கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள், ஆங்கில மூலம்: எஸ். சாரதா, தமிழில்: கிருஷாங்கினி, சதுரங்கம் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் […]

Read more

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்,வானதி பதிப்பகம், பக்.504, விலைரூ.400. குறிப்பிடத்தக்க இஸ்லாமிய படைப்பாளிகளான ஜெய்புன்னிசா, தாழை மதியவன், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப், மு.சாயபுமரைக்காயர், நசீமா பானு, மீரான் மைதீன், சல்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலருடைய படைப்புகளில் காணக் கிடைக்கும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி பேசும் நூல். 77 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் பெண்ணுரிமை தொடர்பான இஸ்லாமிய நெறி என்ன என்பதைப் பல கட்டுரைகள் விளக்குகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில் நிறைய ஆண்கள் கொல்லப்பட்டதால், பெண்கள் […]

Read more

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?, ஜெயராணி, எதிர் வெளியீடு, விலை 220ரூ. புதிய வெளிச்சம் பெருமளவில் கவனம் பெற்ற ‘ஜாதியற்றவளின் குரல்’ தொகுப்புக்குப் பிறகாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகத்தின் ஒவ்வொரு அடுக்குகளிலும், எல்லாமட்டத்திலும் எவ்விதமாக சாதியம் தனது மூர்க்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப சாதிய வன்மம் எவ்வாறு தனது ரூபத்தை மாற்றிக்கொண்டு அதே மூர்க்கத்தோடு செயல்படுகிறது என்பதையும் ஜெயராணியின் கட்டுரைகள் முன்வைக்கின்றன. சாதியக்கூறுகளைத் தனித்துவத்துடன் அணுகும் ஜெயராணியின் பார்வை, சாதியக் கண்ணோட்டதில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. நன்றி: தி இந்து, […]

Read more

சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், விலை 420ரூ. சுற்றுச்சூழல் பாழ்பட்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளிலும் வளங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஆபத்து போன்ற பயனுள்ள பல அரிய தகவல்கள், புள்ளி விவரங்கள் இடம்பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027226.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.160, விலை 140ரூ. பிரபல எழுத்தாளரும், மாற்று மதத்தைச் சார்ந்தவருமான இந்நூலாசிரியர், இஸ்லாம் குறித்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாமிய மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்கள் புரிந்த சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நல்லாட்சி புரிந்துள்ளார்கள். அதேபோல் […]

Read more

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், சாரா காம்பிள், டோரில் மோய்; தமிழில்: ராஜ் கெளதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.108, விலை ரூ.90. பெண்ணியம் பற்றி வெளிவந்த இரண்டு நூல்களின் தொகுப்பே இந்நூல். சாரா காம்பிள் பதிப்பாசிரியராக இருந்து உருவாக்கிய பெண்ணியமும் பின்னையப் பெண்ணியமும் என்ற நூலும், டோரில் மோய் எழுதிய பாலியல்/ பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கிய கோட்பாடு என்ற நூலும் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. ஐரோப்பியச் சூழலில் தோன்றிய பெண்ணியம் பற்றிய சிந்தனைகளாக இவை இருந்தாலும், […]

Read more

அகமும் முகமும்

அகமும் முகமும், வே.தி.அரசு, திலகவதி பதிப்பகம், பக். 132, விலை 100ரூ. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற பழைய பாடல், கணவன் – மனைவி இருவரும் ஒத்தக் கருத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது. அகமும், முகமும் என்ற நுால், வே.தி.அரசு தன் சொந்த அனுபவத்தைக் கடிதம் மூலம் நுால் வடிவம் கொடுத்துள்ளார். பிரிந்து வாழும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். இரு மனம் இணைவது தான் திருமணம். ஒரு மனதில் விரிசல் ஏற்பட்டால், […]

Read more

மனசில் பட்டதை

மனசில் பட்டதை, ஆண்டாள் பிரியதர்ஷினி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 184, விலை 180ரூ. கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் – தோழியாக பார்ப்பது என்ன வகை… எந்த வகையிலும் சேராத பந்த வகை. ‘எவ்வளவு பக்கத்தில் கடவுளை பார்க்க முடியும்… எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்’ என, எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் நீங்கா ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இந்த உலகில் குழந்தைத்தனம்தான் கள்ளமற்றது. விருப்பு வெறுப்புகள் சாராதது. பயமற்றது.யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதது. ஆனால், குழந்தைத் தனத்துடன் இருப்பதை அறியாமை என்றும் அதிலிருந்து விடுபடுவதுதான் நல்லது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு, அப்படிப்பட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு, மீண்டும் களங்கமற்ற தன்மைக்கு மாறுவது எப்படி என்பதையெல்லாம் ஓஷோ சொன்னவற்றை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், சுவாமி சியாமானந்த். பல தேடுதல்களுக்கு விடைதரும் தெளிவான புத்தகம். நன்றி: குமுதம்,19.9.2018.   இந்தப் புத்தகத்தை […]

Read more

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 200ரூ. ஒவ்வொரு கனிக்குள்ளும் ஒரு விதை இருப்பதைப் போலவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். மனதால் பழகினால் அந்தக் கதையை நாம் படிக்கலாம். அப்படி, தான் பார்த்த, தன்னோடு பழகிய மனிதர்களிடம் இருந்து படித்த கதைகளை, சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய எளிய நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு. ஒவ்வொரு பக்கமும் பல முகங்களின் அனுபவங்களாக, நகர்கின்றன. முழுமையாகப் படித்து முடித்ததும் நாமே அவர்களோடு பழகியதுபோன்ற உணர்வும், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் […]

Read more
1 58 59 60 61 62 88