இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு

இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு, ஜி. பாலன், வானதி பதிப்பகம், முதல் பாகம் விலை 270ரூ, இரண்டாம் பாகம் விலை 230ரூ. “மனிதருள் மாணிக்கம்”, “நவ இந்தியாவின் சிற்பி” என்றெல்லாம் புகழ்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேரு பற்றிய அபூர்வமான புத்தகம். வரலாற்று நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் எழுதுவதில் புகழ்பெற்ற முனைவர் ஜி.பாலன் இதை எழுதியுள்ளார். செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1041 நாட்கள் சிறையில் கழித்தார், நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்று, இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னேறச் […]

Read more

வண்டமிழ் வளர்த்த வரதராசனார்

வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், விலை 120ரூ. முயற்சியின் வடிவம், முன்னேற்றத்தின் வடிவம், முத்தமிழ் வடிவம் என்றழைக்கப்படும் டாக்டர் மு. வரதராசனார் வரலாறு, வளமான தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மு.வ.வின் பன்முகத் திறங்களையெல்லாம் சுட்டிக்காட்டியும், தொட்டுக்காட்டியும், நெஞ்சில் பதித்தும் நேயப்பெருக்கு வெளிப்பட வரையப்பட்ட பன்முக நூல். நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- வரலாறு பேசும் தமிழகத்து திருக்கோயில்கள், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய அனைத்துலக […]

Read more

உறவுகள்

உறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ. ‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு! மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. […]

Read more

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பு காவ்யா சு. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 900ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், சீறாப்புராண விரிவுரையாளர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர் கவி கா.மு. ஷெரீப். இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் முதல் முறையாக முழு அளவில் நூலாக வெளி வந்துள்ளது. இதில் தமிழரின் சமயநெறி, தமிழரசு கழகம் ஏன் வந்தது? சீறாப்புராண சொற்பொழிவுகள், வள்ளல் சீதக்காதி வரலாறு, பத்ர் போரின் பின் விளைவுகள் மாதம் இருமுறை வெளியான ‘ஒளி’ தலையங்கங்கள் […]

Read more

தமிழாய்வு: தடங்களும் தளங்களும்

தமிழாய்வு: தடங்களும் தளங்களும், முனைவர் சு. தமிழ்வேலு, விலை 250ரூ. தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்குகளில், 65 தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்ட 1402 கட்டுரைகள் பற்றிய பட்டியல் (கட்டுரை ஆசிரியர், கட்டுரையின் தலைப்பு, ஆண்டு முதலிய விவரங்கள்), இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்கு பயன்படும். நன்றி: தினத்தந்தி, 23/3/2016.   —- வில்லங்கம் இல்லாமல் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது எப்படி, ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 170ரூ. மனை வாங்குதல், அதன் பிறகு பத்திரம் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற அனைத்து […]

Read more

மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

மதுவிலக்கு அரசியலும் வரலாறும், ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 150ரூ. பாயும் மது; பதுங்கும் அரசு சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல; மதுவை ஒரு முறை தொட்டுவிட்டால் சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கமும் தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது. ராஜாஜி தொடங்கி ஓமந்தூரார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ஆட்சியாளர்கள்தான் மாறினார்களே ஒழிய, மதுவின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அதன் ஒரு பகுதியாக, மதுவுக்குடிடடிபடி09கஉ எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளைக் கடக்கப்போகிறோம். இருந்தும் மதுவை […]

Read more

இது மடத்துக்குளத்து மீனு

இது மடத்துக்குளத்து மீனு, ஷாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 264, விலை 215ரூ. வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்கள் எல்லாமே பாடங்கள்தான். நம் வாழ்நாள் முபவதும் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை நிமித்தம் ஓர் இடத்திலிருந்து புலம்பெயர்ந்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்வதில், எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படிச் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பல்வேறு நிலப்பகுதிகளில் பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, தான் அடைந்த அனுபவங்களையும், கண்டடைந்த வாழ்க்கைத் தரிசனங்களையும், […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன. தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை […]

Read more

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும், க. விஜயகுமார், விஜயா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. லஞ்சம் எனும் அரக்கன் இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா? மக்களுக்க இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளது க. விஜயகுமார் எழுதியிருக்கும் ‘லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்’ என்ற இந்தப் புத்தகம். லஞ்சம் […]

Read more

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாத்துரையார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. தமிழினத்தின் இணையில்லாப் பெருமையை, பண்பாட்டை, வரலாற்றை, இலக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கிறது இந்நூல். தமிழகத்தின் நிலஇயல் பிரவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க்கிளை இனங்களும் கிளைகளும்,தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும் என 16 தலைப்புகளிலான கட்டுரைகள் உள்ளன. கி.பி. 50க்கும் – கி.பி.150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்ட மூவேந்தர்களையும், அவர்களில் கரிகாற்பெருவளவன், கிள்ளிவளவன், நெடுஞ்செழியன், பெருஞ்சேரல் இரும்பொறை உள்ளிட்டோரையும் குறித்துப் பேசுகின்றன, சேரர், பாண்டியர், சோழர் என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகள். […]

Read more
1 86 87 88