பரீட்சைக்குப் பயமேன்

பரீட்சைக்குப் பயமேன், நரேந்திர மோடி, தமிழாக்கம் வெ.இன்சுவை, அல்லயன்ஸ், விலை 150ரூ. தேர்வு என்னும் பண்டிகையில் பங்கேற்கும் வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன், ‘மன்கீபாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் அளித்த சிறந்த விஷயங்களின் தொகுப்பாகும். மாணவ – மாணவியருடன் நேரிடையாக உரையாடும் வகையில் அமைந்த இக்கருத்துக்கள், 25 தலைப்புகளில், அதுவும், ‘மந்திரம்’ என்ற வகையில் தரப் பட்டிருக்கிறது. எப்போது பார்த்தாலும் படிப்பதை சற்று நிறுத்தி, ஓய்வுக்கு பின் படிக்கலாம் என்பது அதில் ஒன்று. உலகம் முழுவதும், ‘யோகா’ பரப்பிய பிரதமர் என்பதால், […]

Read more

ஊடகவியல்

ஊடகவியல், துரை. மணிகண்டன், கமலினி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அறிவதற்கும், அதற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவும், பிறருடன் கலந்துரையாடவும், இவ்வாறு பலவகையிலும் நமக்கு உதவுவது ஊடகங்களாகும், இதைப் பற்றிய விரிவான தகவல்களை நமக்கு இந்நுால் எடுத்துரைக்கிறது. இந்நுாலில், ஊடகம் குறித்த விளக்கங்களும் சிறப்பாக உள்ளன. வானொலி குறித்தும், தொலைக்காட்சி குறித்தும் அடுத்த பகுதி விரிவாக விவரிக்கிறது. கணினி, இணையம் குறித்த தகவல்களை நான்காம் பகுதி விளக்குகிறது. இதில் இணைய இதழ்கள், அலைபேசி, குறுஞ்செயலி எனப் பல […]

Read more

ஈரோடு மாவட்ட வரலாறு

ஈரோடு மாவட்ட வரலாறு, புலவர் செ. இராசு, வேலா வெளியீட்டகம், பக். 254, விலை 200ரூ. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கோவை மாவட்டத்துக்கு உட்பட கிராமமாக இருந்த ஈரோடு, 1979ல் மாவட்ட நிலைக்கு உயர்ந்தது. தமிழகத்தின் சிறு பிரிவுகளில் ஒன்றாக விளங்கியது கொங்கு நாடு. இந்த கொங்கு நாட்டை நான்கு திசைகளின் அடிப்படையில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தனர். அவற்றில் தெற்குக் கொங்குப் பகுதியையும் வடக்குக் கொங்குப் பகுதியையும் உள்ளடக்கியது இந்த ஈரோடு மாவட்டம். பெருங்கற்காலம் துவங்கி ஈரோட்டுப் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குக் கொடுமணல் […]

Read more

மணல் வெளியில் சில மயிலிறகுகள்

மணல் வெளியில் சில மயிலிறகுகள், தியாரூ, ஜே,பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 200ரூ. எல்லா காலக்கட்டத்திலும் மனித சமூகத்தில் தன்னம்பிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக கருதப்பட்டு நுால்கள் படைக்கப்பட்டு வருகின்றன. புறவெளியில் இருந்து நுால்கள் மற்றும் படிப்பை மூலமாகத் தன்னம்பிக்கைச் சாதனங்களைத் தேடும்படியான சூழல் நிலவுகிறது. தன்னெழுச்சிக்காக பல்வேறு படைப்பாளர்கள் பொன்மொழித் தொகுப்புகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஏராளமாக எழுதி விட்டனர். இன்றளவிலும் எல்லாருக்குமே பிறருக்குச் சொல்வதற்கென்று பல்வகை அனுபவங்களோ, செய்திகளோ நாளும் ஊற்றெடுக்கின்றன. எழுத்தாளர்கள் அவற்றை பிறருக்காக நுால்களாக்கி வெளியிடுகின்றனர். பத்திரிகையில் தொடராக […]

Read more

எங்கு செல்கிறோம்?

எங்கு செல்கிறோம்?, பி.ஏ.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 140ரூ. அரசியலும் கலாச்சாரமும் முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது. நன்றி: தி இந்து,1/12/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. மகாத்மா காந்தியைப் பற்றி பொதுவாகச் சில விஷயங்களே தெரிந்தவர்களுக்கு, அவரது எளிமை, அன்பு, அஹிம்சை, ஒழுக்கம், நேர்மை, சகிப்புத்தன்மை, எதையும் சரியாகச் செய்யும் குணம் என்று காந்தியின் எல்லா நற்குணங்களையும் சித்திரித்துக் காட்டுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் இருநூறு. படிக்கப் படிக்க காந்திஜி மீது மதிப்பு கூடுகிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027224.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஸ்ரீகுணமிலி

ஸ்ரீகுணமிலி, பதிப்பாசிரியர் சுகவன முருகன், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 750ரூ. கட்டுரை எழுபது தொல்லியல் அறிஞர் வீரராகவன் எழுபதாம் வயது நிறைவையொட்டி வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பில் ‘தொன்மம்’ என்ற தலைப்பின்கீழ் சமகால வரலாற்று ஆய்வாளர்களின் 37 ஆய்வுக் கட்டுரைகளும் ‘அமரம்’ என்ற தலைப்பின்கீழ் 7 ஆய்வுக் கட்டுரைகளும் ‘சுற்றம்’ என்ற தலைப்பின்கீழ் நண்பர்களின் 28 ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. வீரராகவன் படியெடுத்த கல்வெட்டுகள், கண்டுபிடித்த தொல்லியல் சான்றுகள் பற்றிய பதிவுகளும் உண்டு. வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத கட்டுரைத் […]

Read more

நிழற்பட நினைவலைகள்

நிழற்பட நினைவலைகள், நேஷனல் செல்லையா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 130ரூ. திரைத் துறையில் தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றியவர்களின் அனுபவங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களை அறிந்த அந்தக் கலைஞர்கள் எழுதும் புத்தகங்களில் அதுபோன்ற அனுபவங்கள் அசலாக, இயல்பாகப் பதிவாகிவிடும். புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய நேஷனல் செல்லையாவின் அனுபவக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகமும் அப்படித்தான். ஏவிஎம் ஸ்டுடியோவில் இளம் வயதிலேயே அலுவலக உதவியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் செல்லையா. ‘ஓர் இரவு’ படத்துக்காகக் கதை-வசனம் எழுதவந்த அண்ணாவுக்கு வெற்றிலை, சீவல், […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி.மஞ்சுளா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 150ரூ. தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டவர்கள் இருளர்கள். இரண்டாவது நிலையில் இருந்தாலும் இவர்களுடைய எண்ணிக்கை என்னவோ ஒன்றரை லட்சம்தான். தமிழகத்தில் அருகிவரும் ஆறு பழங்குடிகளில் ஓர் இனமாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ‘இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள்’ என்பதுதான் பொதுச் சித்திரம். அதேநேரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்திவரும் இவர்களது மரபு அறிவைப் பற்றி ஆராய்ச்சி அடிப்படையில் முனைவர் சி. மஞ்சுளா ‘இருளர்களும் இயற்கையும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுபோன்ற […]

Read more
1 54 55 56 57 58 88