இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், கே.எஸ். சுப்பிரமணியன், பக். 80, விலை 50ரூ. ஜெயகாந்தனின் முக்கிய பரிமாணங்களாக பரந்த மனித நேயம், மானுடத்தில் ஆரோக்கிய நம்பிக்கை, அறிவு நேர்மையில் விளைந்த கம்பீரம், மனித உள்ளத்தின் ஆழங்களில் நிழலாடும் மெல் அதிர்வுகளை படம் பிடிக்கும் லேசர் பார்வை, ஆன்மிகச் சாய்மானத்தை முன்னிறுத்திய அறிவியல் கண்ணோட்டம் உள்ளிட்ட சிறப்புகளைக் குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா, சி. காந்தி, ஜாசிம் பப்ளிகேஷன், பக். 200, விலை 300ரூ. செல்லப்பிள்ளைகளாய் வளர்த்தும், செல்லும் இடங்களிலெல்லாம் ரசித்தும் மக்கள் பரவசப்படும் பறவைகளின் பரிணாம வளர்ச்சிகளையும், கோட்பாடுகளையும் அவற்றின் உடலியக்கத்தில் உள்ள அற்புதமான அறிவியல் அருமைகளையும் உள்ளடக்கிய நூல் இது. பண்டைய காலம்தொட்டு தூதாக, அமைதியின் அடையாளமாக, இலக்கிய அங்கமாக, விளையாட்டுப் பொருளாக, பந்தயம் நடத்த, ஆரூடம் பார்க்க, புராணப்புனைவுகளில் இறை வாகனங்களாக, மூதாதையரின் நினைவூட்டிகளாக வாழ்ந்து, இன்றும் நாகரிக அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் விளங்கும் பறவையினத்தின் வரலாறு பயில பயில வியப்பைத்தரும். […]

Read more

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம்

ரிப்லெக்ஸாலஜி: தொடு சிகிச்சை மருத்துவம், பெரில் கிரேன், கண்மணிசுப்பு, கண்ணதாசன் பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. நோய்கள் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நோய்கள் வந்து முற்றிடும் வரை பலர் அதற்கு முக்கியத்துவம் தந்துவிடுவதில்லை. இன்றைய அறிவியல் யுகத்திலும், உலகளாவிய பலவற்றை அறிந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளையோ, அவற்றின் இயக்கத்தையோ, பலவீனத்தையோ அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மருத்துவத்தின் மீதான அச்சமும் செலவினங்களும் அச்சம் தருவதாகவும் அமைகின்றன. ஆனால், கி.மு., காலத்திலேயே நம்மவர்கள் உடல் தகுதியில் நாட்டமுள்ளவர்களாக இருந்து, ஒவ்வொரு உறுப்புக்கும் உகந்த மூலிகை மருத்துவத்தில் வல்லுனர்களாக […]

Read more

ஓஷோ உயர் வேதம்

ஓஷோ உயர் வேதம், ஓஷோ, கே.என்.ஸ்ரீனிவாஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 560, விலை 360ரூ. வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள் எத்தனை நேர்ந்தாலும் அவற்றை நினைவில் கொள்ளாமல் எப்படி வெல்வது என்பதை ஆணித்தரமாய் அஞ்ஞானிகளுக்கு விரித்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கம். இன்றைய சமுதாயம் எதிர் கொண்டுள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், வெகு அவசரமான சமூக பிரச்னைகளுக்கும் விடை தேடும் தனி நபர்களின் தாகத்தை தணிக்க கூடியதாய் விளங்குகிறது. வாழ்க்கை முறைகள் பற்றியும், தியானங்கள் […]

Read more

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!,

ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!, கா.சே. மணவாளன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 206, விலை 160ரூ. சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நாம் நன்கு வாழ நம் வாழ்க்கையை மாண்பு உடையதாக செய்து கொள்ள பெரிதும் உதவும். ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள், தியாக சீலர் கூரேசர், முதலியாண்டான் எம்பாரும், ராமாநுசமும், பட்டரும்,ந ச்சீயரும், நஞ்சீயரும் நம்பிள்ளையும் போன்ற தலைப்புகளில் ராமானுஜர் மற்றும் வைணவ சமய சான்றோர் பற்றி பக்தி மணம் கமழ சொல்லி சொல்கிறார் மணவாளன். […]

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ. ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை. ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது […]

Read more

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும்

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், காந்தலட்சுமி சந்திரமவுலி, செங்கை பதிப்பகம், பக். 248, விலை 150ரூ. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்…’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, உழவுத் தொழிலின் மேன்மை குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் இந்நூல் பல புதிய செய்திகளை தருகிறது. நாம் உண்ணும் உணவிற்குப் பின்னால் பெயர் தெரியாத பலரின் அரிய சக்தியும், உழைப்பும் இருப்பதை இந்நூல் விளக்குகிறது. 18ம் நூற்றாண்டில் செயற்கை உரம் தயாரிக்கப்பட்டதன் சூழ்நிலை குறித்தும் (பக். 27), விவசாயம் செய்வதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும், ‘விவசாயம் […]

Read more

அறிவோமா பிரம்ம சூத்திரம்

அறிவோமா பிரம்ம சூத்திரம், வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதி பதிப்பகம், பக். 216, விலை150ரூ. இந்திய நாட்டில், ஆன்மிக பொக்கிஷங்களாக இருப்பவை உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்று பெரியோர் கூறுவர். இம்மும்மணிகளில் பிரம்ம சூத்திரம் வியாச முனிவரால் எழுதபட்டு, பின் ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், மத்வர் ஆகிய மூவரால் உரை விளக்கங்கள் எழுதப்பட்டன. இந்நூல், ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய வடமொழி உரையை, மிக எளிய தமிழில், யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிவந்து உள்ளது. வேதங்கள் கர்ம காண்டம், பிரம்ம காண்டம் என்று […]

Read more

கணிதம் கற்பித்தேன்

கணிதம் கற்பித்தேன், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 170ரூ. ஆசிரியர் கல்வியாளர்களுக்குத் தமிழில் ஒரு மூல வளநூலாக அமைந்து, கணிதம் கற்பிப்பதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகப் பயன் தரும். இதை இன்றைய கல்வியியல் கல்லூரிகளில் பாட நூலாகப் பயன்படுத்தலாம் என்கிறார் இந்நூலாசிரியர். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள்

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். இலட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 228, விலை 150ரூ. பழையாறை மாநகரின் ஒரு பகுதிதான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தை பின்பற்றியே அமைந்திருப்பதை படங்களுடன் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 6.8.2017.

Read more
1 112 113 114 115 116 240