விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, லில்லியன் எயிஷ்லர் வாட்சன், தமிழில்: பி. உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக்.398, விலை ரூ.230. தமிழில் ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை அனைத்திலிருந்தும் வித்தியாசமான நூலாக இது விளங்குகிறது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம்தான் இது. பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல்,புகழ்பெற்ற சாதனையாளர்களின் மேற்கோள்களையும், அவை உதயமானதன் பின்னணி சம்பவங்களையும் தொகுத்து அளித்திருப்பது இதன் தனிச் சிறப்பு. வாழ்க்கைப் […]

Read more

எல்லாமே இலவசம் இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி

எல்லாமே இலவசம், இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி, பாரதி சின்னசாமி,எழில்மதி பதிப்பகம், பக்.188, விலைரூ.120. சந்தைப் பொருளாதாரம் தற்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உலகச் சந்தையை தேசியச் சந்தைகளாக பிளவுபடுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தனக்கிருந்த சந்தையை இழந்து சரிந்து விழத் தொடங்கியுள்ளன. சந்தையின் கட்டுடைவு சந்தையில்லாப் பொருளாதாரத்தை அதாவது இலவசப் பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும் என்ற அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றாக நூலாசிரியர் இலவசப் பொருளாதாரத்தை முன்மொழிகிறார். ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கீரை, காய்கறிகள் விளைவித்து அந்த ஊரின் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. அதிகாரம் ஈரோட்டில் இருக்கிறது! தேசப்பிதா மகாத்மா காந்தி, மோகன் தாஸ் ஆகப் பிறந்து 150ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பாபுஜியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிதளவேனும் அவரைப் பின்பற்ற முயல்கிறவர்களின் எண்ணிக்கை தான் நாளும் அருகிக்கொண்டே வருகிறது. முனைவர் இளசை சுந்தரம், பாபுஜியின் வாழ்க்கையிலிருந்து 200 அரிய நிகழ்வுகளைத் தொகுத்துப் பலாப்பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துத் தந்திருக்கிறார். ஒரு சமயம் பாபுஜியின் பவுண்டன் பேனா காணாமல் போய்விட்டது. […]

Read more

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது? இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]

Read more

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை, இரா.இளங்குமரனார் (ஆறு தொகுதிகள்), பாவேந்தர் பதிப்பகம், தொகுதி-1, பக்.624, ரூ.500; தொகுதி-2, பக்.352, ரூ.300; தொகுதி-3, பக்.608, ரூ.500; தொகுதி-4, பக்.464, ரூ.350; தொகுதி-5, பக்.480, ரூ.400; தொகுதி-6, பக்.416, ரூ.350; ஆறு தொகுதிகள் மொத்தம் ரூ.2400; திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன – எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றுள்  இரா. இளங்குமரனாரின் திருக்குறளுக்கான வாழ்வியல் விளக்கவுரை தனிச்சிறப்புப் பெற்றது.திருக்குறள் நம் மறை என ஆணித்தரமாகக்கூறும் இளங்குமரனாரின் ஆழங்காற்பட்ட புலமையை இத்தொகுதிகள் வெளிப்படுத்துகின்றன. முப்பொருள் கூறிய திருவள்ளுவர்  பற்றிக் கூறாமைக்கான விளக்கம்; […]

Read more

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த. பார்த்திபன், இரா.ஜுட் சுதாகர், பா.பழனிகுமரன், நா.கிருஷ்ணகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. வனம் வளர்ந்தால் மனிதர்களின் வளம் பெருகும், வாழ்க்கை செழிக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், வனங்கள் அழிந்து வசிப்பிடங்களாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், மரங்களின் அவசியத்தைச் சொல்லி, செழிப்பாக மரங்களை வளர்த்துப் பணமும் பலனும் பெற எளிய முறையில் வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

பாரதி முதல் கவிதாசன் வரை

பாரதி முதல் கவிதாசன் வரை, பூ.மு.அன்புசிவா, குமரன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. பாரதி முதல் கவிதாசன் வரை எனும் இந்நுால் தொடர்ச்சியான வரலாறாக இன்றி, காலப்போக்கில் அவ்வப்போது எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நுாலின் முதல் கட்டுரை பாரதியைப் பற்றியது. அடுத்தடுத்த மூன்று கட்டுரை, சங்க இலக்கியம் பற்றியது. பின், கம்பன், திருவள்ளுவர் என அமைந்து, இக்காலத்தில் சக்திஜோதி, பா.விஜய், கனிமொழி, நா.முத்துக்குமார், அகிலா, கவிதாசன் ஆகிய படைப்பாளிகளின் கவிதைகளையும் திறனாய்வு செய்துள்ளது இந்நுால். பாரதியின் சமுதாய உணர்வையும், உலகளாவிய […]

Read more

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை, மு.ஏழுமலை, காவ்யா பதிப்பகம், விலை 120ரூ. நகைச்சுவை உணர்வு என்பது பிற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை வாய்ந்த பண்பாகும். இலக்கிய படைப்புகளிலும் இவ்வுணர்வு கலைத்தன்மையோடு வெளிப்படுவதை காணமுடிகிறது. அப்படி பாரதியாரின் கவிதைகளில் பொதிந்திருககும் நகைச்சுவையை எடுத்துரைக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027187.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஒழுக்கத்தின் மேன்மை, திருக்குறளின் பெருமை, அவ்வை பாட்டியின் தமிழ்த்தொண்டு உள்ளிட்டவை கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான ஆசிரியர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துரைத்துள்ளது அழகு. நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஆச்சரியமூட்டும் அறிவியல், ஹாலாஸ்யன், பினாக்கிள் புக்ஸ்,பக்.144, விலை ரூ.135. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி இயங்குகின்றன? அவை இயங்கு வதன் அறிவியல் அடிப்படைகள் எவை? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. புதிய கண்டுபிடிப்புகள் எவை? அவை ஏற்கெனவே உள்ள எந்தப் பொருளின் உயர்வான, அடுத்தநிலையாக உருவாகி இருக்கிறது? என்பதும் நமக்குத் தெரியாது. அவற்றைப் பற்றியெல்லாம் நமக்குச் சொல்கிறது, தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். மின்சார வசதியில்லாத இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத புவியீர்ப்பு விசையால் இயங்கும் க்ராவிட்டி […]

Read more
1 57 58 59 60 61 88