சில கருத்துகள் சில சிந்தனைகள்

சில கருத்துகள் சில சிந்தனைகள், லட்சுமணப் பெருமாள், தடம் பதிப்பகம், பக். 216, விலை 200ரூ. அரசியல் கட்சிகளின் நுண்ணரசியல், சூழலியல் என, அவ்வப்போதைய சூழல்களைச் சார்ந்து, லட்சுமணபெருமாள், இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், ஹைட்ரோ கார்பன், லோக் ஆயுக்தாவின் மாநில உரிமை, முத்ரா வங்கி திட்டம் என, பலவற்றை புள்ளி விபரங்களுடன் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

கண்ணதாசன் 365

கண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. எளிய மனிதரும் உணர்ந்து, முணுமுணுக்கும் திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். மடைதிறந்த வெள்ளம் போல், தங்குதடையின்றி வழியும் அவர் சொற்பொழிவு. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து, உணர்ந்து வெளிப்படுத்தி, இறவாப்புகழ் படைத்தவர். அவரின் பாடல்கள், நூல்களில் இடம்பெற்ற, வாழ்விற்கு தேவையான நேர்மறை சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030094.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கவிமணி நினைவோடை

கவிமணி நினைவோடை, சுந்தர ராமசாமி, காலச்சுவடு, பக். 80, விலை 100ரூ. சுந்தர ராமசாமி, தான் பழகிய க.நா.சு., சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளைப் பற்றி, நினைவோடை என்ற பகுதியில் பகிர்ந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, நாஞ்சில் நாட்டுக்காரரான, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையைப் பற்றிய நினைவுகள், இதில் பதியப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030090.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கல்வியா? செல்வமா?

கல்வியா? செல்வமா?, உதயை மு.வீரையன்; பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.160; விலை ரூ.125. நம்நாட்டின் கல்விமுறை குறித்து தினமணி உள்பட பல்வேறு இதழ்களில் 1996 முதல் 2017 வரை வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்று நம் அரசியல் சட்டம் கூறினாலும் அவை இன்னும் எட்டப்படாத இலக்காகவே இருக்கிறது. “பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். இந்தியக் கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை […]

Read more

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக்.114, விலை 800ரூ. ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம். தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் […]

Read more

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை, எழில் ரத்னம், நிஜம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ. தொலை தொடர்பு வசதியில்லாத காலத்தில் இருபது அஞ்சல் அட்டைகள் மூலம், ‘பத்மநாபபுரம் அரண்மனை’ என்ற கடித இலக்கிய வரலாற்று ஆவணப் பனுவலை உயர்ந்த பரிணாமம் கொள்ளச் செய்த பெருமைக்குரியவர் ஆயன். இந்நுாலில், 64 மூலிகை மரங்களால் செய்யப்பட்ட அற்புதக் கட்டிலில் உறங்கிய மன்னருக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்பதை பக்கம் 13ல் சொல்லி இருப்பது, அந்த காலத்து வைத்திய முறைக்கு படிக்கல் எனலாம். – மாசிலா ராஜகுரு நன்றி: […]

Read more

மண்…மக்கள்…தெய்வங்கள்

மண்…மக்கள்…தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 185ரூ. தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர். கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். இந்நுாலில், அய்யனார், கருப்பன் […]

Read more

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (ஆய்வுக் கட்டுரைகள், இரு தொகுதிகள்), தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்,  தமிழ்த்துறை, முதல் தொகுதி-பக்.520; ரூ.500; இரண்டாவது தொகுதி- பக்.496; ரூ.500. சென்னையில் இரு நாள்கள் நடந்த அனைத்துலக தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட 140 ஆய்வுக் கட்டுரைகள் (தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட) இவ்விரு தொகுதிகளிலும் உள்ளன. இறைவன், அரசன், வள்ளல் முதலிய யாரேனும் ஒருவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையில் சுருங்கியதாக அமைவது; அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப்பற்றியதாகவும்; அறம், பொருள், […]

Read more

நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

அர்த்தமற்ற மனித மனம்

அர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ), வ.ராஜ்குமார்,கவிதா பப்ளிகேஷன், பக்.176, விலை ரூ.160. அறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட […]

Read more
1 27 28 29 30 31 88