சலூன்

சலூன், க.வீரபாண்டியன், யாவரும் பதிப்பகம், விலை 140ரூ. முடி திருத்துவதற்காக வெளிநாடொன்றில் கடை தேடி அலைவதில் தொடங்கி பால்ய காலத்தில் சந்தித்த நாவிதர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதாக அமைந்திருக்கிறது க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல். நான்கு வேறு வேறு இடங்களில் நாயகனுக்கு அறிமுகமான நாவிதர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை, முடி திருத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிபுணத்துவம், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என விவரித்துச் செல்கிறது. நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் பெரும் வியாபாரமாகிப்போன மாடர்ன் சலூன்களுக்கும், வாழ்க்கைப்பாட்டுக்காகத் தொழில் செய்பவர்களுக்கும் இடையேயான போட்டியும், சமூகக் கண்ணோட்டங்களும் நாவலில் […]

Read more

காவிரியின் செல்வன்

காவிரியின் செல்வன், தேசிக மணிவண்ணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில், தேசிக மணிவண்ணன் படைத்துள்ள காவிரியின் செல்வன் என்ற சரித்திர நாவலின் கதாநாயகன், சோழ மன்னர்களில் ஒருவரான கோச் செங்கட்சோழன் ஆவார். கி.பி. 101 முதல் கி.பி. 200 வரை நடைபெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவலில், அப்போது வாழ்ந்த மன்னர் பரம்பரையுடன் சில கற்பனை கதாபாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நாவல் முழுவதும் காதல், வீரம், போர் என்று சரித்திர நாவலுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் […]

Read more

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்),  கருவூர் கன்னல், குறள்வீடு, பக்.200, விலை ரூ.150. ஒட்டக்கூத்தன் தான் படித்த கல்லூரியில் துணைமுதல்வராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் இருந்த கிருட்டிணன் நம்பூதிரியுடன் நட்பு கொள்கிறான். அது கடைசி வரை நீடிக்கிறது. கரூவூர் கன்னல் எழுதிய "முள்ளிவாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய' புதினம் கிருட்டிணன் நம்பூதிரியை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோரை விமான விபத்தொன்றில் கிருட்டிணன் நம்பூதிரி இழந்துவிடுகிறார். நண்பரின் சிபாரிசின் பேரில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறார். கூடவே ஒட்டக்கூத்தனும் செல்கிறான். கிருட்டிணன்நம்பூதிரி இலாசு […]

Read more

சத்திய வெள்ளம்

சத்திய வெள்ளம், நா.பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 384, விலை 250ரூ. சில நூல்கள் பொழுது போக்குவதற்கு மட்டும் பயன்படும். சில நூல்கள் நம் சிந்தனையைத் தூண்டி அறிவு பெற உதவும். சில நூல்கள் சில காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சில நூல்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். சத்திய வெள்ளம் என்ற இந்நூல் எக்காலத்திற்கும் பயன்படும் நூலாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவ மாணவியரின் மன உணர்ச்சிகளையும் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலின் சில முத்தான கருத்துக்களைப் படித்தாலே நூலின் பெருமை […]

Read more

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ், மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மை இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம் வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம் தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் மூன்று பெண்களின் […]

Read more

அஞ்ஞாதா த மெமேோய்ர்ஸ் ஆஃப் திப்புஸ் அன்னோன் கமாண்டர்

அஞ்ஞாதா த மெமேோய்ர்ஸ் ஆஃப் திப்புஸ் அன்னோன் கமாண்டர், கிருஷ்ணமுர்த்தி ஹனூரு, ஆங்கிலத்தில் எல்.எஸ்.சங்கர் ஸ்வாமி, பீ புக்ஸ், விலை 325ரூ. படைவீரனின் வாழ்க்கை அரசன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் வீரனின் எண்ண அலைகள் எப்படியிருக்கும்? தொலைதூர கிராமங்களில் வாய்மொழியாக உலவும் செய்திகளின் பின்னால் உள்ள வாழ்க்கையை, அதன் சோகத்தை, தவிப்பை, ஆற்றாமையைக் கவித்துவமாக வெளிப்படுத்தும் கன்னட நாவல் இது. ஹைதர் அலி – திப்பு சுல்தான் காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்த போராட்டம் எத்தகைய வீரர்களை உருவாக்கியது என்பதைச் […]

Read more

சிலைத் திருடன்

சிலைத் திருடன், எஸ்.விஜயகுமார், தமிழில் பி.ஆர்.மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 240, விலை 250ரூ. நம் கண் முன் நடந்துகொண்டிருக்கும், ஒரு குற்றச் செயலாக சிலைத்திருடன் நாவல், விறுவிறுப்பாக நகர்கிறது. இந்தியாவின், பழம்பெருமை பேசும் சிலைகள், மாயமாவதும், அவை உலக அருங்காட்சியங்களில் பளபள ஒளியில் மிளிர்வதும், அதைப் பற்றிய குறைந்தபட்ச வருத்தம் கூட இல்லாமல் நாம் இருப்பதும் எப்படி. இதைத்தான் சிலைத்திருடன் உரைக்கிறான். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939491.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன், அழசிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 150ரூ. கதையாகத் தனியே ஒன்றும் இல்லாமல், நாவலாசிரியரே கதையில் உலாவி, தன் பார்வையிலேயே எல்லா நிகழ்வுகளையும் விவரிப்பதான, வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். தொடங்கும் இடம் முடியும் இடம் என்று எதுவுமே இல்லாததால், எங்கேயும் தொடங்கிப் படிக்கலாம். இடம் பெற்றுள்ளவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. பாத்திரங்களாக வருவோர் எல்லோரும் நிஜ மனிதர்களே. இருந்தாலும் யாருக்குமே உறுத்தல் வராதபடி நகர்கின்றன நிகழ்வுகள். ஆங்கில நாவல்களைப் போல தன் முனைவு நடையில் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான […]

Read more

உலகத்துச் சிறந்த நாவல்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்), க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், பக்.368, விலை ரூ.250. உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும் என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து […]

Read more

அக்னி நதி

அக்னி நதி, குல் அதுல்ஜன் ஹைதர், தமிழில் சௌரி, என்.பி.டி. வெளியீடு. ‘அக்னி நதி’யை வாசித்துவிட்டு அந்நாவலில் வரும் கதாபாத்திரமான கௌதம நீலாம்பரனாகத் தன்னை நினைத்துக்கொண்டுத் திரிந்தவர்கள் ஏராளம் பேர். இந்த நாவல், உருது இலக்கியத்துக்குப் புதிய பாணியை அளித்தது. தலைசிறந்த நாவலாசிரியாக ஹைதர் கருதப்பட்டதற்கு இந்நாவலின் படைப்பாற்றல் மிக முக்கியமான காரணம். பல காலமாகப் பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’. நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 12 13 14 15 16 66