தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள்

தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள் (பதிப்பு, கற்கைநூல், ஆளுமை, ஆவணம் சார்ந்த எட்டுக் கட்டுரைகள்), அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. வெவ்வேறு பொருள் சார்ந்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட விலாச நாடகங்கள் 19-ஆம் நூற்றாண்டில் அச்சு நாடகப் பிரதியாக இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றன. அப்போது பதிப்பிக்கப்பட்ட நளவிலாசம், சகுந்தலை விலாசம், டம்பாசாரி விலாசம் உள்ளிட்ட பல விலாச நாடகங்களின் சமூகப் பின்னணியை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். டம்பாசாரி விலாசம் போன்ற நாடகங்கள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறுகிறார். […]

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, பிரியசகி, மேன்மை வெளியீடு, விலை 120ரூ. ‘என்னுடைய அனுபவங்களையும், நான் கண்ட, என்னைப் பாதித்த பிறரது அனுபவங்களையும் சிறுகதைகளாக்கியுள்ளேன்’ என்று நூலாசிரியர் சொல்வதை நிரூபிக்கும் வண்ணமாக எழுதப்பட்ட 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நூலாசிரியர் உளவியல் சார்ந்த கல்வியாளர் என்பதால் மனவளர்ச்சி குன்றுதல், கவனச் சிதறல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட இளம்பிராயத்து குழந்தைகளுக்கான பிரச்சினைகளைச் சமூக அக்கறையோடு கையாண்டுள்ளார். சில கதைகளின் முடிவிலிருக்கும் தத்துவம் போன்ற வரிகளைத் தவிர்த்திருக்கலாம். நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஐங்குறு நாவல்கள்

ஐங்குறு நாவல்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக்.120, விலை 100ரூ. சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற குறுநாவல், ஈழத் தமிழர்களின் துயர வாழ்வை உணர்த்தி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. பல்வகை கருப்பொருட்கள், காலச்சூழல்கள், மனிதர்கள் உள்ளிட்டவை அடங்கிய வண்ணக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும், ஓல்கா பெரோவ்ஸ்கயா, ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 260, விலை 180ரூ. ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகள், காட்டில் வாழக்கூடிய புலி, ஓநாய், நரி உள்ளிட்ட கொடிய விலங்குக் குட்டிகளை வீட்டில் வளர்க்கின்றனர். அவற்றுக்கு உணவளிப்பதும், குதுாகலத்துடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் என, ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க பரவசமும், மகிழ்ச்சியும், திகிலும், துயரமும், ஆர்வமும் மாறி மாறி ஆட்கொள்வதை உணர முடிகிறது. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக்.264, விலை ரூ.200. பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டு தோன்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி தாவரம் பற்றியும், அதைப் பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் நூல் விளக்குகிறது. பட்டுப்புழு வளர்ப்பதற்கான சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக […]

Read more

பன்முகன்

பன்முகன், சந்திரா மனோகரன், காவ்யா வெளியீடு, விலை 180ரூ. கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு பணிகளோடு சிற்றிதழாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நூலாசிரியரின் 25-ஆவது நூலிது. இதிலுள்ள 24 கதைகளிலும் வரும் சாதாரண மனிதர்கள், எல்லாச் சோதனைகளிலிருந்தும் தன்னம்பிக்கையோடு மீண்டெழுந்து சாதனை மனிதர்களாக தடம் பதிக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026537.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தி இந்து, 7/4/2018.

Read more

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை, எஸ்.குருமூர்த்தி, அல்லயன்ஸ், பக். 160, விலை 120ரூ. நோட்டுத் தடை ஓர் ஆய்வு, தெருச் சண்டையான நோட்டுத் தடை விவாதம், வளைக்கப்பட்ட, 3.35 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம், நோட்டுத் தடையால் ஏற்பட்டு இருக்கும் நல்ல மாற்றங்கள், பொருளாதாரத்தை மீட்கும் மிகப்பெரிய முயற்சி உள்ளிட்டவை, ‘நிதித் துறைக்கான பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு போல’ தேசத்தையே வியப்பில் ஆழ்த்தியது. நோட்டுத் தடை சரித்திரத்தில் இடம்பெறும் பெரிய பொருளாதார புரட்சி என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026658.html இந்தப் […]

Read more

மனசுக்குள் மாயவலை

மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, பக். 128, விலை 90ரூ. எழுத்தாளர் மேஜர்தாசன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பாக இந்த நுால் வெளிவந்துள்ளது. இதை சிறுகதைகள் என சொல்வதை விட, நம் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்கள், ஏற்படும் உணர்வுகளைத் தான், சிறுகதை வடிவில் மேஜர் தாசன் தந்துள்ளார். அதிலும், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம், திருநங்கை ஒருவர் பேசுவது, மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. இன்றைய சமுதாய சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் இந்த கதைகள், படிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026598.html இந்தப் புத்தகத்தை […]

Read more

ஐந்தாம் மலை

ஐந்தாம் மலை, தமிழில் மொழிபெயர்ப்பு பேராசிரியர் ச.வின்சென்ட், அருட்செல்வர் நா.மகாலிங்கம், பக்.222, விலை 150ரூ. உலகின் செல்வாக்கு மிக்க நுாலாசிரியர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் புவுலோ கோய்லோ. இவர் எழுதிய, ‘ரசவாதி’ என்ற நுால், 81 மொழிகளில், எட்டு கோடியே முப்பது லட்சம் பிரதிகள் விற்றன. அந்த வரிசையில் அவர் எழுதிய, ‘ஐந்தாம் மலை’ என்ற நாவல், விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது. தத்துவ பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில், எளிதாக மொழிபெயர்த்து தந்துள்ள பேராசிரியர் ச.வின்சென்ட் பாராட்டுக்குரியவர். […]

Read more

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி, பக். 90, விலை 80ரூ. கணினி என்ற அறிவுச் சாதனம் இன்று, குழந்தைகளுக்கு பல விஷயங்களை விரல்நுனியில் சொடுக்கிய மறுநிமிடத்தில் அளித்து விடுகிறது; அதே வேளையில், குழந்தைகளை ஒரே இடத்தில் முடக்கி விடுகிறது. இன்றைய சமூகத்தின் தேவைகள், குழந்தைகளின் உடல்நலம் குறித்த அக்கறை, வகுப்பறை எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளின் விருப்பங்கள் போன்ற பல விஷயங்களை அனுபவத்தின் அடிப்படையில் அலசி, உண்மைகளின் தரவுகளைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது இந்நுால். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்நுால் சிறந்த […]

Read more
1 13 14 15 16 17 23