மின்னல் விளக்கு

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு), சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக்.144,  விலை ரூ.100. மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, திருவள்ளுவர், ஆன்மிக – சமயப் பெரியோர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து 14 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அளித்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருந்திருந்தால் நூலாசிரியர் பதிவு செய்திருக்கலாம். புத்துப்பட்டு ஐயனார், புதுச்சேரி ஆரோவில் பற்றிய கட்டுரைகளில் அந்த இடங்களுக்குச் செல்ல யாரையும் வழிகேட்காமலேயே செல்லும் அளவுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.÷ நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சில வரலாற்றுப் பதிவுகள் பழைய தகவல்களாக இருந்தாலும், அவற்றை […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ. ஒரு பிரச்சினை, அது தொடர்பான வழக்கு, அதற்குரிய தீர்ப்பு இந்த மூன்றையும் ஒன்றிணைக்கம் நோக்கத்தில் தொகுக்கப்ட்ட நூல். பிரச்சினைகளுக்கு எளிதாக, நியாளமான தீர்ப்பினை பெற பாமர மக்களுக்கு உதவும் சட்ட ஆலோசனை நூலாக விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் திகில் நிறைந்த கதைபோலக் கொடுத்திருப்பதால், படிப்பவர்களுக்கு ஒரு நாலை படித்த உணர்வை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரைகளையும் படிக்கும்போது, இதற்கு நீதிபதிகள் என்ன தீர்ப்பு […]

Read more

தெருவிளக்கும் மரத்தடியும்

தெருவிளக்கும் மரத்தடியும், ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக். 88, விலை 80ரூ. கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். […]

Read more

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோக, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 150ரூ. பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர். டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார். நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். […]

Read more

மகராஜனா இரு

மகராஜனா இரு, அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக். 292, விலை 200ரூ. கடந்த, 1930களில், தேசியம், காந்தியம், சமுதாயப் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களைப் பற்றி, அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப, ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதினார் கல்கி. அவற்றின் தொகுப்புதான் இந்த நூல். அன்று பேசப்பட்ட பல பிரச்னைகள், இன்று வரை நீடிக்கின்றன என்பதே யதார்த்தம். எவரையும் புண்படுத்தா நகைச்சுவை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதை உணர, இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் பட்டதாரிகள் அல்லாதோர் […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர்.இரகுநாதன்,  ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.240, விலை  ரூ.150. தமிழ் இதழியல் குறித்து பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்த நூல் எழுத்தின் வரலாற்றில் தொடங்கி இன்றைய இதழியல் போக்குவரை அலசி ஆராய்ந்திருப்பது தனிச்சிறப்பு. விடுதலைப் போரில் இதழ்களின் பங்களிப்பு முதல் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒருமைப்பாடு தினம் வரையிலான 20 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., பாரதி, வ.உ.சி., சுப்பிரமணியசிவா, தினமணி ஏ.என்.சிவராமன், ராஜாஜி, புதுமைப்பித்தன் என அனைவரைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மது […]

Read more

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 911, விலை  ரூ.900. கவி.கா.மு.ஷெரீப் எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் “ஒளி’, “தமிழ் முழக்கம்’, “சாட்டை’, “திங்கள்’ ஆகிய இதழ்களை அவர் நடத்தினார். அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “தமிழரின் நெறி”, “ஒளி தலையங்கங்கள்’, “தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?’, “இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’, “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’, “பத்ர் போரின் விளைவுகள்’, “வள்ளல் சீதக்காதி வரலாறு’ ஆகியவற்றுடன் புதுவை வானொலியில் தொடர்ந்து இவர் நிகழ்த்திய சீறாப்புராணச் சொற்பொழிவுகளும் இதில் அடக்கம். […]

Read more

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள்

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், பக். 160, விலை 125ரூ. 2012-2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி, சொல்வனம் வலைப்பின்னல் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பனை, சந்தனம், யூகலிப்டஸ், செம்மரங்கள் குறித்த பல்வேறு வகையான செய்திகளை சங்க காலம், தொட்டு தற்காலம் வரை புள்ளி விவரங்களுடனும், அறிவியல் பூர்வமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 1972-இல் பிரேசிலில் தொடங்கியு […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. இந்திய பாகிஸ்தான் பகைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னைதான். இதை வைத்துத்தான் இந்தியா மீது நேரடியான மற்றும் மறைமுகமான போர்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி உருவானது, இது தொடர்பான இந்திய தரப்பு நியாயங்கள் என்ன, இதில் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள், அத்துமீறல்கள், ஆக்ரமிப்புகள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்திய அரசியல்வாதிகளின் தவறுகள், பிரிட்டிஷாரின் தந்திரங்கள், ஐ.நா.சபை விவாதங்கள், அதன் தீர்மானங்கள், ஆர்ட்டிகிள் 370… […]

Read more

அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]

Read more
1 83 84 85 86 87 88