பேரரசன் அசோகன்

பேரரசன் அசோகன், சார்லஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, விலை 400ரூ. ‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல். அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவனது மனச்சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்து போகிற அளவுக்கு பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. […]

Read more

தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்

தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள், தமிழில் ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக். 56, விலை 40ரூ. பயண ஆசையில் தேசம் தேசமாக சுற்றித் திரிந்தவர் மார்க்கோபோலோ. அவ்வாறு பயணம் செய்தபோது தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் உணர்ந்தவற்றையும் விளக்கமாக எழுதி வைத்துள்ளார். அப்படி இவர் எழுதியுள்ள தமிழ்நாட்டு பயணக் குறிப்புகளும், அதன் முன் – பின் பயணங்களான இலங்கை, குஜராத் போன்ற இடங்களில் அவரின் அனுபவக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டு தமிழில் தரப்பட்டுள்ளன. நன்றி: குமுதம், 21/12/2016.

Read more

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ. நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும்வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் தூண்டுகிற போது […]

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

பேரரசன் அசோகன்

பேரரசன் அசோகன், சார்லஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, விலை 400ரூ. ‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல். அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச் சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்துபோகிற அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. […]

Read more

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. கவிதை அதன் சிந்தனையின், அனுபவத்தின் ஆழத்தையே பலமாகக் கொண்டிருக்க வேண்டும். எதையும் பிரசாரம் செய்கிற மனோபாவம் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பாக நீதி போதனை அறவே கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். இதில் பிரான்சிஸ் பிரமாண்டமாகத் தனித்துத் தெரிகிறார். அவரது கவிதைகள் முழுமையான பயிற்சியால் காணக் கிடைப்பவை. அனுபவ உலகத்தை புறம், அகம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானது அல்ல. சமுத்திரமும், நிலமும் […]

Read more

எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் […]

Read more

சிச்சிலி

சிச்சிலி, லீனா மணிமேகலை, நற்றிணை பதிப்பகம், விலை 100ரூ. லீனாவின் 100 காதல் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. கவிதை உலகின் எந்த நிலப்பரப்பையும் கடந்து வெளிவரக்கூடிய அசாத்திய திறமை கூடிய கவிதைகள். வாழ்வின் எந்த ரகசியங்களுக்குள்ளும் அகப்படாத காதலின் பக்கங்கள் வீரியமாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. அனுபவப்பட்ட, துரோகத்தில் இழைந்த, பிரியப்பட்ட காதலின் உணர்வுகளைப் படிக்க நேர்வதே ஒரு அனுபவம். இதுவரை நாம் கண்டுவந்த காதலின் பிதற்றலான பக்கங்கள் துறக்கப்பட்டு, ரத்தமும் சதையுமான உண்மை முன்வைக்கப்படுகிறது. படிக்கும்போது லீனாவோடு உரையாட முடிகிறது. அவரிடம் பாசாங்குகள் […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கவிஞர் ஞானக்கூத்தன், இமையம், அ. ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப்பருவம் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இதன் மூலம் அக்காலத்தில் நிலவி வந்த பள்ளிக் கல்வியையும் அவை இக்காலத்தில் எப்படியெல்லாம் உருமாறி வந்துள்ளது என்பதையும் அறிய வைத்திருப்பது சிறப்பு. நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம், துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, பக். 291, விலை 300ரூ. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் களப்பிரரே. பாண்டிய வேந்தர்கள் இல்லை என்றும் களப்பிரர் வந்தேறி இனக்குழுவினர் என்றும், பாண்டியர் இனக்குழுவினரை அகற்றி அரசு உருவாக்கியவர்கள் என்றும், பல ஆதாரங்களுடன் பேசும் நூல். ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more
1 2 3 4 5 6 9