், இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர்

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர், தொகுப்பாசிரியர் ஜெ. சுவாமிநாதன், பக். 221, விலை 70ரூ. பெண்களுக்கு காலங்காலமாக அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, ஆசிரியர் இந்த நூலில் விளக்குகிறார்.‘தாய்மை’ என்பது பண்பையும், பாசத்தையும், ஒழுக்கத்தையும் தருவது என்ற விளக்கமும் உள்ளது. ராமபிரான் கானகம் சென்ற பின்னால், புயலுக்கு பின், அமைதியானவர் கைகேயி  என்றும், அவர் செய்த ஏற்க முடியாத செயலாக, மாங்கல்யத்தை கழற்றி எறிந்ததை புராணக் கருத்துக்களில் ஆசிரியர் விளக்குகிறார். அதே போல ராமாயணத்தில் திருப்புமுனைப் பாத்திரமாக, ‘கூனி’ வர்ணிக்கப்படுகிறார். இளமையிலே விதவையான சூர்ப்பனகை, ‘எதிர்நிலைப்பாத்திரம்’ என்று விளக்கி, […]

Read more

அறிவியலுக்கு அப்பால்

அறிவியலுக்கு அப்பால், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. நம்மைச் சுற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கே சவால் விடுபவை அவை. அவற்றில் சிலவற்றை அலசி, அவற்றை மூடத்தனம் என்று ஒதுக்காமல், அதில் உள்ள உண்மைத்தன்மையை தேட வைக்கும் முயற்சி இந்நூல். இசை ஞானமே இல்லாத ரோஸ்மேரி பிரவுன் – இசைமேதைகளின் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது கம்போசிஷன்களில் இசைத்தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்படுவதை முன்கூட்டியே […]

Read more

சங்ககால மறவர்

சங்ககால மறவர், செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 640, விலை 400ரூ. சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளை சிற்றரசர், குறுநிலைத் தலைவர் குடிகள், சிறுகுடிகள், பதினெண்குடிகள் என வகைப்படுத்தியுள்ளனர். இவர்களைப் பற்றி சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்ககால மறவர்களின் போர் ஒழுக்கங்களையும், போர் முறைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் எடுத்துரைப்பதற்காகவே இயற்றப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூல். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இலக்கியங்களில் உள்ள சங்ககால மறவர் பற்றிய செய்திகளே இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன. பெருங்கற்காலச் சமுதாயம் […]

Read more

சொல் புதிது பொருள் புதிது

சொல் புதிது பொருள் புதிது, ம. இராஜேந்திரன், கவிதா பதிப்பகம், பக். 224, விலை 170ரூ. நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன். ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பொருள்; அந்தப் பொருளையுணர்த்தும் தமிழ்ச் சொற்கள். அவை இலக்கியத்திலும் மக்கள் வழக்கிலும் எங்கெங்கெல்லாம் பயின்று வந்திருக்கின்றன; அவற்றில் மிகவும் […]

Read more

ஆயிரம் தெய்வங்கள்

ஆயிரம் தெய்வங்கள், ஆர்.எஸ்.நாராயணன், யூனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், பக். 136, விலை 100ரூ, ஒரே தெய்வக் கோட்பாட்டைக் கொண்ட மற்ற மதங்களில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைவிட, ஆயிரம் தெய்வங்களைக் கும்பிடும் இந்தியாவில் – இந்து மதத்தில் வன்மை குறைவுதான். அதனால்தான் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது என்பதை ஒப்பீட்டு ஆய்வின் மூலம் விளக்கும் நூல். மதத்தையும் பக்தியையும் வித்தியாசமான கோணத்தில் அளவிட்டுள்ளார் இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன். நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா, தமிழில் அ.கி. வேங்கட சுப்பிரமணியம், இயல்வாகை வெளியீடு, பக். 160, விலை 200ரூ. நிலைத்த பொருளாதாரம் என்னும் முற்போக்கு சிந்தனை நூல்,ஜே.சி.குமரப்பாவின் சிறைப்படைப்பு. இயந்திர மயமாதல், முதலாளித்துவம், உலக மயமாதல் என்னும் செயல்பாடுகள் வேகமாக பரவிய போது, அதை கேள்விகளுக்கு உட்படுத்தி, அதன் எதிர்கால தாக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பன்மயம் என்பது மாறி, ஒருமயமாகும் போது ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து, காந்தியின், கிராம பொருளாதாரத்தின் நன்மைகளையும் அலசுகிறது. இக்காலத்திற்கு அவசியமான நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more
1 29 30 31 32 33 84