உலகை உலுக்கிய வாசகங்கள்

உலகை உலுக்கிய வாசகங்கள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 432, விலை 200ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு உலகை உலுக்கிய வாசகங்கள் என்ற தலைப்பில் தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடர்ந்து 101 வாரங்கள் எழுதி வந்தார். அந்தத் தொடர் இப்போது தந்தி பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. சிந்தனையாளர், ஆன்மிகவாதிகள், அறிவியல் அறிஞர்கள், சங்க காலப் புலவர்கள் வழங்கிய பொன்மொழிகளைக் கூறி அதற்கு ஆழ்ந்த விளக்கம் அளித்துள்ளார். உலகின் முதல் புரட்சியாளர் புத்தர், ஆர்க்கிமிடிஸ், சாக்ரட்டீஸ், ஸீஸர், சீன […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், பிரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 170ரூ. ஆண், பெண் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அக்கட்டுரைகளின் மூலம் தனது பால்ய காலம் தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம் பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூலாசிரியர் பிரியா தம்பி. காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்று கூறுவார். ப்ரியாவின் […]

Read more

முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ. ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., தொகுப்பு வெ. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. திரை உலகிலும், அரசியல் வானிலும் அசைக்க முடியாத இடத்தை பெற்றவர். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது பெருமைகள், சிறப்புகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா இயக்குநர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளை வெ. குமரவேல் தொகுத்து வழங்கியுள்ளார். ஏழைகளிடம் எம்.ஜி.ஆர். காட்டிய பரிவு, வீடு தேடி வந்தவர்களுக்கு அவர் அளித்த விருந்தோம்பல் பண்பு, தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 500ரூ. தமிழ் இலக்கியத்தில், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்புக்கு உரியவை அவ்வையாரின் நீதி நூல்கள். ஆயினும், அவ்வையார் என்ற பெயருடன் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பற்றியும், அவர்களுடைய படைப்புகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவ்வையார் பற்றி விரிவான ஆய்வுகள் செய்து, 683 பக்கங்கள் கொண்ட இந்த பெருநூலை எழுதியுள்ளார், முனைவர் தாயம்மாள் அறவாணன். எட்டு அவ்வையார்கள் இருந்ததாக, இவர் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார். சங்க கால அவ்வையாரின் வாழ்க்கை […]

Read more

பொன்மொழிகள்

பொன்மொழிகள், தந்தை பெரியார், திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 30ரூ. தந்தை பெரியார் பொன்மொழிகள் பெரியார் ஈ.வே.ரா. பொன்மொழிகள் கொண்ட புத்தகம், 1949-ம் ஆண்டு திருச்சி திராவிடமணி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அதை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்தது. பின்னர் 1979-ல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தத் தடையை அ.தி.மு.க. அரசு நீக்கியது. தடை நீக்கப்பட்ட புத்தகத்தை, இப்போது திராவிட கழகம் வெளியிட்டுள்ளது. அரசியல், மதம், கடவுள், சமுதாயம் இயக்கம், ஆட்சி, மொழி முதலான தலைப்புகளில் பொன்மொழிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கும் […]

Read more

காலத்தை வென்ற கலாம்

காலத்தை வென்ற கலாம், செயின்ட் பிரிட்டோ கல்விக் குழுமம் வெளியீடு, சென்னை, விலை 70ரூ. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றி நிறைய புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை செயின்ட் பிரிட்டோ கல்விக்குழுமம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ் எழுதிய காலத்தை வென்ற கலாம் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். கலாம், திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்தவர். அந்த முறையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ். […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்ற இசைபாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 175ரூ. ஆச்சாரியார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், சங்கீத மூர்த்திகள் போன்ற அருள் பெற்ற மகான்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக, பிரபந்தங்களாக, விருத்தங்களாக, கீர்த்தனைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் புகழ்பெற்ற ஆதி சங்கரர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் தொடங்கி புரந்தரதாஸர் அருணாசலக் கவிராயர், வள்ளலார், திருமூலர், தாயுமானவர், அவ்வையார் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும், அதோடு அவர்கள் எழுதிய பாடல் வரிகளையும் சொல்லி கோவை எஸ்.எஸ். பாரத்வாஜ் நம்மை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம்

சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம், விலை 160ரூ. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ப. மாணிக்கம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, அவர் நிகழ்த்திய உரைகளை சேகரித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- நம்மால் முடியாதா?, மணிகண்டன், நூலாசிரியர் காட்டுப்பையூர், விலை 50ரூ. அன்பு, பாசத்தை தாய், தந்தையிடம் செலுத்துவதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பிரடெரிக் எங்கெல்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 20ரூ. கம்யூனிசத்தை […]

Read more

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ. சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் […]

Read more
1 110 111 112 113 114 223