எந்த வானமும் உயரமில்லை

எந்த வானமும் உயரமில்லை, ரமணன், ரீம் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட், புதுடெல்லி, விலை 25ரூ. சொந்தச் சிறகுகளால் தன்னடக்கம், எளிமை, பரிவு ஆகியவை ஆன்மிகத்துக்கான அடையாளங்கள், அல்லல்களுக்கு இடையே ஆள்தொலைந்து போகாமல் இருப்பதே வாழ்வதாகும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ரமணன். புல்லினும் அற்பமானது கவலை என்கிற அவர், கவலையைச் சரவெடி போல உருவகிக்கிறார். ஒரே ஒரு திரி, நூறு வெடிகள் என விளக்கவும் செய்கிறார். ஒருபோதும் நம்மை நாமே கைவிடலாகாது என்று உற்சாகமும் ஊட்டுகிறார் அவர். சாதாரண மனிதர்களை ஆன்மிகத்தை நோக்கி அடியெடுத்து […]

Read more

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?

குஜராத் மக்களின் வாழ்வு, நலவாழ்வா? நரக வாழ்வா?, ஜி.ஆர். இரவீந்திரநாத், சமூக மகத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், சென்னை, விலை 20ரூ. குஜராத் நலமா? குழந்தைகளின் நலம்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தின் அளவுகோல். பிறந்து ஒரு வருடத்துக்குள் இறந்துபோகிற குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு நாட்டின் மருத்துவ அக்கறையை மருத்துவ அறிஞர்கள் எடைபோடுகின்றனர். ஏதோ விதி முடிந்து போச்சு. செத்துபோச்சு என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சொல்ல முடியும்? அதென்னப்பா வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் விதி முடிய மாட்டேங்குது? என்று குறுக்குகேள்வி கேட்கும் […]

Read more

நஞ்சுண்டகாடு

நஞ்சுண்டகாடு, குணா கவியழகன், அகல் வெளியீடு, சென்னை, விலை 135ரூ. உள்ளேயிருந்து ஒரு குரல் இலங்கையில் நடந்த போரில் இணைந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் அதற்காகக் கொடுத்த விலையின் மதிப்பு என்னவென்பதை விரிவாகச் சொல்லி அது சரிதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்ற நாவல். பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்ட இந்நாவல் விடுதலைப்புலிகளின் அனுமதி மறுப்பு, அதன்பின்பு ஆசிரியரின் முள்வேலி முகாம் வாழ்க்கை ஆகியவற்றால் தடைப்பட்டுத் தற்போதுதான் அச்சேறியிருக்கிறது. காட்டு முகாமில் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களைப் பற்றிய விவரிப்பே இந்நாவல். கடுமையான […]

Read more

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள்

அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ். ஆர். விவேகானந்தம், கே.கே. முனியராஜ், வந்தவாசி, விலை 60ரூ. இறைநிலைக்குச் சென்ற மனிதர்கள் மனத்தின் போக்கில் சென்று அதன் பயணத்தை முழுமையாக உணர்ந்து, நல்லது கெட்டது அறிந்து, வாழ்வென்னும் நிலையாமையைப் புரிந்துகொண்டவர்கள் சித்தர்கள். சித்தர்களின் அற்புதங்கள் கேட்க கேட்கத் திகட்டாதவை. ஆனால் அவை மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மனிதனாகப் பிறந்தவர்கள் இறைநிலையை அடையும் வழிமுறைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றையும் சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படியானவர்களில் பலர் அறியப்பட்டுள்ளனர். சிலர் அறியப்படவேயில்லை. ஆகவே, அருப்புக்கோட்டைப் பகுதியின் அறியப்படாத சித்தர்களை அறிமுகப்படுத்துவதை […]

Read more

நடன மங்கை

நடன மங்கை, சுரேஷ் குமார் இந்திரஜித், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-3.html தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு நடன மங்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மௌனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மௌனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துக்கள் […]

Read more

அவரவர் கை மணல்

அவரவர் கை மணல், ஆனந்த்-தேவதச்சன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-2.html ஒரு வாய் நீரும் ஒரு தருணமும் இன்றைக்குத் தமிழில் பல கவிதைத் தொகுப்புகள் வெளியாகின்றன. சில தொகுப்புகளுக்கு மட்டும் தனித்துவமான மொழியும் பொருளும் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில தொகுப்புகள் மட்டுமே புதிய போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில் 1981ல் வெளிவந்த அவரவர் கை மணல் முக்கியமானது. 80களின் தொடக்கத்தில் எழுத வந்த தேவதச்சன், ஆனந்த் ஆகியோரின் கவிதைகள் அடங்கிய […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. தேவை ஒரு சுயமதிப்பீடு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இடதுசாரி மாத இதழான மன்த்லி ரெவ்யூ தனது முதல் ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை தொகுப்பாக வெளியிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், சே. குவேரா, நோம் சாம்ஸ்கி என்று நன்கறியப்பட்ட ஆளுமைகளும் அமெரிக்காவின் முன்னணி இடதுசாரி அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பை ச. சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சோஷலிசம் எதற்கு என்ற தலைப்பில் ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை, கட்டற்ற […]

Read more

மஹாபாரதம்

மஹாபாரதம், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 320ரூ. எல்லோருக்குமான பாரதக் கதை இந்தியாவின் பிரதான இதிகாசங்களில் ஒன்று மகா பாரதம். இதன் பிரதான கதையும் கிளைக்கதைகளும் படிப்போரைப் பரவசப்படுத்துபவை. மகாபாரதக் கதையைப் படிக்க எல்லோரும் விரும்புவது இயற்கை. ஆனால் மகாபாரத வாசிப்பு அசுர உழைப்பைக் கோருகிறது. முழுக் கதையையும் படிக்க வேண்டும். ஆனால் எளிதாகவும் விரைவாகவும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் அனைவருள்ளும் எழும். இந்த ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் மஹாபாரதம் என்னும் நூலை வழங்கியுள்ளது. […]

Read more

நொச்சி

நொச்சி அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு – ஆவணம், பரிசல் வெளியீடு, சென்னை, விலை 130ரூ. நொச்சி நூலில் 28 பதிப்பாளுமைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தவிர 27 பதிப்பாளுமைகள் தொடர்பான தகவல் குறிப்புகளையும் தொகுத்து பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளனர். தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பது இதுவரை ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரப்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆறுமுக நாவலர், இரா. இராகவையங்கார் போன்ற செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் மட்டும்தான் பதிப்பாளர்கள் என்ற பிம்பம் தொடர்ந்து நிறுவப்பட்டுக்கொண்டே […]

Read more

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், அடையாளம், புத்தாநத்தம், விலை 320ரூ. பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள் இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ்ரேலிய ஆதரவாளராக வளர்க்கப்பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண்ணமே அவருக்கு இருந்துள்ளது. 1982ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை […]

Read more
1 27 28 29 30 31 36