ஸ்ரீவேதாந்த தேசிகர்(1268-1369)

ஸ்ரீவேதாந்த தேசிகர்(1268-1369), ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்-750, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.300. வேதாந்த தேசிகரின் 750-வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வெளியீடு இது. வில்லூர் நடாதூர் கருணாகராசாரியாரைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் இப்புத்தகத்தில், வேதாந்த தேசிகரின் திவ்யசரிதம், தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் அருளிய நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் என 37 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வேதாந்த தேசிகரின் வாழ்வில் அங்கம் வகித்த திருத்தலங்களின் புகைப்படங்கள் இப்புத்தகத்துக்கு அழகுசேர்க்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 28/9/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், புலவர் நன்னன், நன்னன் குடி வெளியீடு, விலை: ரூ.400 நன்னனின் 95-வது பிறந்தநாளையொட்டி வெளிவந்துள்ள இத்தொகுப்பில், திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், தமிழறிஞர்கள், சட்டத் துறையினர், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் என்று பலரும் அவரைக் குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நன்னன் தம்மைப் பற்றி எழுதியவையும் அவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளும் இதில் அடக்கம். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தமிழாசிரியராகவும், பின்பு கல்லூரிப் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் கல்வித் துறையில் தடம்பதித்தவர் நன்னன். தொலைக்காட்சியின் வாயிலாக […]

Read more

நன்மாறன் கோட்டைக் கதை

நன்மாறன் கோட்டைக் கதை, இமையம், க்ரியா வெளியீடு, விலை 225ரூ. பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், உரை: வ.சு.செங்கல்வராய பிள்ளை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை ரூ.2500 (மூன்று தொகுதிகளும் சேர்த்து) முருகவேள் திருமுறை அருணகிரிநாதரின் திருப்புகழ், தமிழிசையின் பெருஞ்சொத்து. அருணகிரிநாதர் பாடியது 16,000 பாடல்கள் என்று கூறப்பட்டாலும் தற்போது அவற்றில் கிடைப்பது ஏறக்குறைய 1,300 பாடல்கள் மட்டுமே. அவற்றைத் தேடித் தேடி அலைந்து சேகரித்து வெளியிட்டவர்கள் வடக்குப்பட்டு சுப்ரமணியபிள்ளையும் அவரது மகன் வ.சு.செங்கல்வராயரும். தனது வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்புகழ் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட செங்கல்வராயர், சைவத் திருமுறைகளைப் போல திருப்புகழையும் பன்னிரு திருமுறைகளாக வகுத்து உரையெழுதினார். அவற்றை 1950-களில் கோபாலபுரம் மீனாட்சி கல்யாணசுந்தரம் […]

Read more

நம் காலத்துக் கவிதை

நம் காலத்துக் கவிதை, (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்), விக்ரமாதித்யன், படைப்புப் பதிப்பகம், விலை: ரூ.150 . கவிதை எழுதுபவர்கள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் கவிதை விமர்சகர்கள் அருகிவருகிறார்கள். எனினும், பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதுடன் கவிதை விமர்சனங்களும் எழுதிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். முன்னோடிகள், தன் சம வயது கவிகள் பற்றி எழுதுவதுடன் இளம் கவிகளைப் பற்றியும் தொடர்ந்து ஆதுரத்துடன் எழுதிவருகிறார். அவரது கவிதை விமர்சன நூல்களின் வரிசையில் தற்போது இந்நூல் வெளியாகியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் தொடங்கி தற்காலக் கவிஞர்கள் பிரான்ஸிஸ் கிருபா, அ.வெண்ணிலா இன்னும் இளைய கவிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார். […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம்

உயிர் வளர்க்கும் திருமந்திரம், கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 180ரூ. திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப் பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதிவரும் கட்டுரைகளின் முதல் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து,  21/9/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி

லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி, தொகுப்பு ஓ.பி.ஸ்ரீவத்சவா, ரீலிசம் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, விலை 395ரூ. கன்னட சினிமாவின் புதுயுக விற்பன்னர்களில் தலைசிறந்தவரான கிரிஷ் காசரவல்லி திரைப்படங்கள் வழியாகத் தனித்துவம் மிக்க சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்திய விதம் குறித்துப் பேசும் புத்தகம் இது. 1975-ல் தொடங்கி 2015 வரை சுமார் 40 ஆண்டுகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என மொத்தம் 18 படைப்புகளை மட்டுமே வழங்கியிருந்தபோதிலும், காசரவல்லியின் படைப்புகள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக இன்றும் நீடிப்பவை. சரவல்லி கன்னட இலக்கியத்தின் ஆழத்தை, […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]

Read more

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் வெளியீடு, விலை 150ரூ. ரசனை முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாகி துண்டுத் துண்டாகி கொதிக்கும் சாம்பாரில் குதித்து கும்மாளமிட்ட கிழங்குகள் விளைந்த வயல்களிலிருந்து இமெயில்கள் வந்தவண்ணமிருக்கின்றன நடனம் எப்படி இருந்தது எனக் கேட்டு விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள் பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மிக மிக ருசியாக இருந்ததென்று. கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் […]

Read more
1 30 31 32 33 34 44