இதழியல் இலக்கியம் ஆகுமா

இதழியல் இலக்கியம் ஆகுமா?, இளசை எஸ்.எஸ்.கணேசன், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 75ரூ. வாழ்க்கையில் ஒன்றிணைந்த பத்திரிகைகள் தோன்றிய வரலாறு மட்டுமல்லாமல் வளர்ந்த விதம், சந்தித்த பிரச்சினைகள், தற்போதைய நிலையை புள்ளி விவரத்தோடு ஆசிரியர் தந்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் பத்திரிகைகள் ஆற்றிய பணிகளையும், சுதந்திரத்திற்கு பிறகு உருவான பிராந்திய மொழி பத்திரிகைகள் பற்றியும் விவரித்த விதம் சிறப்பு. உலகமய அரசியலில் ஊடகங்கள் என்ற தலைப்பில் உலக, இந்திய அரசியலில் ஊடகங்கள் செய்த மாற்றங்களும் நாட்டின் முதல் பத்திரிகையாளர் ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிகையாளர்களின் […]

Read more

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை, மு.ஏழுமலை, காவ்யா பதிப்பகம், விலை 120ரூ. நகைச்சுவை உணர்வு என்பது பிற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை வாய்ந்த பண்பாகும். இலக்கிய படைப்புகளிலும் இவ்வுணர்வு கலைத்தன்மையோடு வெளிப்படுவதை காணமுடிகிறது. அப்படி பாரதியாரின் கவிதைகளில் பொதிந்திருககும் நகைச்சுவையை எடுத்துரைக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027187.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

எழுத்தும் நடையும்

எழுத்தும் நடையும், சி.மணி, தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.240, விலைரூ.200. சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்ற சிறுபத்திரிகை மூலம் அறிமுகமான பல கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. அவர் எழுதிய சில கவிதைகள், ஒரு சிறுகதை, ஒரு நெடுங்கதை, ஒரு நாடகம், சில கட்டுரைகள், அவரது நேர்காணல் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத சில கவிதைகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவரது புகழ்பெற்ற கவிதையான "நரகம்' கவிதை புதுக்கவிதை உலகில் ஒரு மைல்கல் என்று அப்போது புகழப்பட்டது. அது இந்நூலில் இடம் […]

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல்வேந்தராகப் பலரும் அறிந்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பல்வேறு நிலையான ஆளுமைத் தன்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கும் வகையில், அவரது படைப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைச் சேர்த்துக் கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் நூல். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

யானைகளின் வருகை

யானைகளின் வருகை, கா.சு.வேலாயுதன், இந்து தமிழ் திசை பதிப்பகம், விலை 180ரூ. எதிர் திகை ஓட்டம் யானைகளின் மீது தான் கொண்டிருக்நத காதலின் பொருட்டு கடந்த இருபது ஆண்டுகளாக யானைகள் குறித்தும் இயற்கைக்கு மனிதன் செய்த சேதாரங்கள் குறித்தும் தொடர்ந்து அவதானித்துவருபவர் கா.சு.வேலாயுதன். அவரது அனுபவங்களும் அவதானிப்புகளும் ‘யானைகளின் வருகை’ எனும் தொகுப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளைப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம் ஓர் உலகளாவிய பார்வையை முன்வைக்கிறார். வெறுமனே தகவல்களாக, அனுபவப் பகிர்வாக இல்லாமல் தனது நுட்பமான பார்வையின் மூலம் […]

Read more

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ. பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் […]

Read more

திறந்த புத்தகம்

திறந்த புத்தகம், அழகியசிங்கர், விருட்சம், பக்.211,  விலை ரூ.170. அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல்லாண்டுகள் ஒரு சிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகிறார். மொத்தம் ஐம்பது பதிவுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் […]

Read more

துளிப்பா: நூறாண்டுகளில்

துளிப்பா: நூறாண்டுகளில்,  தொகுப்பாசிரியர்: இரா. சம்பத்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.200. ஜப்பானில் தோன்றிய குட்டிக் கவிதை வடிவமான ஹைக்கூ குறித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ஹைக்கூ பற்றி ஜப்பானிய கவிதை என்ற கட்டுரை மூலம் 1916-இல் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார். அதிலிருந்து ஒரு நூற்றாண்டுப் பயணம் என்கிற வகையில் இந்தத் தொகுப்பின் பெயர் அமைந்துள்ளது. இறையைப் பாடுவது, இயற்கையைப் பாடுவது, மனிதனைப் பாடுவது என்று எழுத்தில் எல்லாவற்றையும் கையாண்டு வந்துள்ளதை வரலாறு பூராவும் காணலாம். செய்யுள் வடிவிலே எழுதப்பட்டால்தான் எழுத்து […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர்,  அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.104, விலை ரூ.85. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களும், உமர்கய்யாம், ஆசிய ஜோதி போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், பல வாழ்த்துப் பாக்களும், சில குழந்தைப் பாடல்களுமே. ஆனால், அவர் தமிழறிஞர்கள் குறித்தும், புலவர்கள் குறித்தும், தேசியம் குறித்தும், இசை-நாடகம் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வு குறித்து மட்டும் தமிழில் எட்டு நூல்களும், […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள், கோபால் மாரிமுத்து, ஐ.ஆர்.பி.எஸ், மணிமேகலைப்பிரசுரம், விலை 350ரூ. 40 இந்தியர்கள், குறிப்பாக சுதந்திரப்போராட்ட வீரர்கள் அரசியல்வாதிகளின் பேச்சுகள் மற்றும் வெளிநாட்டினரின் சிறப்பான, உத்வேகம் அளிக்கிற பேச்சின் தொகுப்புத்தான் இந்த புத்தகம். உரை ஆற்றியவர்களைப் பற்றிய குறிப்பு, அவர்கள் உரை ஆற்றிய தருணம் வரை தரப்பட்டு உள்ளது. மொழி பெயர்ப்பினை நேர்த்தியாக, பொருள் சிதையாமல் செய்வதே ஒரு கலை. அதை நூலாசிரியர் நிறைவாக செய்து இருக்கிறார். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சுதந்திர போராட்டத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளை, […]

Read more
1 10 11 12 13 14 63