திரைப்பாடம்

திரைப்பாடம், டாக்டர் ஆர். கார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. திரைப்படம் என்னும் கருவி இசை, நடனம், நடிப்பு, ஓவியம் என அத்தனை கலைகளும் சங்கமிப்பது சினிமாவில். ஆனால் நெடுங்காலமாக சினிமா என்பது மலினமான பொழுதுபோக்கு ஊடகமாகவே கருதப்படுகிறது. இந்தப் பார்வையைப் புரட்டிப்போட்டு, திரைப்படத்தைப் பயிற்றுக் கருவியாக மாற்ற முடியும் என்பதை ‘திரைப்பாடம்’ புத்தகம் காட்டுகிறது. சார்லி சாப்ளினின் ‘தி கிரேட்டிக்டேட்டர்’ , ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’, பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ எனப் புகழ்பெற்ற 31 திரைப்படங்களை ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் அலசுகிறது இப்புத்தகம். இந்தத் திரைப்படங்கள் […]

Read more

அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை வெளியீடு, விலை 200ரூ. அரிதாரம் பூசிக்கொள்ளாத எழுத்து! ருத்ராட்சம் கட்டிக்கொண்டு ஏராளமான பூனைகள் பேனா பிடித்தபடி வளைய வருகிற காலகட்டத்தில் சாரு நிவேதிதா முற்றிலும் வித்தியாசமானவர். எதையும் வெளிப்படையாகப் பேசுகிறவர். எப்படியோ இவரைப் பற்றி ஒரு பிம்பம் அல்லது மாயை படிந்துவிட்டது. ‘மன்னியுங்கள் எனக்கு இருக்கும் பிம்பத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஆள் நான். பழகினால் தெரிந்துகொள்வீர்கள்’ என்கிற சாருவைப் புரிந்து கொள்ளவும் பழகவும் அண்மையில் வெளியாகியுள்ள ‘அறம் பொருள் இன்பம்’ என்கிற நூலே போதுமானது. இவருடைய […]

Read more

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும், முத்து. குணசேகரன், உலகத் தமிழாய்ச்சி நிறுவனம், விலை 105ரூ. 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதியை மே தினமாக முதன் முதலாகக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். அது முதல்தான் “மே தினம்” கொண்டாடப்படுகிறது. பொது உடமை இயக்க முன்னோடி இவர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார். பெரியாரும், சிங்காரவேலரும் 1932-ல் “சுயமரியாதை சமதர்ம இயக்கம்” என்ற பேரியக்கத்தை தொடங்கினர். அது பற்றி விரிவாகக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 04/5/2016. […]

Read more

வேலூர் மாவட்ட வரலாறு

வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 270ரூ. மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் எந்த பொருள் பற்றியும், மனதைத் தொடும் விதத்தில் எழுதுவதில் வல்லவர். அவருடைய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் 2ம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. மொத்தம் 59 கட்டுரைகள் உள்ளன. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரைகள். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- வர்ம மருத்துவ கையடக்கம், மருத்துவர் த. இராஜேந்திரன், வர்ம அறிவியல் ஆய்வு மையம், பவர் பப்ளிகேஷன்ஸ், விலை 390ரூ. உலக மக்களின் பிணிகளைத் […]

Read more

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள்

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள், வில்லியனூர் தியாகி முத்து. சுந்தரமூர்த்தி, விலை 200ரூ. பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. அய்யர், நாகசாமி ஆகியோர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1908-1918) அவர்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பற்றி விவரிக்கிறது, “இவர்களின் புதுச்சேரி தோழர்கள்” என்ற இந்த புத்தகம். பாரதிக்கும், மற்றவர்களுக்கும் நண்பர்களாக இருந்தவர்கள் பொதுமக்களிடம் புகழ் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள். தேசத்தொண்டு செய்தவர்கள், அவர்களைப்பற்றி இளைய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும்.  சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளையும் […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 1300ரூ. எந்த ஒரு தொரீல் என்றாலும், ஏன் விவசாயம் என்றாலும் அதில் மேலாண்மை இருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய உலகில் அழுத்தம் திருத்தமாக கூறப்படும் உண்மையாகும். மேலாண்மை பண்புகளை எல்லோரிடமும் வளர்ப்பதற்கு 105 தலைப்புகளில், ஒரு வழிகாட்டும் நூலாக திகழும் இந்த நூலை, சிறந்த இலக்கியவாதியும், சிறந்த பேச்சாளரும் மற்றும் அரசு பணியின் நிர்வாகி என பன்முகத் தன்மையை தன்னகத்தை கொண்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வே. இறைவன்பு எழுதிய […]

Read more

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், ம.பொ.சிவஞானம், சந்தியா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ. அந்நிய ஏகாதிப்த்தியத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது ஒரு மகத்தான வரலாறு. சுதேசமன்னர்களின் எதிர்ப்புப் போராட்டம், பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களின் கலகம், காங்கிரஸ் மகாசபையின் தோற்றம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வின் உடனடி வெளிப்பாடாக, நாட்டின் பல இடங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தலைதூக்கின. பகத்சிங், வாஞ்சிநாதன் போன்றோர் இதற்கு உதாரணங்கள். ஆனால் அவை முளையிலேயே கொடூரமாக நசுக்கப்ட்டன. இந்த நேரத்தில்தான் அகிம்சையை ஆயுதமாகக் கொண்ட காந்தியின் இந்திய […]

Read more

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார். தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார். உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற […]

Read more

லால்பகதூர் சாஸ்திரி

லால்பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், புத்தக உலகம், விலை 245ரூ. சமுதாயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறு. அவரது குழந்தைப் பருவ நிகழ்வுகளையும், தனி மனித வாழ்வு, பொது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் இந்த நூலில் அனில் சாஸ்திரி – பவான் சாஸ்திரி ஆகியோர் சுவைபட தொகுத்து வழங்கியுள்ளனர். இந்த நூலைத் தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். கடுமையான உழைப்பு, அறிவுத் திறத்தால் சாஸ்திரி […]

Read more
1 85 86 87 88