ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மீண்டும் வரலாம் புன்ட்ஜில் கடவுள் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியமாகவே வலம் வருகிற பழங்கதைகள் சொல்லாமல் சொல்லி விளங்கவைக்கும் சிந்தனைகள் ஆழமானவை. இவற்றைப் புரிந்துகொள்ளவும் தனிப்பட்ட திறமை வேண்டும். அதுவும் ஆதிவாசிப் பழங்குடியினரிடையே உலவும் கதைகள் என்றால் அவற்றின் மதிப்பே தனி. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அபாரிஜின் என்னும் ஆதிவாசிப் பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்கள் என்றும், இவர்கள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய கற்கால மனிதர்களின் வழித் தோன்றல்கள் என்றும் […]

Read more

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், என்.டி. ராமகுமார், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கத்திருமேனி நர்மதை நதியிலிருந்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். வடநாட்டில் பல சிவாலயங்களில் இடம்பெற்றுள்ள லிங்கத் திருமேனிகள் இநத் நர்மதையிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கங்கள்தான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியரான என்.டி. ராமகுமார். நர்மதை நதியில் கிடைக்கும் எல்லாக் கூழாங்கற்களுமே சிவ லிங்கங்களாகக் கருதப்படுகின்றன. ஒங்காரரேஷ்வர் தலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தாடிகுண்ட் என்னுமிடத்திலுள்ள ஆழமான பாறைக்கிணறுகளில் உயரத்திலிருந்து விழும் நர்மதை நதி நீர் வெள்ளத்தில் […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோயில்

செம்பியன்மாதேவி கலைக்கோயில், கோ. எழில் ஆதிரை, இயல், விலை 70ரூ. இன்றும் வாழும் மாதேவி! பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பு, உச்சரிக்கும்போதே உள்ளம் பரவசமடையும் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனின் மனைவியாக, உத்தம சோழனின் தாயாக, முதலாம் இராசராச சோழனின் பாட்டியாக, பராந்தகன், சுந்தரசோழனின், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசோழன், முதலாம் இராசராசன் ஆகிய ஆறு மன்னர்களின் ஆட்சிவரை இறைப் பணியிலும் கலைப்பணியிலும் ஈடுபட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்றவர் செம்பியன் மாதேவி. அவரின் முழு வாழ்க்கை […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, இணைந்து எழுதியவர் கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு வெளியீடு, விலை 275ரூ. புலியாக மாறிய ஒரு பூனையின் கதை To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023852.html வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனைவி ஒருத்தி, மிகவும் தாராளமாகத் தன் நகைகள் அனைத்தையும் தாலிபான்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டாள். கணவன் திரும்பி வந்து நடந்ததை அறிந்ததும் சொல்லொணாக் கோபம் அவனுக்கு. ஒரு நாள் கிராமத்தில் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. அந்த ஓசை கேட்டு அந்தப் பெண் அழத் தொடங்கியிருக்கிறாள். […]

Read more

நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், கலைமாமணி எஃப் சூசை மாணிக்கம், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ. குத்துமதிப்பாய்ப் போட்ட மதிப்பெண்கள் தேர்வு விடைத்தாளை முறையாகத் திருத்தி மதிப்பெண் போடப்படவில்லை. மொத்தமாக விடைத்தாளின் மூலையில் 28 என்று போடப்பட்டிருக்கிறது, மாணவர் எதிர்பார்ப்பு அறுபதுக்கு மேலே, கேட்டிகிறார். ஆசிரியரின் பதில் இது, “டேய்! நீ பெரியசாமி மகன்தானே… உனக்கு அவ்வளவுதானடா மார்க் போட முடியும். உன்னாலே இருபத்தெட்டு மார்க்தாண்டா எடுக்க முடியும். மடப்பய மவனே, உட்காருடா.” இப்படி ஒரு நிலை இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. பிறப்பை […]

