வேத வாழ்வில் பெண் குரல்

வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115. வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன. வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் […]

Read more

பாழ்நிலப் பறவை

பாழ்நிலப் பறவை, லீலாகுமாரி அம்மா, இரா.பாவேந்தன், கோ.நாகராஜ், சந்தியா பதிப்பகம்,  பக்.120; ரூ.115. கேரளாவின் காசர் கோடு மாவட்டத்தில் முந்திரி விளைச்சலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிகளை ஒழிக்க ஹெலிகாப்டரிலிருந்து எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அது காற்றில் பரவி, ஆடு, மாடுகளை, மனிதர்களைக் கொன்றது. சிறுவர், சிறுமிகளை முடமாக்கியது. இது மாத்ரு பூமி நாளிதழின் புகைப்படக் கலைஞர் மதுவின் முயற்சியால் பரவலான மக்களுக்குத் தெரிய வந்தது. அரசுப் பணி செய்து கொண்டிருந்த, ஒரு குடும்பத் தலைவியான லீலாகுமாரி அம்மாவுக்கும் தெரிந்தது. அவர் மக்களைத் […]

Read more

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், மொழிபெயர்ப்பு சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் மகத நாட்டு எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த சாணக்கியர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் கரைகண்டவர். அவர் ‘கௌடில்யர்’ என்கிற பெயரில் சமஸ்கிருத மொழியில் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலின் நுணுக்கங்கள் இன்றளவும் அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளால் விவாதிக்கப்படுகின்றன. இது தவிர வாழ்வியல் குறித்தும் சில நீதி சாஸ்திரங்களை எழுதி இருக்கிறார் சாணக்கியர். அவற்றில் பிரதானமானது சாணக்கிய நீதி. இந்நூல் அந்தரங்க வாழ்க்கைக்கு ஒரு […]

Read more

சங்கப் பனுவல்கள்

சங்கப் பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் குறிப்பிடும் திணைக்கோட்பாடு சார்ந்த ஒன்பது கட்டுரைகள். சில சொற்கள் காலமாறுபாட்டில் எப்படிப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை விளக்கும் கட்டுரை வித்தியாசமானது. சங்ககால பண்பாட்டையும் அறிய உதவும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026982.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு

சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு, சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், பக்.136, விலை ரூ.135. ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுபவை கி.மு.550 முதல் கி.பி.600 வரை படைக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு காலங்களின் பல்வேறு வாழ்நிலைகளைச் சித்திரிக்கும் இந்தப் பாடல்களில் கூறப்படுபவை, தொடக்க காலத்தில் படைக்கப்பட்ட பாடல்களிலிருந்து கடைசியில் படைக்கப்பட்ட பாடல் வரை ஒன்றாகவே இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவற்றிற்கு உரையெழுதியவர்கள், பதிப்பித்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின், அவர்களின் கருத்துநிலையில் இருந்துதான் சங்க […]

Read more

காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், டாக்டர் அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. மகாத்மா காந்தி எனும் மாமனிதர் இளம் தலைமுறையினருக்கு விட்டுச்சென்ற பாடங்கள் அடளவிட முடியாதவை. இந்திய வரலாற்றில் ஆழமாக பதிந்திருக்கும் அவரது வாழ்க்கைச் சுவடுகளை கட்டுரைகளாக தொகுத்து நூலாக்கப்படுகிறது. அத்துடன் காந்திய வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்த தலைவர்கள் மற்றும் நாட்டை கட்டமைத்த மகான்கள் பலரை பற்றிய கட்டுரைகளையும் கொண்டிருக்கும் இந்த நூல், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய சிந்தனையாளர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நன்றி:தினத்தந்தி, 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சைவ வைணவப் போராட்டங்கள்

சைவ வைணவப் போராட்டங்கள், சிகரம் ச.செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை 165ரூ. இந்தியாவின் பிற மொழிகளில் வடமொழி வேதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதுபோல் தமிழில் இல்லாமைக்கு காரணம், இங்கே சைவ, வைணவ சமயங்களும் அவற்றின் வழியாக கிடைக்கப்பெற்ற சமய இலக்கியங்களும்தான் சங்க காலம் தொடங்கி, சைவ – வைணவ சமயங்களின் செல்வாக்கு குறித்தும், நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இவ்விரு சமயங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026495.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

சாஅய்

  சாஅய், சாமானியன், சந்தியா பதிப்பகம், விலை 95ரூ. கவனம்கோரும் கவிதை கோ.சாமானியன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு சாஅய். பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு கடவுள் மேல் எழும் தார்மீகக் கோபம், கணேஷ் பீடியும் கடன் தொல்லையுமாய் தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டும் கலைஞனின் வறுமை, தமிழர்களை சக அடிமைகள் என விளிக்கும் அறச்சீற்றம் என ஆரம்பநிலைக் கவிஞர்களின் முதல் தொகுப்பில் இருக்கும் சமூகக் கோபமும் அதே அளவிலான சமூக அக்கறையும் நிறைந்த தொகுப்புதான் இது. முதல் தொகுப்பிலேயே கவனம் ஈர்க்கும் கவிஞராக இருப்பதால் […]

Read more

வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், சந்தியா பதிப்பகம், விலை 600ரூ. தமிழகக் கோயில்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை’. பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே,காவிரிக் கரையிலே, பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளில் ஐந்து பாகங்களாக இந்நூலில் வெளிவந்தது. வடநாட்டுக் கோயில்களைப் பற்றி, ‘வடவேங்கடத்துக்கு அப்பால்’ என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார் பாஸ்கரத் தொண்டைமான். வேங்கடம் முதல் குமரி வரையின் ஐந்து பாகங்களையும் ஒரே தொகுப்பாக சந்தியா பதிப்பகம் […]

Read more

காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.144, விலை ரூ.135. தினமணியில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும், அவரின் தியாக வாழ்கையைத் தெரிந்து கொள்ளவும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன. காந்தியுடன் இணைந்து செயல்பட்ட நேரு, பட்டேல், ராஜாஜி ஆகியோருக்கும் காந்திக்கும் இருந்த உறவு, முரண்பாடுகள் என அனைத்து விஷயங்களையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு, ஓமந்தூரார், அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் குறித்த பல […]

Read more
1 2 3 4 5 6 11