தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள், சண்முகானந்தம் செயக்குமார், எதிர் வெளியீடு, விலை 500ரூ. பறவைகளுக்கும் தமிழ் மண்ணுக்குமான உறவு நெடியது, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்கூட. இந்த உறவை சங்கப் பாடல்கள் தொடங்கி தற்போதுவரை காணலாம். தமிழகத்தில் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. அவற்றைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள், அவை சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகவும் படங்களுடனும் உருவாகியிருக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம். மகாகவி பாரதியார் பற்றி நீண்ட கட்டுரையாக எழுதுவதைவிட பாரதியார் பற்றி 100 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக பாரதியாரின் புகழைப்பாடி இருக்கும் இந்த நூல், நல்ல தகவல்களைத் தந்து இருப்பதுடன் படிக்க சுவையாக உள்ளது. பலவிமான பாடல்களைப் பாடிய பாரதியார், தாலாட்டுப் பாடல் மட்டும் பாடாதது ஏன்? பாரதியார பாடலைக் கேட்டபடி உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர் யார்? சக்திதாசன் என்ற புனைபெயரை பாரதியார் வைத்துக்கொண்டது ஏனு- […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. ஆன்மிகம், கவிதை, உரைநடை, பயணக் கட்டுரை என்பது போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் வெளியான நூல்களில் முப்பது நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் தராதரத்தைப் பார்த்து மெச்சுவது போல, ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரை வழங்கி அவற்றையே தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கும் முயற்சி புதுமையானதும் பாராட்டத்தக்கதும் ஆகும். ஒவ்வொரு நூலிலும் உள்ள சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவை தொடர்பான மேற்கோள்களைப் பிற நூல்களில் இருந்தும் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்தும் தேடிப்பிடித்து அவற்றைப் பொருத்தமாக வழங்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த […]

Read more

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள்

மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (இருபது தொகுதிகள்), பதிப்பாசிரியர் ந.முத்துமோகன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 5000ரூ- பொருள்முதல்வாதத்துக்கும் சமதர்மக் கொள்கைக்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் கொடுத்தவர்கள் மார்க்ஸும் எங்கெல்ஸும். ஆனால், அவர்களின் எழுத்துகளை விளக்கக் குறிப்புகள் இல்லாமல் ஆரம்பநிலை வாசகர்களால் உட்செரிக்க இயலாது. அதனால்தான், இன்றும் மார்க்ஸியத்துக்கு ஏகப்பட்ட அறிமுக நூல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. மார்க்ஸிய மூலவர்களின் நூல்களை வாசிப்பது அதற்கு அடுத்தக் கட்டம். மாஸ்கோவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம் 1989-ல் மார்க்ஸ், எங்கெல்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்டது. அத்தொகுதிகளை விரிவுபடுத்தியும் […]

Read more

மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள், பெ.சுபாசு சந்திரபோசு, அன்னம், பக்.240, விலை ரூ.200. தத்துவஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என 25 ஆளுமைகள் ஆற்றிய மகத்தான பேருரைகளின் தொகுப்பு இந்நூல். இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள். அது எனக்குப் பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும் இது கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்து 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவின் வீர […]

Read more

பிரமிளும் விசிறி சாமியாரும்

பிரமிளும் விசிறி சாமியாரும், அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. ‘பிரமிளும் விசிறிச் சாமியாரும்’ என்ற பெயரைப் பெரிய திட்டத்துடன் அழகியசிங்கர் வைத்திருக்க முடியாது. பிரமிள், தமிழில் சில ஆயிரம் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவர். விசிறிச் சாமியாரோ மிகவும் பிரபலம். தனக்கு ஆதர்ச குருவான விசிறி சாமியாரைப் பார்ப்பதற்காக அழகியசிங்கரையும் பிரமிள் கூட்டிச்சென்றது பற்றி இப்புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. மற்றவை எல்லாம் பிரமிள் என்ற தமிழின் பெரும் ஆளுமையான கவிஞனின் தினசரித் தன்மைகளை, கோபதாபங்களை, அல்லல்களை, கொண்டிருந்த நம்பிக்கைகளை விவரிப்பதாக உள்ளது. ஒரு […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்,  தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம்,  பக்.693, விலை ரூ.600. அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல […]

Read more

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு(தமிழ் பதிப்பு வரலாற்று ஆவணம்) – பதிப்பாசிரியர் கா.அய்யப்பன்; காவ்யா, பக்.626. விலை ரூ.600. ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது வாழ்த்துரை, பதிப்புரை, முன்னுரை, ஆராய்ச்சியுரை போன்றவை இருப்பது சிறப்பு. இவை அனைத்தும் இல்லை என்றாலும், பதிப்புரை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த வகையில், தமிழ் மொழியில் உள்ள செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, இன்னா நாற்பது, ஆசாரக்கோவை, கைந்நிலை முதலிய நூல்களுக்குப் பதிப்புரை, மதிப்புரை, முகவுரை எழுதிய தமிழறிஞர்களின் பதிவுளைத் தொகுத்துரைக்கிறது இந்நூல். கு.சுந்தரமூர்த்தியின் ஆராய்ச்சி முன்னுரையில் […]

Read more

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி, பேராசிரியர் அ.கா.பெருமாள், காவ்யா, பக். 140, விலை 150ரூ, ஆராய்ச்சி, பதிப்பு எனும் இரு துறைகளிலும் தன் வாழ்வை முழுவதும் செலவிட்ட எஸ்.வையாபுரி, 21 நுால்களை வெளியிட்டுள்ளார்; 45 நுால்களை பதிப்பித்துள்ளார். வையாபுரிப் பிள்ளையைப் பற்றி எழுதியோர் எல்லாருமே, அவருக்குத் தமிழகத்தில் இருந்த எதிர்ப்பை, எழுதாமல் விட்டதில்லை என்று கூறும் ஆசிரியர், ‘எஸ்.வி., வடமொழி உட்பட, பல மொழிகள் அறிந்தவர். ‘தமிழ் ஆய்வுக்குத் தேவையான மேலான பின்னணி உடையவர். தமிழ் மொழியின் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பும், நேசமும் அவரது […]

Read more

நானும் என் தமிழ் எழுத்தும்

நானும் என் தமிழ் எழுத்தும், ஆசிரியர் தீபம் எஸ். திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 130ரூ. தமிழறிஞர்கள், இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள், கவிஞர்கள் போன்றவர்கள் தங்கள் எழுத்து அனுபவங்களை, தீபம் இலக்கிய மாத இதழில் பதிவு செய்துள்ளனர். அந்த கருத்துக்களின் 10-வது தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. வில்லிசை கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள், மகன் மற்றும் எழுத்தாளர்களான தமிழ் ஞான குரு, கவுதம நீலாம்பரன், கீரனூர் ராமமூர்த்தி உள்பட 26 பிரபலங்களின் எழுத்து அனுபவங்கள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 8 9 10 11 12 63