தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.160. தமிழ் இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை நயங்களையும் விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுாலிது. இரா.மோகனின் எழுத்தாற்றலைக் கூறும் நுாலாக விளங்குகிறது. கவிதைத் துறைமுகம், செவ்விலக்கியப் பேழை, சான்றோர் அலைவரிசை, தன்னம்பிக்கை முனை என ஆறு பகுதிகளில், 36 கட்டுரைகள் உள்ளன. ‘தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக், பிறகெப்படி பண்பாட்டிற்கு கிடைக்கும் பாஸ் மார்க்?’ என, தி.மு.அப்துல்காதர் கவிதையைப் பாராட்டுவதும், ‘வந்து நின்று வாக்கு கேள், உட்கார்ந்தபடி ஊழல் […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய்,  இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்., குமரன் பதிப்பகம், விலை ரூ.180. ‘உன்னுள் யுத்தம் செய்’ என்னும் நுாலின் மூலம் அறிமுகமான இரா.திருநாவுக்கரசு, ‘தன்னிலை உயர்த்து’ என்னும் தலைப்பில், இளைஞர் மணி மற்றும் ‘தினமலர், தினத்தந்தி’ நாளிதழ்களில் எழுதி வருகிறார். மனதை ஒருமுகப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகும் என்ற கருத்தை முத்து பேராசிரியர், யஸ்வந்த், கணேசன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தந்திருக்கிறார். அனுமன் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் மூலமும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது இந்நுால். காலையில் கண் விழித்ததும், நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்குத் தேவையான விதத்தில் பதிய […]

Read more

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!, அ.முகமது அப்துல்காதர், கற்பகம் புத்தகாலயம்,  பக்.160, விலை ரூ.120.  ஒரு மனிதர் என்று சாதனை படைக்கிறாரோ அன்றுதான் அவர் பிறந்ததாக கருத வேண்டும் என்கிறார் அப்துல்கலாம். அந்த கருத்தையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நூல். ‘வாழ்க்கை கடினமானதுதான் ஆனால் வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது’ என்கிறார் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். ‘வலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார் புத்தர். ‘வலிகளால் நிரப்பப்பட்டதுதான் வாழ்க்கை . அதை திறம்பட கையாளுவதன் மூலம் தொடர்ந்து சாதனைகள் படைக்கலாம்’ என்கிறார் நூலாசிரியர். […]

Read more

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்,  முத்தாலங்குறிச்சி காமராசு,  காவ்யா, பக்.343, விலை ரூ.350.  திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த சாகோர் என்பவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினர் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனர். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப […]

Read more

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.312, விலை ரூ.250. தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிர்ந்துள்ளார் […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்திய அகாதெமி,  பக்.356, விலை ரூ.300.  தமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவற்றில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன்,சு.வேணுகோபால்,ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும்,படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை, படைப்பாளிகள் […]

Read more

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ.இராகவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.168, விலை ரூ.150.  பண்டைக்காலத்தில் இந்தியாவுக்குத் தெற்கே, இந்து மகாசமுத்திரத்தில் பூமியின் நடுக்கோடு வரை பரவிக் கிடந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு சாவக நாடு. அது தமிழகம் அல்லது லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். கடல்கோள்களால் இந்நிலப் பரப்பின் பெரும்பகுதி அழிந்தது போக, சிதறுண்ட தீவுகளில் ஒன்றாக இன்றைய சாவகத் தீவு (ஜாவா) உள்ளது. இத்தீவு பண்டைய தமிழகத்தின் தொடர்ச்சி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல சான்றுகள் […]

Read more

வள்ளுவர் காட்டும் உவமைகள்

வள்ளுவர் காட்டும் உவமைகள்,  பு.சி. இரத்தினம்,  மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல கருத்துகளைக் கூறியுள்ள நுால் திருக்குறளாக இருப்பதால், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீரிய கருத்துகளைக் கூற வந்த திருவள்ளுவர், அக்கருத்தை மேலும் தெளிவாக உணர, பல உவமைகளையும் கூறி விளக்குகிறார். உவமைகள் பாடல்களுக்கு மேலும் அழகு தருவதால், அவை அணிகளாகின்றன. பிறருக்கு உதவி செய்பவரிடம் உள்ள செல்வம், ஊர் நடுவே பயன்மரம் பழுத்தது போல […]

Read more

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, ஆசிரியர் : மு.நீலகண்டன்,  கனிஷ்கா புத்தக இல்லம், விலை160ரூ. பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார். புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் […]

Read more

சிந்தனை, செயல், வெற்றி

சிந்தனை, செயல், வெற்றி,  மெ.ஞானசேகர், கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்,  பக்.260, விலை ரூ.200,  சிந்தனை, செயல், வெற்றி என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதற்கான வழிகளை பல்வேறு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார் நூலாசிரியர். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட மேலானவர் என்று நினைப்பது நல்லது. அத்துடன் நம்முடைய கற்பனை, சிந்தனை, முன்னேற்றத்துக்கான செயல்பாடுகள், நேர்மறை எண்ணங்கள், பழக்க வழக்கங்களில் சிறிய அளவிலான மாற்றம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே போதும், நாம் எண்ணிய வாழ்க்கையைப் […]

Read more
1 24 25 26 27 28 88