தோட்டாக்கள் பாயும் வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி, ந.பெரியசாமி, புது எழுத்து வெளியீடு, விலை 70ரூ. மதுவாகினியின் சுவடுகள் பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்கள் மூலம் பெரியசாமி கட்டியெழுப்பும் காட்சிகள் அசாதாரணமானவை. இறந்தவர்களெல்லாம் பறவைகளாகிவிடும் மரணமற்ற ஊர், ஆசிரியரைக் கேலிச்சித்திரமாக்கும் சிறுமி. தற்கொலைக்கு முயல்கிறவனுக்குக் குழந்தைகளாகத் தெரியும் ரயில்பெட்டி, பசுவின் நிழலை வளர்ப்பவன், மேகத் துண்டைத் தலையணையாக்கும் சிறுவன், துணை வானத்தைச் சிருஷ்டிக்கும் சிறுமி, அக்டோபர் முதல்நாள் திக்விஜயம் செய்யும் காந்தி… என்று மாறுபட்ட காட்சிகள் வழியே பரந்துபட்ட தளத்தில் நமது வாசிப்பை சாத்தியப்படுத்துகிறார். […]

Read more

இல்லாதது இருத்தல்

இல்லாதது இருத்தல்,  ஆங்கில மூலம் நகுலன், தமிழில் தஞ்சாவூர்க்கவிராயர், அனன்யா வெளியீடு, தஞ்சாவூர், விலை 50ரூ. நகுலனின் தனித்திணை சி.சு.செல்லப்பா கொண்டுவந்த எழுத்து இதழ் மூலம் புதுக்கவிஞராகவும் சிறுகதையாளராகவும் அறிமுகமானவர் நகுலன் என்ற டி,கே. துரைசாமி. இவரது ஆங்கிலக் கவிதை நூலான நான் பீயிங் (non being) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. நகுலன் படைத்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், அவ்வளவிலும் நகுலன் தன்மை என்ற ஒன்றை சாத்தியப்படுத்தியவர் அவர். மனிதன் இருக்கிறான். சில நேரம் தன்னை மறந்து இல்லாமல் இருக்கும் நிலையிலே மனம் சலித்தபடியும் […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-375-4.html மாற்றுக் கல்விக்கான விதை தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங்களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் […]

Read more

மகனுக்கு மடல்

மகனுக்கு மடல், மருத்துவர் நா. ஜெயராமன், அபெகா வெளியீடுதி , புதுக்கோட்டை, விலை 80ரூ. சொல்லப்பட வேண்டிய நன்றிகள் மகனுக்கு மடல் எனும் இந்தப் புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா. ஜெயராமன் ஹாங்காங்கில் படிக்கும் தன் மகள் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்கள். ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதம் என்று ஐந்து கடிதங்களைக் கொண்டது. உயர்கல்வி என்ற நீண்ட கடிதத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டிய நன்றி குறித்து இடம் பெற்றிருக்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. குடும்ப வாழ்வில் உறவுகளைச் செம்மைப்படுத்திக் […]

Read more

குரல்வளையில் இறங்கும் ஆறு

குரல்வளையில் இறங்கும் ஆறு, அய்யப்ப மாதவன் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 120, விலை 100ரூ. அய்யப்ப மாதவனின் சமீபத்திய தொகுப்பு குரவளையில் இறங்கும் ஆறு. கவிதைக்கான தனியான பிரயத்தனங்களை அய்யப்ப மாதவன் கொண்டிருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் உறங்கிவிட்ட இரவில் ஒரு நாளை, அதுவரையிலான தன் வாழ்வை நினைத்து உறங்காமல் கிடந்து நினைவில் ஓட்டிப் பார்க்கிறார். எங்கோ செல்ல நினைத்து, கடைசியில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு தற்காலிக மரணத்துக்குத் தயாராகிறார். இவ்வாறான தன் அனுபவங்களை எல்லாம் கவிதைக்குச் சொல்கிறார். எதிர்வினையாற்றாத கண்ணாடியில் […]

Read more

அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. கதைகளாக வேண்டிய கட்டுரைகள் யுகமாயினி இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். உண்மையில் பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிக மிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. […]

Read more

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், வெளி ரங்கராஜன், அடையாளம் வெளியீடு, திருச்சி, விலை 100ரூ. அசலானவர்களின் ஆவணங்கள் நாடகத்துக்காக நாடகவெளி என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். பேரா. இராமானுஜம் இயக்கிய வெறியாட்டம் நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்து நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்பகோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் […]

Read more

ரோஜா நிறச்சட்டை

ரோஜா நிறச்சட்டை, அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-0.html அன்றாடத்தின் கதைகள் ஆசிரியரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. புரியாத பிரச்சினை கதையில் இன்றைய தவிர்க்க முடியாத இருபாலர் கல்வி, தலைமுறை இடைவெளி போன்ற விவகாரங்கள் அலசப்படுகின்றன. மற்ற ஆடவருடன் யதார்த்தமாக மகள் பழகுவதைப் பார்த்து தந்தை பதறுகிறார். சந்தேகிக்கிறார். கடன் கொடுத்தவன் கலங்கும் விதம் சொல்கிறது இருபது ரூபாய் கதை. துக்கடா விஷயங்கள் என்று நாம் கருதுபவை, […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html பெண்மையின் வெளிப்பாடுகள் சங்கக் காலம் முதல் பக்தி இலக்கியக் காலம் வரை தமிழ் கவிதையில் இயங்கிய நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகளும், உரைகளும் கொண்ட தொகுப்பு இது. அஞ்சியத்தின் மகள் நாகையார், ஆதிமந்தியார் தொடங்கி ஆண்டாள் வரை கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சாதாரண வாசகர்களும் கவிதைகளைப் படித்து ரசிக்கும் வகையில் […]

Read more

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்

விடியலை நோக்கி முடிவற்ற பயணம், த.ஜெ.பிரவு, ஜெ. அனிதா பிரபு, சென்னை, விலை 250ரூ. லட்சியங்களின் தோல்வி இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை எழுதியுள்ளது த.ஜெ.பிரபுவின் நாவல் இது. நாவலின் கதைக்களமும் அந்தத் துறைதான். ஆறு அங்கங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், 1980களுக்கு உயிர்கொடுத்திருக்கிறது. எண்பதுகளில் தமிழகத்தில் தொழிற்சங்க அரசியல் தீவிரமாக இரந்த காலகட்டத்தில் அதுசார்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகள், நிர்வாகங்களின் எதிர்வினைகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசியல் சார்ந்த லட்சியக் கனவுகளைச் சிதறடிக்கும் யதார்த்தத்தை இந்தப் படைப்பின் வழியாக விரிவாகப் பேசுகிறார் த.ஜெ.பிரபு. […]

Read more
1 26 27 28 29 30 36