செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள்

செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள், வே.நிர்மலர் செல்வி, நெய்தல் பதிப்பகம், பக். 272, விலை 300ரூ. ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில் காலங்காலமாக வாய்மொழியில் நிலைபெற்ற இலக்கியங்களே நாட்டுப்புற இலக்கியங்கள் என அச்சாக்கம் பெற்றன. இதுவே, தனிப்பெரும் துறையாக உருப்பெற்றது. நாட்டுப்புறவியல் தொடர்பான பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற பலரது சிந்தனைகளை இந்நுால் உள்ளடக்கியுள்ளது. நுாலில் மொத்தம், 27 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பீட்டு நிலையிலானவை. இவை, செவ்விலக்கியங்களில் நாட்டுப்புறக் […]

Read more

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ. தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது. சிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, […]

Read more

உலகெனும் வகுப்பறை

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்), எஸ்.சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக்.496, விலை ரூ.400. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், திரட்டு நூல்கள், கட்டுரை நூல் என ஏறத்தாழ 90 நூல்களை எழுதிய நூலாசிரியரின் படைப்புலக அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. “சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது' என படைப்புகளின் நோக்கம் குறித்த தெளிவான புரிதலுடன், தன்னைக் கவர்ந்த பல படைப்புகளைப் பற்றி தனது கருத்துகளை தெளிவாக நூலாசிரியர் இந்நூலில் முன் வைத்திருக்கிறார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இவர் எழுதிய […]

Read more

தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்

தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார், கருவூர் கன்னல், காவ்யா, பக். 107, விலை 110ரூ. ஒரு மனிதனது சுற்றுப்புறச் சூழலே அவனது சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா.,வின் அன்றைய சூழ்நிலைகளே அவரை வடிவமைத்தன. அவர் அன்று மட்டுமன்றி, இன்றைய தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் எவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நுால் விளக்குகிறது. படிப்படியான ஐந்து பகுப்புகளில் பெரியாரைப்பற்றி முழுமையாக விளங்கச் செய்கிறது இந்நுால். பெரியாரின் நிலையும் நினைப்பும், அவர் பிறந்து வளர்ந்த சூழலுக்கேற்ப அவர் இயங்கி வந்த நிலையை எடுத்துரைக்கிறது. சிந்தனையும் செயலும் […]

Read more

காயமே இது மெய்யடா

காயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்

தென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும், தொகுப்பு: நொபோரு கராஷிமா, தமிழில்: ப.சண்முகம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம். விலை: ரூ.700 தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களின் துணையோடு ஆய்வுக்குட் படுத்தியவர் நொபோரு கராஷிமா. தமிழக வரலாற்று அறிஞர்களின் பங்களிப்போடு அவர் தொகுத்த ‘தென் இந்திய வரலாறு’ இருபதாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாற்றை நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விரிவாகப் பேசும் நூல். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூல் விஜயநகரப் பேரரசின் காலத்துடனே நிறைவுபெற்றுவிடுகிறது. சாஸ்திரிக்குப் பிறகு கிடைத்த வரலாற்று ஆதாரங்களையும் ஒப்புநோக்கி எழுதியிருப்பது […]

Read more

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…, பசு.கவுதமன், ரிவோல்ட் பதிப்பகம், விலை: ரூ.200. கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் தொடர்பான விவாதங்களில் ஏகப்பட்ட திரிபுகளும் உண்டு. அந்தச் சம்பவத்தின் பின்னுள்ள உண்மையான கள நிலவரத்தை அப்பட்டமாக முன்வைக்கும் முக்கியமான நூல்களுள் ஒன்று பசு.கவுதமன் எழுதிய ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…’ நூல். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆழி பெரிது

ஆழி பெரிது, வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல், அரவிந்தன் நீலகண்டன், பக்.367, விலை ரூ.330. இன்று வேத பாரம்பரியம் குறித்து அரசியல் சாயத்துடன் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றன; வேத காலம் என்பது எப்படி இருந்திருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் ஓரளவுக்கு விளக்கம் அளிக்கிறது. வேத கால அக்னி வளர்ப்பு, அஸ்வமேத யாகம், சரஸ்வதி நதி பற்றிய சர்ச்சை போன்றவற்றை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர். அதுபோலவே இந்திய பாரம்பரியத்தில் பெண்களுக்கு சமத்துவம் அளிக்கவில்லை […]

Read more

நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

சமூக நீதிக்கான அறப்போர்

சமூக நீதிக்கான அறப்போர், பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல்:வே.வசந்தி தேவி, சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.350. தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் இந்திய அரசின் முன்னாள் செயலாளரான வே.வசந்தி தேவி நிகழ்த்திய மிக நீண்ட உரையாடல் இது. 70 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதோடு ஒடுக்கப்பட்டோர் மீள்வதற்கான மகத்தான சிந்தனைகளையும் முன்வைக்கும் முக்கியமான நூல். நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more
1 29 30 31 32 33 88