சகத்திப்பூ

சகத்திப்பூ, ஆம்பல் கனகராஜ், தீவிகா பதிப்பகம், விலை 150ரூ. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கும் நாவல். ஒவ்வொரு நாளும் நாளைய பிழைப்பைத் தேடி உண்மையாய் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி இந்த நாவலில் ஆம்பல் கனகராஜ் சித்தரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள், காளீஸ்வரி பதிப்பகம், விலை 110ரூ. மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பைத் தரக்கூடியவை. அந்த சித்தர்கள் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மூலிகை மருத்துவ […]

Read more

புதிரா புனிதமா

புதிரா புனிதமா, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. பாலியல் (செக்ஸ்) பற்றிய சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதில் அளித்து பரபரபப்பு உண்டாக்கியவர் டாக்டர் மாத்ருபூதம். அவர் அளித்த பதில்கள் நூல் வடிவம் பெற்றுள்ளது. புதுமண மக்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   பதினெண் சித்தர்களின் ஞான பாடல்கள், யோக சித்தர் மானோஸ், மணி புத்தக நிலையம், விலை 150ரூ. கருத்துச் சுரங்கமான சித்தர் பாடல்களை ஒரு முறை படிக்கும்போதும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தெய்வீக சுரங்கம். இதனை […]

Read more

சிறுவர்களுக்கான மகாபாரதக் கதை

சிறுவர்களுக்கான மகாபாரதக் கதை, தமிழாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, நற்பவி பிரசரம், விலை 90ரூ. மகாபாரதக் கதை எளிய தமிழில் முழுமையான சுருக்க வடிவில் சிறுவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் தொகுத்துள்ளார். வருணனைகள், அணி வகைகள், சொல் நயங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் காட்சிகளாக அமைத்திருப்பதன் மூலம் சிறுவர்களுக்கு இந்த நூலை படிக்க தூண்டுகிறது. அனைவரும் படித்து மகிழ வேண்டிய பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.

Read more

கிள்ளை மொழி

கிள்ளை மொழி, கவிஞர் பெ. பெரியார் மன்னன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 95ரூ. கவிஞர் பெ. பெரியார் மன்னன் எழுதிய 79 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. அணில், கரும்பு, முயல் போன்ற தலைப்புகளில் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. “எங்க வீட்டு மீன் தொட்டி வந்து பாருங்கோ! கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கடலைப்பருங்கோ!” “ஒற்றுமையாய் வாழ்வதுவே ஒருமைப்பாடு! உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்திடும் நாடு!” என்பன போன்ற இனிய பாடல்கள். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.

Read more

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 70ரூ. மறைந்த ஜனாதிபதி, பாரத ரத்னா, ஏவுகணை நாயகர் அப்துல்கலாம், மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அதே சமயம் மனதைத் தொடுகிற விதத்தில் எழுதியுள்ளார் விருதை ராஜா. நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மனிதர்களின் அலட்சியங்களும் தீர்வுகளும், சா.ஜெயக்குமார், மணிமேகலைப்பிரசுரம், விலை 70ரூ. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனால், அவனுடைய வாழ்க்கையை இன்பமாகவும், சிறப்பானதாகவும் அமைத்து கொள்ள முடியவில்லை என்பதற்கு விடையளிக்கும் நூலாக […]

Read more

பாகுபலி தொடக்கத்திற்கு முன் – சிவகாமி பர்வம்

பாகுபலி தொடக்கத்திற்கு முன் – சிவகாமி பர்வம், ஆனந்த நீலகண்டன், தமிழாக்கம் மீரா ரவிசங்கர், விலை 299ரூ. பாகுபலி தொடக்கத்திற்கு முன் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், “பாகுபலி 2” வெளிவந்து, வசூலில் புரட்சி செய்து வருகிறது. ரூ. 500 கோடியில் தயாரித்த படத்திற்கு, ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல். இந்தப்படத்தில் சிவகாமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சிவகாமியின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதத்தில் “சிவகாமி பர்வம்” என்ற இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிவகாமிக்கு ஐந்து வயதாகும்போது அவளுடைய தந்தை […]

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

நந்திபுரத்து நாயகன்

நந்திபுரத்து நாயகன், டி.கே. இரவீந்திரன்,  விகடன் பிரசுரம், விலை 330ரூ. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் தப்பிய நந்திவர்மன் இரண்டு ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களுடன் போரிட்டு வென்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறினான். இந்தக் கருவை மையமாகக் கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து விறுவிறுப்பான நாவலைப் படைத்துள்ளார் டி.கே. இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பன்முக நோக்கில் தொல்காப்பியம்

பன்முக நோக்கில் தொல்காப்பியம், வா.மு.சே. ஆண்டவர், லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. தமிழில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதுபற்றி, பல்வேறு தமிழறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார், முனைவர் வா.மு.சே. ஆண்டவர். தமிழின் அருமை, பெருமை பற்றி இந்நூலில் வா.மு.சே. ஆண்டவர் எழுதியிருப்பதாவது “உலகத்தின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர், 90 வயது ஆகியும் மொழியியல் ஆராய்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் நேர்ம்ச்ம்ஸ்கி என்ற அமெரிக்க அறிஞர், உலகின் பழமையான மொழிகள் இரண்டு என்றும், அதில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் […]

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. உழவுத்தொழிலுக்கு அடிப்படையானவை காளைகள். அத்தகைய காளைகளை தெய்வமாக மதித்து அதனோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள்தான் ஜல்லிக்கட்டு. அதைப் பற்றி இந்த நூலில் எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார். விலங்குகளுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பு பற்றியும், அவர்களின் போலித்தனமான செயல்பாடுகள் குறித்தும் அவர் இந்த நூலில் எடுத்துரைக்கிறார். நமது பாரம்பரியங்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை இந்த […]

Read more
1 64 65 66 67 68 223