அப்பாவின் கதை

அப்பாவின் கதை, நடின் கார்டிமர், தமிழில் பட்டு எம். பூபதி, ராஜராஜன் பதிப்பகம், பக். 328, விலை 125ரூ. நடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற, புகழ்மிக்க தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவல் அப்பாவின் கதை. இது நிறவெறி காலனி ஆதிக்க அதிகாரக் கொடுமையை எதிர்த்துப் போராடும் ஆப்பிரிக்க மக்களின் கதை. ஓர் ஆணுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையில் மலரும் அன்பு, ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் உள்ள அன்பு, ஒரு மனிதனை அவன் தேசத்தின் இனத்தின் அடிமைத்தளையினை […]

Read more

சின்னாலும் ஒரு குருக்கள்தான்

சின்னாலும் ஒரு குருக்கள்தான், ஆ. சிவராஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 236, விலை 150ரூ. திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. பள்ளர், பறையர், அருந்ததியினர் என, மூன்று முக்கியமான ஜனத்தொகை அதிகமுள்ள தலித் உட்பிரிவுகளில், அருந்ததியினரே எல்லா விதத்திலும் மிக மோசமாகப் பின்தங்கி உள்ளனர் என்பது, இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் புரியும் கசப்பான உண்மை. மண்ணின் மைந்தர்களான சின்னான், குப்பாயி, வெள்ளச்சி, நல்லச்சி, அருக்காணி முதலிய குகைச்சித்திரங்களும், மாதாரிகளை ஆட்டிப் […]

Read more

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன், விகடன் பிரசுரம், பக். 616, விலை 240ரூ. இந்த நாடு, இந்த மொழி, இந்த பிரதேசம், இந்த காலம் என்ற வரையறையை வைத்துக் கொள்ளவில்லை சரவணன். விவரமாக சொல்வதை விட, விறுவிறுப்பாக சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், வங்கத்தைச் சேர்ந்தவர். வேதங்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றிலிருந்து, விதவை மறுமணத்துக்கு ஆதரவான கருத்துகளைத் திரட்டி புத்தகமாக வெளியிட்டவர். அவர், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ‘கேர்’ என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கப்போனார். பூட்ஸ் அணிந்த […]

Read more

பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய […]

Read more

சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ. பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை […]

Read more

கொங்கு வேளிர் மரபு

கொங்கு வேளிர் மரபு, எஸ்.ஆர்.சுப்ரமணியம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 263, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-431-6.html காவிரியால் பாசனம் செய்வித்த இளைய நாயக்கர். கொங்கு நாடு மிகத் தொன்மையான வரலாறு உடையது. சங்ககாலம் துவங்கி, இன்று வரையும் தனித்ததோர் அடையாளத்தோடு, விளங்கி வந்துள்ளது. அத்தகைய கொங்கு நாட்டின் பெருமையையும், மேன்மையையும் உணர்த்தும் வகையில், பல்வேறு சான்றாதாரங்களோடு, நூலாசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். இதை ஒரு வரலாற்று ஆவணமாக படைத்திருப்பது இதன் தனித்தன்மையை காட்டுகிறது. அரிதின் முயன்ற சேகரித்து […]

Read more

புத்தர்பிரான்

புத்தர்பிரான், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம். போதி பகவன், என்றும், போதி மாதவன் என்றும் இன்னும் பல்வேறு நாமங்களில் போற்றப்படும், புத்த ஞாயிறு பற்றி எழுத்தாளர் கவுதம நீலாம்பரன் எழுதியிருக்கும் புத்தகம், புத்தர் பிரான். சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, புத்தரை பற்றி எழுதியுள்ள பலரது நூல்களில் இருந்தும் வேறுபட்டு புத்தரது அனைத்து பரிமாணங்களையும் பதிவு செய்துள்ள நூல் இது. இந்த நூலில், புத்தர் குறித்து, நமக்கு நடைமுறை வாழ்வில் தெரிந்த, ஆனால் அமதன் அர்த்தங்கள் விளங்காத, பல அபூர்வமான செய்திகள், அனைவரும் புரிந்து […]

Read more

மதராஸ் 300

மதராஸ் 300, தமிழில் சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், பக். 480, விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-400-5.html சென்னப் பட்டணம் பெயர் எப்படி வந்தது? சென்னை நகர் தோன்றிய, 300வது ஆண்டு நிறைவை ஒட்டி, 1949ல் வெளியான மலரில் இடம்பெற்றிருந்த, 50 கட்டுரைகளில், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, எம்.சி.எல்.எம்.சிதம்பரம் செட்டியார், பி. சாம்பமூர்த்தி, பி.ஜெ.தாமஸ், ஜோசப் ப்ரான்க்கோ, டாக்டர் முகமது உசைன் நயினார் போன்ற பல அறிஞர்கள், ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், […]

Read more

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும், ராம்குமார், மணிமேகலை பிரசுரம், பக். 272, விலை 170ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-454-5.html உலகில், மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது, நதிகளின் கரைகளில்தான். நம் பாரத தேசத்தில் வடக்கில் துவங்கி தெற்கு முனை வரை ஆயிரக்கணக்கான நதிகள் பாய்கின்றன. அவற்றின் கரைகளில் எண்ணிறந்த கோவில்கள். அந்த நதிகளின் தோற்றுவாய் பற்றியும், அங்கு அமைந்துள்ள புண்ணிய ஷேத்திரங்கள், அங்கு தோன்றிய கோவில்கள் பற்றி எவ்வளவோ புராண கதைகள். இந்த நூலாசிரியர் மிக முயன்று, அவை […]

Read more

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி, சேதுராமன் சாத்தப்பன், விஜயா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. தொழில் முனைவோரை, தைரியமாக ஏற்றுமதியாளராக்கும் ஆரம்பகட்ட வழிகாட்டியாக இந்த நூல் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் ஏற்றுமதி சாத்தியக்கூறுகள், பொருட்கள், ஏற்றுமதியாளராவதற்கான அடிப்படை தேவைகள், முக்கியமான இணையதள முகவரிகள், விலை நிர்ணயம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில், எந்தெந்த மாவட்டத்தின் என்னென்ன ஏற்றுமதி பொருட்கள் கிடைக்கின்றன; வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் மற்றும் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் முகவரிகள் போன்றவை தரப்பட்டு உள்ளன. ஏற்றுமதியாளர்களால், வேதமாக கருதப்படும் சர்வதேச […]

Read more
1 166 167 168 169 170 240