சந்நியாசமும் தீண்டாமையும்

சந்நியாசமும் தீண்டாமையும், ராமாநுஜம், பரிசல், பக்.225, விலை 200ரூ. விரிவான ஆய்வையும், அதனூடாக பல்வேறு விவாதங்களையும் கோரி, நிற்க கூடிய அளவிற்கு ஆழமானது சாதி எனும் சொல்லாடல். நிலை கொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்குமுறைகள் பற்றி சமூக அறிவியலாகவும், அரசியலாகவும் விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் இயங்கி வருவதை போன்று சாதியம் பற்றி தமிழில் கோட்பாட்டு ரீதியான பார்வை சட்டகத்தை அறிமுகப்படுத்தி விவாதிக்க முனைகிறது இந்நூல். அம்பேத்கர் போன்று சாதியை, கோட்பாட்டு ரீதியாக சிந்தித்திராத நம் சூழலில் சாதியம் பற்றி முற்றிலும் வேறொரு வாசிப்பிலிருந்து […]

Read more

குறிச்சி

குறிச்சி, காமராசு, காவ்யா,  பக். 244, விலை ரூ. 240. வரலாறு என்றாலே ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதுதான். நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் பின்னணியிலும் வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்த தகவல் பெட்டகமாக இந்த நூல் வெளியாகி உள்ளது. அத்ரி மலையில் உருவான கங்கை, நெல்லையப்பர் கோயிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மணி, மணல் மூடிய மணல் மாதா ஆலயம், திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள மரச்சிற்பங்கள், பொதிகை மலையில் சித்தர்கள் பயன்படுத்திய […]

Read more

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை, க.வெங்கடேசன், வர்த்தமானன் பதிப்பகம், பக்.534, விலை ரூ.425. தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த பலருக்கும் – அவர்கள் வாழுமிடம் பற்றிய தகவல்கள் கூட தெரியாமல் இருக்கும் இக்காலத்தில், இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பு வரலாறு சங்க காலத்திலிருந்து இன்று வரை கால வரிசையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசாங்கம், அது செயல்படும்விதம், பல்வேறு துறைகள், அவை இயங்கும் முறைகள், மாவட்ட, ஊராட்சி நிர்வாகங்களின் அமைப்புமுறை, அவை செயல்படும்விதம், கிராம நிர்வாக அலுவரில் இருந்து […]

Read more

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு, ஜோ.சம்பத் குமார், நெய்தல் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130. “பிரான்சில் ஒயிட் எல்லீஸ்‘’ தமிழ் ஒலிக்கேற்ப தன் பெயரை “எல்லீசன்‘’ என்று மாற்றிக் கொண்டவர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவர், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறைத் துணைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மசூலிப்பட்டின மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்டிரேட், நிலத்தீர்வை ஆட்சியர், சென்னை ஆட்சியர் முதலிய பல உயர் பதவிகளை வகித்தவர். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்தவர். திருக்குறள் மேல் கொண்ட விருப்பத்தால், திருவள்ளுவரின் […]

Read more

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிக்கர், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ, இந்துக்களின் வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் எவ்விதம் பரிணமித்தன என்பதை விளக்கமாக விவரிக்கிறது இந்நூல். இந்துக்கள் ஒரு தனித்த மதத்தின் பகுதி தாங்கள் என்ற ஒரு வலுவான உணர்வைப் பிற மதங்கள் புகும் வரை உருவாக்கிக் கொள்ளவில்லை. பிறகு தான் தங்களை அவர்கள் வரையறுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வட்டாரம், மொழி, ஜாதி, தொழில், இனம் ஆகியவற்றால் அவர்களின் அடையாளங்கள் துண்டுபட்டிருந்தன. மேலும், உயர் ஜாதி […]

Read more

மின்னல் பூக்கள்,

மின்னல் பூக்கள், எஸ். ஆழிவண்ணன், வெண்பா யாழினி பதிப்பகம், விலை 180ரூ. மரபு கவிதைகளின் தொகுப்பு. சமூக அக்கறையுடன் எழுதப்பட்டு உள்ளது. வேண்டாம் வரதட்சணை, ஒன்றே குலம், சாலியிலே சங்கடங்கள், நலனைக் கெடுக்கின்ற நாகரிகங்கள், ஓ காதலர்காள் உள்ளிட்ட ஏராளமான கவிதைகள் சிந்தனையை தூண்டுகின்றன. எதுகை மோனையை நயமாக பயன்படுத்தி கவிதைகளுக்கு மெருகேற்றி இருக்கிறார் நூலாசிரியர்.‘ நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   கல்லைக்குறிச்சி கோட்ட நடுகற்கள் வரலாறு, சித்திரைச் செல்வி பதிப்பகம். கள்ளக்குறிச்சி என்று அழைக்கப்படும் கல்லைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கல்வராயன் […]

Read more

திருக்குறளில் உயிர்ச்சூழல்

திருக்குறளில் உயிர்ச்சூழல், க.சி. அகமுடைநம்பி, மீனாட்சி புத்தக நிலையம், பக். 217, விலை 160ரூ. அற நூலாகிய திருக்குறளில் ‘உயிர்ச்சூழல்’ பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதை வெளியில் கொண்டு வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்குறள் ஆய்வுலகில் இது புதிய முயற்சியும்கூட. அனைத்து உயிர்களும் தத்தம் சூழல்கள் கெடாமல் அல்லது கெடுக்கப்படாமல், இயல்பான முறையில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற சூழலையே ‘உயிர்ச்சூழல்’ என்று வரையறுக்கிறார் பதிப்பாசிரியர். புதிய ஆய்வுக் களத்தை திறந்து வைத்திருக்கும் நூல். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள் தமிழ் மண் தமிழர் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், பக் 348, விலை 350ரூ. தொல்லியல், கல்வெட்டு ஆராய்ச்சியாளரான நூலாசிரியர், தனது 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பில் தமிழ் மண், தமிழர், தமிழ் வரலாறு தொன்மைக்காலம் முதல் கி.பி. 1947-ஆம் ஆண்டு வரையில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் தொன்மைகளை அகழ்வாய்வு, கல்வெட்டு, மொழியாய்வு வல்லுநர்களின் கருத்துகளைக் கொண்டு விவரிக்கிறார் நூலாசிரியர். தமிழ் மன்னர்களைப் பற்றியும், அவர்களது உணர்வுகள் குறித்தும் “நந்திக்கலம்பகம்’‘ நூலின் மூலம் […]

Read more

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது. மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது. […]

Read more

பெரிய புராணத்தில் வாழ்வியல்

பெரிய புராணத்தில் வாழ்வியல், பேராசிரியர் சாமி.தியாகராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 280, விலை 190ரூ. எதிர்கால இளைஞர்கள் பெரியபுராணத்தைப் படிக்கவும், கேட்கவும், பேசவும், பின்பற்றவும் ஏற்ற வகையில், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில், ஆய்வு நோக்கில் இந்த நூல் உள்ளது. பக்தியும் தொண்டும் வாழ்வை எவ்வாறு உயர்த்தும் என்பதை இந்த நூலில் மிகவும் அழகாக அறிஞர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ளார். பதினொன்றாம் திருமுறைகள் என்னும் அருள் பெட்டகத்தைத் திறக்கும் தங்கச் சாவியாக, 12ம் திருமுறை ஆகிய பெரிய புராணம் உள்ளதை மிக அழகாக விளக்கியுள்ளார். ‘தொண்டின் தூய்மை’யில் […]

Read more
1 30 31 32 33 34 84