கடலும் கிழவனும்

கடலும் கிழவனும், எர்னஸ்ட் ஹெமிங்வே, மொழிபெயர்ப்பு ச.து.சு.யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியாளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால் அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா […]

Read more

வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, கோவை, விலை 100ரூ. மழையுடன் ஒரு பந்தம் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று மழையின் கருணையைப் பாடிச் சென்றான் தமிழ் மறை தந்த வள்ளுவன். மழையைப் பாடாத கவிஞனே இல்லை. கவிஞர்களுக்கும் மழைக்குமான உதற முடியாத இந்த பந்தத்தை ச. மணியின் கவிதைகள் நமக்குப் பரிமாறுகின்றன. மழையையும் அது தந்துவிட்டுப்போன அனுபவங்களையும் மீட்டெடுக்கும் கவிதைகளால் நிறைந்த இத்தொகுப்பில், நனைந்தும் நனையாத நினைவுகளால் உறைந்து நிற்கும் காட்சிகள் கம்பீரமான எளிமையுடன் சடசடக்கின்றன. […]

Read more

ஜென் தொடக்கநிலையினருக்கு

ஜென் தொடக்கநிலையினருக்கு, ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரன் ஜோசிபோவிச், விளக்கப்படங்கள் நவோமி ரோஸன் பிளாட், தமிழில் சேஷையா ரவி, அடையாளம் பதிப்பகம், பக். 162, விலை 160ரூ. நீர்ச் சறுக்கு விளையாடும் ஜென் குரு காட்சி ஊடகத்தின் தாக்கத்தினால் வாசிப்பு மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே போகிறது எனும் மனக்குறை தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக உள்ளது. இந்நிலையில், இளம் தலைமுறையினரிடம் வாசிப்பை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பல முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. தொடக்க நிலையினருக்கு எனும் அடிக்குறிப்போடு புத்தகங்கள் வெளிவருவது அந்த […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், தமிழில் பெரு. முருகன், இரா. செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023804.html அறிவின் புதிர்களைத் தேடி பாரிசில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் அதன் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார். அவர் இறக்கும் நேரத்தில் தனது வயிற்றில் ரத்தம் கொண்டு சில சின்னங்களையும் ரகசிய எண்களையும் எழுதிவைத்து இறக்கிறார். அவர் விடுத்திருந்த புதிரை அவிழ்க்க மத அடையாளங்கள் மற்றும் குறியீடுகளை ஆராயும் சரித்திரப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் அழைக்கப்படுகிறார். […]

Read more

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள்

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை. சீனச் சுவடுகள் சீனாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கும் நூல் இது. சீனப் பெருமைவாதம், இந்திய தற்பெருமைவாதம், சீன அதிசயங்களில் இந்தியா உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சீனாவுக்கு பவுத்தத்தை அளித்த இந்தியாவுடன் அதற்கு இருக்கும் தொன்மையான உறவை இந்நூல் பல உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. சீனா மீது இந்தியர்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் மீதும் இந்நூல் கவனம் குவிக்கிறது. சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் […]

Read more

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள்

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள், ச. சிவலிங்கம், புலம் வெளியீடு, விலை 180ரூ. இரு துருவங்களின் இணைப்பு சாதியின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பைப் பற்றிதான் எவ்வளவு விவாதங்கள்! சாதியும் வர்ணமும் மனித நாகரிகத்துக்கு இந்தியா அளித்துள்ள கொடை என்று உலகத்திடம் விவாதிக்கிற இந்திய அறிவாளிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும், நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தலித் சுயமரியாதை சக்தியின் மூலமாக மக்கள் பணியாற்றும் இந்த நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி ஆசிரியரும்கூட. அவர் இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர். ஆனால், சமூகப் […]

Read more

உல்லாசக் கப்பல் பயணம்

உல்லாசக் கப்பல் பயணம், கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024753.html உல்லாசக் கப்பல் பயணம் ஓர் அனுபவம் ஆசியாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்து மக்கள் மத்தியிலும் கேளிக்கைகள் மற்றும் உல்லாசச் சுற்றுல்லாக்கள் இக்காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் க்ரூஸ் என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் மேற்கொண்ட பயண விவரங்களைச் சற்று கற்பனை கலந்து இந்நூலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருத்திகா எழுதியுள்ளார். ஒரு உல்லாசக் கப்பல் எப்படியிருக்கும் என்பதைச் சராசரி மக்கள் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ. பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் […]

Read more

எட்டு கதைகள்

எட்டு கதைகள், இராஜேந்திர சோழன், வம்சி புக்ஸ், விலை 100ரூ. சிறந்த சிறுகதைகள் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை, மேலை நாடுகளிலிருந்துதான் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் சுவீகரித்தோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. போன்ற சாதனையாளர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சிறுகதை தொடக்க நிலையிலேயே உயிர்ப்பையும் வளத்தையும் நுட்பங்ககளையும் பெற்றுவிட்டது. தமிழின் வளமான சிறுகதை மரபின் தொடர்ச்சியாக, இரோஜந்திர சோழன் எழுதி,  எண்பதுகளில் வெளியான எட்டு கதைகள் சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்டது. மனிதனின் கோணல்களையும் பிறழ்களையும் நுட்பமாகப் பேசிய அசலான சிறுகதைக்காரர் இராஜேந்திர சோழன். வடக்குத் […]

Read more

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள்

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 340, விலை 260ரூ. அனுபவங்களின் வழியே ஒரு பயணம் பயண அனுபவங்களைப் பதிவு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் தொடங்கிவிட்டது. வெளியுலகம் தொடர்பான செய்திகளைத் தனி மனிதர்களின் பயணங்கள்தான் உள்ளூர் மக்களிடம் கொண்டுசேர்த்தன. தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே பயணக் கட்டுரைகளும் எழுதப்பட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 1960கள் வரை எழுதப்பட்ட பயணக் கட்டுரைகளின் […]

Read more
1 24 25 26 27 28 36