பாரதி ஓர் ஆச்சரியம்

பாரதி ஓர் ஆச்சரியம்,  ஜெ.கமலநாதன்,  குமரன் பதிப்பகம், பக்.96, விலை ரூ.50. “பாரதி என்ற மகாகவிஞனிடம் நான் காணும் ஐந்து மிகப் பெரும் பெருமைகளை நீங்கள் உணரும்படி செய்வதே இந்நூலின் நோக்கம்” என்று கூறும் நூலாசிரியர் அந்த ஐந்து பெருமைகளைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். உரை விளக்கம் எதுவும் தேவையில்லாமல், எளிய நடையில் பாரதியார்தான் தமிழில் முதன்முதலில் கவிதை புனைந்தார்; அதற்குப் பின் அவர் மரபைப் பின்பற்றி பலரும் கவிதைகள் எழுதினர். தமிழில் புதிய போக்கு உருவாக பாரதி காரணமாக இருந்தார். இது பாரதியின் […]

Read more

சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம்,  பெ.சிதம்பரநாதன்,  பழனியப்பாபிரதர்ஸ், விலை 300ரூ. வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மாமனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவுசெய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில்மேம்பாடு, மொழிப்பிரச்னை, வெளியுறவுக்கொள்கை, உலகமயமாதல், இடஒதுக்கீடு, கல்விமறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப்பிரச்னைகள், சமூகசேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம்அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில்நுட்பத்தாலும் காந்தியக்கொள்கை வழிநின்று தீர்வுகளைச்சொன்னவர் அருட்செல்வர். ஒரு மாபெரும் மனிதனின் பன்முகங்களைச் சொல்லும் மகத்தான நுால். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029926_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும், புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 165ரூ. ஜாதக நம்பிக்கை சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. 21 எளிய தலைப்புகளாக உள்ளது. புரிந்து கொள்வது நல்லது. கிரகங்களும் ராசிகளும் போன்ற தலைப்புகள் வைத்துள்ளார். நூலில் இருந்து மனந்தான் முழுமையாக ஒருவரை நிர்வகிக்கிறது. அதன் தன்மையே வெற்றி தோல்விகளுக்கு காரணமாகிறது. வலுவான உடலமைப்பு பெற்றும், மன வலுவில்லாதவர் கோழையாக இருக்கலாம். உடல் வலு குறைந்தவர்கூட, மன வலிமையால் துணிச்சலுடன் பல காரியங்களை சாதித்து புகழும், பொருளும் குவிக்கலாம். குடும்ப […]

Read more

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம ஊராட்சியின் பணிகள் மற்றும் கடமைகள்,  வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.604. விலைரூ.520; தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்நூல் கிராம ஊராட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்து தந்திருக்கிறது.கிராம ஊராட்சிகளின் அதிகார எல்லைகள் எவை? ஊராட்சித் தலைவரின், இதர பணியாளர்களின் பணிகள் எவை? குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கிராம ஊராட்சி அமைப்பு பார்த்துக் கொள்ள வேண்டும். சாலை அமைப்பது, அதைப் பராமரிப்பது, மேம்படுத்துவது என […]

Read more

சித்தர் வழி

சித்தர் வழி, அரங்க. இராமலிங்கம், வர்த்தமானன் பதிப்பகம்,  பக்.312, விலை ரூ.200.   சித்தர் மரபு குறித்து பொதுநிலையில் பேசப்படுபவை, சித்தர் நெறியின் மெய்ப்பொருள் ரகசியங்கள் குறித்து பேசப்படுபவை, அனுபவ அறிவால் உணரக் கூடிய நூலாக திகழும் திருமந்திரம், சித்தர் நோக்கில் சைவநெறி போன்றவை குறித்த 21 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சித்தர் நெறியின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசுவதோடு, அவர்களின் பரிபாஷைகள் குறித்த தொகுப்பு, அவற்றில் ஒரு சிலவற்றுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் ஏன் பரிபாஷைகளைக் கையாண்டனர் என்பதற்கான காரணம் உள்ளிட்டவற்றை தனது […]

Read more

இளமையில் வெல்

இளமையில் வெல், செ.சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களான உருவாக்க வேண்டும். அதே வகையில் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைத்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே […]

Read more

உள்ளங்கையில் உடல் நலம்

உள்ளங்கையில் உடல் நலம்,  பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்,வானவில் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.166.   “நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்” என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது. நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, “ஒரு நாளைக்கு 9 […]

Read more

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,

சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில்,  ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக். 248, விலை 200ரூ. பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன. மாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் […]

Read more

நன்மைகளின் கருவூலம்

நன்மைகளின் கருவூலம், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், பாரதி புத்தகாலயம், விலை 150ரூ. வாழ்வில் வெற்றி பெறும் வகையில் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது? அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களை இந்த நூல் தருகிறது. வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகளை அறிவுரை போல அல்லாமல் கதையைச் சொல்லும் வித்தில் அவற்றைத் தந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் உள்ள கருத்துகள் சார்ந்த நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துக் […]

Read more
1 25 26 27 28 29 88