ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 240ரூ. ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கட்டங்களையும், வெவ்வேறு காலநிலைகளில் வெளியான இலக்கிய ஆக்கங்களைப் பற்றிய நூல். பழமையான வரலாற்றை கொண்ட ஈழத்தமிழ் இலக்கியத்தை ஆழமாக ஆய்வு செய்து நூலாசிரியர் எழுதியிருப்பது பல்வேறு கட்டுரைகள் மூலமாக தெரிகிறது. இலக்கியப்படைப்புகள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய கருத்துகள் இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், […]

Read more

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, தொகுப்பாசிரியர் ரவி. வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லால், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ. சமய ஆய்வின் பயிற்சிக் கையேடு! இந்திய சமூக வரலாற்றில் சமயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமயம், ஜாதி ஆகியவற்றைக் குறித்த பாடத்துறையோ, ஆய்வுக் கழகமோ தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கல்விச் சூழலில் இல்லை. இதனால், சமூகவியல் ஆய்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்தியா – இலங்கை – கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் […]

Read more

பறந்து மறையும் கடல்நாகம்

பறந்து மறையும் கடல்நாகம், சீனக் கலாசார கட்டுரைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா பதிப்பகம், பக். 1038, விலை 1000ரூ. சீனாவின் பண்பாடு, பெண்களின் நிலை, உணவு முறைகள், அதிகார கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் நூல் இது. கன்பூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ், மூதாதையர் வழிபாடு, ஆண் வாரிசை உருவாக்குதல், பெற்றோரை மதித்து பேணிக்காத்தல் ஆகிய மூன்று முக்கிய பண்பாட்டு அலகுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதே சீனக் கலாசாரம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், சீனாவில் நிலவிய பிரச்னைகளை களைய, விவசாய துறையில் நவீன […]

Read more

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 70ரூ. உலக நாடுகளின் குப்பைத் தொட்டி!? முன்னெல்லாம் மாட்டுவண்டிகளில் பயணம் செய்த ஆற்று மணலுக்கு இப்போது டிம்பேர் லாரிகளிலும் கப்பல்களிலும் போகும் ‘யோகம்’ வந்துவிட்டது. நிஜம்தான்! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்று மணலின் இலக்கு 2016 ஆம் ஆண்டில் 10.26 லட்சம் டன்னாக உயர்ந்தது என்று இந்த நூலில் எழுதுகிறார் சுற்றச்சூழல் ஆர்வலரான ப. திருமலை. ‘ஆறுகளில் பத்து சென்டிமீட்டர் உயரத்துக்க மணல் படியவேண்டுமானால் தொடர்ந்து ஓராண்டுக்கு நீர் […]

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், விலை 130ரூ. திரைப்பட இயக்குனரும், பாலுமகேந்திராவின் மாணவருமான சுகா, பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். சொல்ல விரும்பும் விஷயத்தை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்கிறார் “தூங்காவனம்” படத்துக்கு வசனம் எழுதியவர் அல்லவா? எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு பற்றியும், இறுதிச் சடங்கு பற்றியும் எழுதியுள்ள கட்டுரை உள்ளத்தை உருக்குகிறது. மயானத்தில் கூடியிருந்தவர்கள் சுமார் நூறு பேர்தான் என்பதை படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. எனினும், “மகாகவி பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விட சுமார் 6 மடங்கு அதிகம்தான்” […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ.  இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 574, விலை 1300ரூ. தன்னம்பிக்கையும், நுண்ணறிவும் மிக்க ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில், இலக்கியப் பணியும் ஆற்றி வரும் இந்நூலாசிரியர், தமிழகம் அறிந்த சிறப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரி. மனித வாழ்க்கைக்கு சீரிய ஒழுக்கமும், நெறிகளும் மட்டுமின்றி நிர்வாகமும், மேலாண்மையும் அவசியம். இவற்றை பண்டைய இலக்கியங்களும், இன்றைய இலக்கியங்களும் எப்படி எடுத்துரைக்கின்றன என்பதை இந்நூலாசிரியர் சிறப்பான ஆய்வுத் திறனோடு, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் […]

Read more

அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இலங்கையில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஜெயராஜ். தலைசிறந்த பேச்சாளர், “கம்வாருதி” என்று புகழ் பெற்றவர். அவர் எழுதிய சிறந்த கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகத்தை, சிறந்த பெக்கிஷம் என்று கூறினால் அது மிகையல்ல. சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளும், மெய்சிலிர்க்கச் செய்யும் கட்டுரைகளும், நெஞ்சை ஊடுருவும் கட்டுரைகளும் பொன்னும் வைரமுமாக ஜொலிக்கின்றன. கம்பவாருதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு மயங்கியவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தால் நெகிழ்ந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. இந்நூலாசிரியர் அண்மையில் தான் படித்த எட்டு நாவல்கள், ஐந்து கவிதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள் என மொத்தம் இருபது நூல்களைப் பற்றி இந்நூலில் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற முதல் வரிசை எழுத்தாளர்களிலிருந்து தனது முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ராமலக்ஷ்மி வரை பலருடைய நூல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஜாதிப் பிரச்னைகளின் பல்வேறு முகங்களைக் காட்டும் “சஞ்சாரம்’‘ […]

Read more

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள்

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள், ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், (பாகம் 1) பக். 152, விலை 125ரூ, (பாகம் 2) பக். 152, விலை 125ரூ. குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் அந்த இதழில் பல்வேறு திருத்தலங்கள் குறித்து எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 2 பாகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில் 18 கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் 23 கட்டுரைகளும் உள்ளன. பலருக்கும் தெரியாத அபூர்வ திருத்தலங்கள் குறித்தும், ஏற்கெனவே தெரிந்த கோயில்கள் குறித்த தெரியாத பல தகவல்களையும் தனக்கே உரிய […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 112, விலை 110ரூ. மன்னரிடமோ, வள்ளல்களிலிடமோ பரிசில் பெற்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலான இரவலர்கள் தம்மைப்போன்ற இரவலர் பசியாலும், வறுமையாலும் துன்புற்ற நிலையில் வழியில் எதிர்ப்படும்போது, தான் பரிசிலாகப்பெற்ற பெருவளத்தைக் கூறி அவர்களையும் அப்புரவலரிடத்துச் சென்று பரிசில் பெறுமாறு வழிகாட்டுதலே ஆற்றுப்படை இலக்கணம். ஆற்றுப்படுத்தப் பெற்றவர் பெயராலேயே ஆற்றுப்படை இலக்கியங்கள் எல்லாம் அமைந்திருக்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத் தலைவன் முருகன் பெயரால் அமைந்தமை ஏன்? இவ்வினா […]

Read more
1 81 82 83 84 85 88