ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம், பிரபா ஸ்ரீதேவன், வி பாட்டில் பவுண்டேஷன், விலை 200ரூ. நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின், ‘ஆப் வைன்யார்ட் ஈகுவாலிட்டி’ எனும் ஆங்கில நுாலின் தமிழாக்கம் இந்நுால். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியும், வழக்குரைத்தும் வல்லமை பெற்ற நீதியரசி எழுதிய, 20 கட்டுரைகள் அடங்கிய இந்நுாலில், சமூக நீதியை சரியாக உணர்த்தும் திறனையும், எடுத்துரைக்கும் கருத்துகளின் மீதுள்ள நியாயமான போக்கையும் காண முடிகிறது. மூன்றாம் பாலினத்தவரின் கவுரவத்திற்கான உரிமை குறித்து கூறும் நுாலாசிரியர், நேபாள உச்ச நீதிமன்றம் யோக்கர்த்தா கொள்கைகளைப் பயன்படுத்தி, தம் கருத்தை வெளிப்படுத்துகிறார். […]

Read more

வான் மண் பெண்

வான் மண் பெண், ந.வினோத்குமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. சூழலியல் பெண்களின் கதை இயற்கையைப் பாதுகாக்க வந்த 50 பெண்களைப் பற்றிய ஆவணம் இந்நூல். உலகின் முன்னோடி சூழல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவருபவர்கள் வரை பல்வேறு தரப்புப் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. சூழலியல் பெண்ணியவாதிகள் குறித்துப் பேசும் இந்நூல், தமிழில் முதல் முயற்சி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 13/10/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும்

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும், பானுமதி பாஸ்கோ, நெய்தல்வெளி, விலை 100ரூ. எழுத்து, பேச்சு ஆகிய இரு பெருங்கலைகளில் வல்லவராக விளங்கி மறைந்த வலம்புரி ஜானுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் அழகு தமிழில் பதிவு செய்துள்ளார். தனது முதல் சந்திப்பில் வலம்புரி ஜான் பனங்கிழங்கு அளித்து உபசரித்த நினைவில், அதையே புத்தகத்துக்கு தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். வலம்புரி ஜானைப்பற்றிய அரிய பல தகவல்களை சுவைபட எழுதி இருக்கிறார். 1957-ல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழுக்கு விளக்கம் அளித்து கலைஞர் கருணாநிதி கூறிய […]

Read more

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், விலை 140ரூ. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பு தீரும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பவை மிக எளிய முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக நீண்ட காலம் இளமைத் துடிப்புடன் வாழ இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும். கை விரல் முத்திரைகள் மூலம் பல வியாதிகளை விரட்டலாம் என்ற தகவல் வியப்பு அளிக்கிறது. […]

Read more

நவீன தாமிரபரணி மஹாத்மியம்

நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ. தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் […]

Read more

காகிதம்

காகிதம், வெ.இறையன்பு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், விலை 50ரூ. மனிதனின் கண்டுபிடிப்புகளுள் மகத்தான இடம் காகிதத்துக்கு உண்டு. அறிவுக் கடத்தியாக தகவல்களை காகிதம் சுமக்கத் தொடங்கிய பிறகுதான், அகிலத்தின் அறிவுக் கண் திறந்தது. உயர்வான காகிதத்தை உதாசீனமாகக் கசக்கிவிடாமல், அதன் அருமை பெருமையை உணரச் சொல்லும் அற்புதமான புத்தகம். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கை என்பது போன்ற வித்தியாசமான தகவல்களும் நிறைய இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்! நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள் குறித்து அவர் எழுதிய ‘ஒழுக்கம்‘ தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு ‘ஒளவையார்‘ ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி‘ உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது. உதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும்வாழ்க்கைத் தேவை […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 225ரூ. சிங்கத்துடன் நடப்பது எப்படி? தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் நன்றி: தி இந்து,20/10/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

உனக்கும் ஓர் இடம் உண்டு

உனக்கும் ஓர் இடம் உண்டு. கவி.முருகபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், மனித வளம் மிக முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அந்த வளத்தை சரியாக பயன்படுத்த உரிய பயிற்சிகள் தேவை என்கிறார். பயிற்சித் துறையில், பல ஆண்டு அனுபவம் உள்ள இந்நுாலின் ஆசிரியர், தனக்கே உரிய பாணியில், தன்னம்பிக்கை பற்றியும், வித்தியாசமான சிந்தனை பற்றியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். வெறும் கட்டுரையாக இல்லாமல், பல உதாரணங்கள், மெய் […]

Read more

பேரிடர்களை எதிர்கொள்வோம்

பேரிடர்களை எதிர்கொள்வோம், ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 250ரூ. அறிவியல் துணையுடன் மனிதன் உலகையே ஆண்டு வந்தாலும் இயற்கையை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. மானுட சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே அவ்வப்போது நேரிடும் இயற்கை பேரிடர்கள் இந்த உண்மையை உரக்கச்சொல்லிவிடுகின்றன. நிலநடுக்கம், புயல், சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ என மனிதனை சோதிக்கும் இடர்பாடுகள் ஏராளம். இத்தகைய பேரிடர்கள் நேரிடுவதை தடுக்க முடியாவிட்டாலும், அவற்றில் இருந்து சமயோஜிதமாக தப்பிக்க முடியும். அதற்கான வழிகாட்டிதான் இந்த நூல். மனிதனை அச்சுறுத்தும் ஒவ்வொரு பேரிடருக்குமான காரணம், அவற்றின் […]

Read more
1 55 56 57 58 59 88