வாராணசி

வாராணசி, பா.வெங்கடேசன், காலச்சுவடு, விலை 225ரூ. இந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வைதீகம் வரும். ‘வாராணசி’ நாவல் வழியாக தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையைக் கட்டிக்கொண்டிருக்கிறார் வெங்கடேசன். தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, […]

Read more

இணைந்த மனம்

இணைந்த மனம், மிருதுலா கர்க், தமிழில்: க்ருஷாங்கினி, வெளியீடு: சாகித்ய அகாடமி, விலை: ரூ.395 மூன்று பெண்களின் கதை சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்தி, ஆங்கில எழுத்தாளர் மிருதுலா கர்க், இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றி இந்தியில் எழுதிய ‘மிலிஜூல் மன்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர், சிறுகதையாளர் க்ருஷாங்கினி இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார். 1950-களில் பிறந்த குல்மோஹர், மோக்ரா ஆகிய சகோதரிகளையும் அவர்களது தோழியையும் சுற்றி நடக்கும் கதை இது. மாறும் […]

Read more

நடுகல்

நடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன், உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், பக். 248, விலை 180ரூ. சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி தான் அருண்மொழி என்னும் ராஜராஜன். சோழப் பேரரசை ஆதித்த கரிகாலன் ஐந்து ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள்ளாகவே எவரும் தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றது இவரின் பெருஞ்சிறப்பு. அவர் காலத்தில் அவருக்கு நிகரான வீரனே கிடையாது என்பதைச் சொல்வதாக இருக்கிறது. மாவீரனான ஆதித்த […]

Read more

சுளுந்தீ

சுளுந்தீ, இரா.முத்துநாகு, ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.450 நெருப்பும், சக்கரமும் மனித குல நாகரிக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளிகள். நெருப்பைப் பூவுலகுக்குத் திருடிக்கொண்டு வந்துசேர்த்த பிரமிதியாக்கைக் கடவுளாகக் கொண்டாடியது கிரேக்க மரபு. கைக்குள் அடங்கும் தீப்பெட்டியிலிருந்து அது புறப்பட்டு, பிறகு ஒளிரும் மின்சாரமாகப் பரவிவிட்ட பின்னர், இன்றைய சூழலில் நெருப்பு பிரமிக்கத்தக்க வஸ்து அல்ல. ஒருகாலத்தில் எண்ணெய்த் துணி கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டி, வெளிச்சம் கொடுத்தது. தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்னரே ‘சுளுந்து’ என்ற மரம் வெளிச்சம் தந்துள்ளது. சுடரும் நெருப்பான சுளுந்தீயைக் கொண்டு […]

Read more

வாடாமல்லி

வாடாமல்லி, சு.சமுத்திரம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 280ரூ. அமரர் ஆதித்தனாரின் இலக்கிய விருது பெற்ற இந்த நாவலின் கரு, மற்ற எழுத்தாளர்கள் கையாளத் தயங்கும் அரவாணிகள் பற்றியது ஆகும். அரவாணிகள் பலரை நேரில் சந்தித்து, அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்த ஆசிரியர், அவற்றின் மூலம் அரவாணிகள் தொடர்பான அத்தனை அம்சங்களையும் இந்த நூலில் தந்து இருக்கிறார். ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறிய சுயம்புவின் மன உளைச்சல்கள், சமுதாயத்தில் அவர் எதிர்கொண்ட அடி, உதைகள், அவமானங்கள் எல்லாம், வேதனை தோய்ந்த வார்த்தைகளில், கண்களில் கண்ணீர் […]

Read more

பாவை விளக்கு

பாவை விளக்கு, அகிலன், தாகம் வெளியீடு, விலை 400ரூ. புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலன் படைத்தவற்றில் தனிச்சிறப்பு பெற்ற நாவல், பாவை விளக்கு. எழுத்தாளர் தணிகாசலம், அவர் சந்தித்த செங்கமலம், உணர்ச்சிப் பிழம்பாக அமைந்த உமா, தணிகாசலத்தின் மனைவி கவுரி, உமாவின் தந்தை சந்திரசேகரன் போன்ற கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்தைக் கொண்டு விறுவிறுப்பாக பின்னப்பட்ட இந்த நாவல், யதார்த்தமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதால், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தணிகாசலத்துக்கும் உமாக்கும் இடையே நடைபெறும் மனதளவிலான போராட்டம் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. முழு நீள […]

Read more

நடுகல்

நடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]

Read more

ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் நாகலட்சுமி சண்முகம், சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பாலோ கொயலோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலை ‘ரசவாதி’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ஆடு மேய்க்கும் சிறுவன் சான்டியாகோ, ஒரு புதையலைத் தேடி பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணமாக விரிகிறது இந்நாவல். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. என்ன காரணம்? சகுனம், கனவுகள், எதேச்சை போன்ற நாம் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயங்களை சான்டியாகோ தன் வெற்றிக்கான வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறான். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது; சுவாரசியமற்ற […]

Read more

விடிவதற்கு சற்று முன்னே…

விடிவதற்கு சற்று முன்னே…, ரஷ்யமூலம்: ஐவான்துர்கனேவ், தமிழில் ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.200. பொதுவாக ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தனிமனித உணர்வுகளை தேசத்தின் நலனோடு இணைப்பதாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. படைப்பாளி உருவாக்கிய பாத்திரங்களின் உணர்வுகளோடு அதை படிக்கும் வாசகன் ஒன்றிவிடும் வகையில் ரஷ்ய படைப்புகள் இருப்பதே அவற்றின் வெற்றிக்கான காரணமாகக் கூட கூறலாம். அந்தவகையில் விடிவதற்கு சற்று முன்னே என்ற இந்த நாவல் ரஷ்ய புரட்சியை மையமாக வைத்து காதல் உணர்வோடு பின்னப்பட்ட படைப்பாகும். தேச நலன் கொண்ட தலைமறைவு வாழ்க்கை வாழும் […]

Read more
1 11 12 13 14 15 66