விடை தெரிந்த மர்மங்கள்,

விடை தெரிந்த மர்மங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. தோன்றி நாள் முதல் எத்தனை எத்தனையோ மர்மங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டு சுன்று கொண்டிருக்கிறது இந்த உலகம். மறைந்து கிடக்கும் இந்த மர்மங்கள் பலவற்றுக்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அவற்றுள் விடை தெரிந்தவற்றின் தொகுப்பு. படிக்கப் படிக்க, மர்மக் கதையைப் படிப்பது போன்ற சுவாரஸ்யம் எட்டிப்பார்க்கிறது. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், கவிஞர் ஈழபாரதி, இனிய நந்தவனம், விலை 80ரூ. காதலும் வேதனையும் மட்டுமே கவிதைகள் ஆவதில்லை. சாதலும் புலம் விட்டுச் சென்று மனம் நோதலும்கூட ஆழமான கவிதைகளாய் உருவெடுத்து மனதை அசைக்கக் கூடும் என்று நிரூபிக்கும் வண்ணம், புலம்பெயர்ந்தோர் எழுதிய கவிதைகளை ஆய்வு செய்து அதில் மறைந்திருக்கும் வலியைப் படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

நேரம்

நேரம், வெ.இறையன்பு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை 50ரூ. நேரம் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் நகர்தலுக்கு ஏற்ப நமது நகர்தலுக்கான திட்டமிடலைச் செய்தால், நேரம் இல்லை என்ற பிரச்னையே வராது. காலத்தை நம் கைப்பிடியில் வைத்துக் கொண்டு கணக்கிட்டு செயலாற்றும் வழியை சீராகச் சொல்லித் தந்திருக்கிறார் இறையன்பு. இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர், எஜமானர், வேலைக்காரர், மாணவர், இல்லத்தரசி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமே பயன்தரக்கூடிய அற்புதமான புத்தகம். -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ், நிலா காமிக்ஸ், வி 145ரூ. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அந்த வரலாற்றுப் புதினத்தை, அழகழகான படங்கள், சுவாரஸ்யமான டயலாக்குகளுடன் படக்கதையாகத் தரும் வித்தியாசமான முயற்சி. மாதம் இருமுறை என அத்தியாயங்களின் தொடர் வெளியீடாக வருமாம். காமிக்ஸ் பிரியர்களைக் கண்டிப்பாகக் கவரும். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை(சிறுவர் கதைகள்), மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளின் இலக்யி உலகின் கதவு, கதை கேட்பதில்தான் திறக்கிறது. பாட்டிகள் கதை சொல்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் குழந்தைகளுக்காக குட்டிக் குட்டி கதைகளை சுவாரஸ்யம், நகைச்சுவை, புத்திசாலித்தனம் கலந்து சொல்லி அவர்களின் இலக்கியக் கதவைத் திறந்திட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். படிக்கும் குழந்தைகள் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். சிந்திப்பார்கள். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

விடை தெரியாத மர்மங்கள்

விடை தெரியாத மர்மங்கள், குன்றில் குமார், குறிஞ்சி, விலை 110ரூ. இப்படிக்கூட நடக்குமா? இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? இவையெல்லாம் உண்மையா? வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இந்த மாதிரி விடைதெரியாத ஆச்சரியமூட்டும், திகிலான, நம்பவே முடியாத அதேசமயம் நிஜமாகவே நடந்த நிகழ்சிகள் இந்த உலகில் எத்தனை எத்தனையோ உண்டு. அவற்றில் சில அரிய நிகழ்வுகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. செந்தமிழ் நூல்களுள் பழமையும் இனிமையும் வாய்ந்தது புறநானூறு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றின் எளிமையும், அதில் மணக்கும் தமிழின் சீர்மையும் காலவளர்ச்சியில் படிப்பார் இன்றி மங்கிவிடாமல் தடுப்பதற்கான அரிய முயற்சியாக எழுதப்பட்டுள்ள நூல். புறநானூற்று நூல்களைப்பற்றி அறிந்தவர் அறியாதவர் என எல்லோரையும் கவர்ந்திழுக்கும் எளிய நடை. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள், பி.ஆர்.நடராஜன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை150ரூ. திருப்பூர் என்றதுமே கொடிகாத்த குமரனின் நினைவுதான் எல்லோருக்கும் வரும். கொடுங்கோல் அரசு புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப்போரில் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் உள்ளிட்ட பல தியாகிகளின் வரலாற்றுத் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

வனநாயகம்

வனநாயகம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வனம் மிகுந்து ஊர் சிறுத்து இந்த காலத்தில் நம் மனத்து இருந்த நிம்மதியும், இயற்கை அளித்த கொடையும் நிறைந்து இருந்தது. வனம் அழிந்து ஊர்களானதில் வெளிச்சம் வெளியே வந்து மனதின் உள்ளே இருட்டு பரவி விட்டதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இறையன்பு. தினம் தினம் வனம் அழிகிறது. அதனால்தான் மனிதனின் வாழ்நாளும் வேகமாக கழிகிறது என்ற உண்மை, கனக்கிறது. கூடவே, வனம் வளர்த்து வருங்காலத் தலைமுறைக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் படமாகத் […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், த.சித்தார்த்தன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. மனித இனம் பெருகிக்கொண்டு இருக்கிறது. அதேசமயம் மண்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. இருப்பவர்க்கே இயற்கையால் ஈடுதரமுடியாத சூழலில் இனி வருபவர்க்கு என்ன வளம் மீதம் இருக்கும்? இனியாவது இயற்கையைச் சீழிப்பதை நிறுத்தி அதைக் காப்போம் என சமுதாய அக்கறையுடன் வலியுறுத்தும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more
1 10 11 12 13 14 57