நீலகண்டப் பறவையைத் தேடி

நீலகண்டப் பறவையைத் தேடி, அதீன் பந்த்யோபாத்யாய, தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, என்.பி.டி.வெளியீடு, இதுவரை பழக்கப்பட்ட வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறு தளத்துக்கு அழைத்துச்செல்லும் நாவல் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’. எல்லாவற்றிலும் வேகத்தைத் தேடும் மனதைக் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசிக்கச்சொல்லும் இந்நாவலில் இயற்கை ஒரு பாத்திரம்போல வலம்வருகிறது. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ரம்மியமான மனநிலைக்கு இட்டுப்போகும் இந்நாவலை உங்கள் கட்டாய வாசிப்புப் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தீயில் எரிந்த உண்மைகள்

தீயில் எரிந்த உண்மைகள், கே.எஸ்.சந்திரசேகரன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாவல் இது. பதவி மோகம் கொண்ட ஒரு செல்வந்தர் தனது 2 பேரன்களில் ஒருவனை தமிழ் நாட்டின் முதல் – அமைச்சராகவும், மற்றொருவனை கர்நாடக முதல் – அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி மத்திய அரசை கைப்பற்ற எண்ணுகிறார். மிகப்பெரிய சினிமா இயக்குனராக வேண்டும் என்பதற்கா திருமணம் முடிக்காமல் குடும்பத்தை உதறிதள்ளும் சிந்துஜா சினிமாத்துயில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் வகையில் பெண்களுக்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதை […]

Read more

புதுவெள்ளம்

புதுவெள்ளம், அகிலன், தாகம் பதிப்பகம், விலை 500ரூ. இந்திய விடுதலையை வெறும் ஆட்சிமாற்றமாகத்தான் பலரும் பார்ப்பது உண்டு. காரணம் இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரத்துக்கு பின்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழைகள் பரம ஏழைகளாகவும், செல்வந்தர்கள் பெரும் பணக்காரர்களாகவும்தான் மாறி வருகின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இந்த நூல். 1962ம் ஆண்டில் கல்வி இதழில் தொடர்கதையாக வெளியான இந்த கதை, தற்போது நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 3 பாகமாக எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில், நாடு விடுதலைக்குப்பின் இந்திய சமூகத்தில் […]

Read more

எனது சிறிய யுத்தம்

எனது சிறிய யுத்தம், லூயிஸ் பால் பூன், தமிழில் பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. உலகப் போரைப் பேசும் நாவல்! போர்க்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பேசும் இலக்கியப் படைப்புகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டபோது அவை வாசகர்களிடையே வரவேற்பை இழந்திருந்தன. நிச்சயமற்ற அடுத்த நொடியைப் பரிதவிப்போடு எதிர்கொள்ளும் சாமான்யர்கள், ஒவ்வொருநாளும் எதிர்கொண்ட நெருங்கிய உறவுகளைக் குண்டுகள் சிதைத்த உடல்களாகக் கண்கொண்டு காண நேரும் அவலம், குழந்தைகளின் ஓலம் என போர்க்காலங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் இன்னதுதான் நிரம்பியிருக்கும் என்று போர் இலக்கியங்கள் குறித்த […]

Read more

போதி தர்மா

போதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவண கார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ. ஏவாளான காந்தியின் கதை கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]

Read more

ஒருத்தி இன்னொருத்தி

ஒருத்தி இன்னொருத்தி, சுப்ரஜா, வாதினி பதிப்பகம், விலை 599ரூ. அறுசுவைபோல ஆறு வித்தியாசமான நாவல்களின் ஒருங்கிணைப்பு. அன்றாடம் சந்திக்கும் நபர்களே கதையின் கதாநாயகர்களாக இருப்பதும், அடுத்த வீட்டு விஷயத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போன்ற எழுத்து நடையும் நாவலை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. படித்து முடித்ததும் நாவலாகத் தோன்றாமல் கண் எதிரே கண்டவையான பிரமை ஏற்படுத்துவது நிச்சயம். நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027344.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

குடியேற்றம்

குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக்.237,விலைரூ.275. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரானின் ஆறாவது நாவல் இது. வரலாற்றின் கரிய பக்கங்களையும், அதனூடே இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் வலிகளையும் அச்சாரமாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக மரைக்காயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் நாவலின் கரு. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வாழ்ந்த மூத்த குடிகளான மரைக்காயர்கள் மீது […]

Read more

பேட்டை

பேட்டை, தமிழ்ப்பிரியா, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பக். 352, விலை 390ரூ. கடந்த, 1735ம் ஆண்டு வாக்கில் மதராஸ் ராஜதானியின், 14வது கவர்னர், ‘மாடர்ன் பிட்’ என்பவரது முயற்சியால் பல நெசவாளர் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, சென்னை யில் இப்போது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் குடியமர்த்தப்பட்டன. இந்த நெசவாளர்கள், ‘காலிகோ பிராண்ட்’ வகை துணிகளை கலை நேர்த்தியுடன் நெசவு செய்து தயாரிப்பதில் நிபுணர்கள். இந்தத் துணிக்கு அப்போது லண்டன் மாநகரில் ஏக டிமாண்டு. இந்த நெசவாளர்கள் முதலில் சின்ன சின்ன தறிகளை […]

Read more
1 13 14 15 16 17 66