Read more

ஜோன் ஆஃப் ஆர்க்

ஜோன் ஆஃப் ஆர்க், தமிழில் சி. ஜெயாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. உயிருடன் எரிந்த உத்தமப் பெண்மணி என்றைக்குமே பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் போராடும் குணமுள்ளவர்களை விட்டு வைப்பார்களா என்ன? பதினைந்தாம் நூற்றாண்டில், தன்னுடைய பத்தொன்பது வயதில், பிரிட்டனுடன் மோதிப் பிரான்சு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டான் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைச் சூனியக்காரி என்று முத்திரை குத்தி உயிரோடு எரித்துக் கொன்றது ஆண்களின் அதிகார வர்க்கம். பிற்காலத்தில், 1920ம் ஆண்டில் இந்தப் பெண்மணிக்குக் கிறிஸ்துவத் திருச்சபையினரால் புனிதப் பெண்மணி என்ற […]

Read more

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. புதுக்கோட்டை வெங்கட்ராமன் தமக்கு வயதாகிவிட்டது என்பதையே உணராமல், சென்னையிலும் வெளியிடங்களிலும் நடைபெறுகிற இலக்கிய நிகழ்வுகளில் எப்போதும் இளமை உற்சாகத்தோடு பார்வையாளராகப் பங்கேற்கிறவர் பி.வி. என்று நண்பர்கள் வட்டத்தில் அறியப்படுகிற கண்ணபிரான் அச்சகம் வெளியிட்டது டிங்டாங் சிறுவர் வார இதழ். இதன் ஆசிரியராக இருந்த வடமலையழகன்தான் இந்த பி.வி. டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.வி. இவர் கேரள மாநிலம் கொச்சினிலும் புதுக்கோட்டையிலும் மதுரையிலும் பணியாற்றியபோது, […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 225ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-459-2.html ரயில் வண்டியில் ஒரு தொழிற்சாலை சீனாவில் ஷ்யாங்கே நகரத்திலிருந்து கடலில் நகரும் தொழிற்சாலையாக ஒரு கப்பல் புறப்படுகிறதாம். நியூயார்க் செல்லும் வழியில், நிற்கும் இடங்களிலெல்லாம் பொருட்களை வாங்கிச் சேகரித்து, அவற்றைக்கொண்டு கப்பலிலேயே உற்பத்தியை முடித்து, நியூயார்க்கில் முழுமையடைந்த பொருட்களாக விற்பனை செய்கிறார்களாம். இப்படி உற்பத்தி நேரம், பயண நேரம் இரண்டையும் ஒன்றாக்க முயற்சிக்கிறார்களாம். நீண்ட ரயில் பாதைகள் உள்ள நம் நாட்டில் […]

Read more

ஆலமரம்

ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-5.html இளைப்பார ஓர் ஆலமரம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்காக ஏங்கிக் கிடக்கும் கணிசமான வாசகர்களை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் திருப்திப்படுத்தும். ஆயிரம் பக்கங்களில் ஒரு நாவலைப் படிக்க யாருக்கு இப்போதெல்லாம் அவகாசம் இருக்கிறது ? என்ற கேள்வியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் துணிவோடு படிக்கத் தொடங்கிவிட்டால் போதும். அன்று கடல் போல் சொத்துடன் ஒற்றையாக நின்ற அம்புஜம்! […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. மன்னனின் பூந்தோட்டம் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. அய்யர் ஆங்கிலத்தில் எழுதி த.நா. சேனாபதியின் தமிழாக்கத்தில் வெளிவந்தது சாணக்கியரும் சந்திரகுப்தனும் என்ற அரிய நூல். முதல் பதிப்பு வெளியாகி முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 இல்தான் அந்த நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஆங்கில மூலத்தையும் தமிழாக்கத்தையும் பலமுறை படித்து அதில் மனம்தோய்ந்த பட்டுத்தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நூலின் மீதான […]

Read more
1 2 3 4 5 12