சோசலிசம் தான் எதிர்காலம்

சோசலிசம் தான் எதிர்காலம், டாக்டர். ரெக்ஸ் சற்குணம், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூகத்தின் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் துறைக்கு வெளியே எட்டிப் பார்ப்பதும், சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதும் மிகவும் குறைவு. இவர்களிடமிருந்து டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மாறுபட்டவர். மருத்துவத் துறையிலும் மார்க்சியத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் இயங்கிக்கொண்டிருப்பவர். தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை மருத்துவத்துறையிலும் மக்கள் நல்வாழ்வைப் பேணும் நடவடிக்கைகளிலும் பயன்படுத்துபவர். முதலாளித்துவம் ஊதிப்பெருத்து ஏகாதிபத்தியமாகத் தலைவித்திதாடும் இந்தக் காலக்கட்டத்தில் ‘சோசலிசம்தான் எதிர்காலம்’ என்று இந்த நூலின் மூலம் டாக்டர் ரெக்ஸ் […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத் தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவைதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் […]

Read more

யுகங்களின் தத்துவம்

யுகங்களின் தத்துவம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 170ரூ. மனிதகுல வரலாற்றை ஒரு தத்துவப் பார்வையில் அருணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். வரலாறு வட்டமடிக்கிறதா அல்லது மேல்நோக்கி வளர்ந்து செல்கிறதா? யுகங்கள் என்ற இந்திய மரபு எதைக் கூறியது? ஆதிமனிதன் யுகம், ஆண்டாள் யுகம், நிலப்பிரபு யுகம், முதலாளித்துவ யுகம் என்று செல்கிற மனிதச் சமூகத்தின் வரலாற்றில் இந்தியாவில் ஏன் முதலாளித்துவம் மற்ற நாடுகளில் வளர்ந்த பாணியில் வெளிவரவில்லை? இந்தியாவில் அடிமை முறை இருந்ததா, இல்லையா? என்ற தேடுதலில் எழுந்த கேள்விகள் என ஒரு […]

Read more

யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால்

யார் வாழ்வார்கள் மதச்சார்பற்ற இந்தியா வீழ்ந்தால், நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டில் ஃபவுண்டேசன் வெளியீடு, மதுரை, நன்கொடை 50ரூ. இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்? ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள். இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் […]

Read more

முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ. ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே […]

Read more

சங்கீத மும்மணிகள்

சங்கீத மும்மணிகள், உவே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 292, விலை 180ரூ. தமிழ்த் தாத்தாவும் இசையும் இசைக்கு இசையாத மனித மனம் ஏதுமில்லை. சாகாவரம் பெற்ற இசையும் இசைவாணர்களும் என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்படிப்பட்ட இசைவாணர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அரிது. அதுபோன்ற அரிதான பதிவுகளில் ஒன்றுதான் தமிழ்த்தாத்தாவின் ‘சங்கீத மும்மணிகள்’ நூல். தாத்தாவின் இசைப்பணி தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேடித் தேடி சேகரித்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் ‘கலைமகள்’ இதழில் எழுதிய இசை மேதைகள் மூவர் […]

Read more

சோளகர் வாழ்வும் பண்பாடும்

சோளகர் வாழ்வும் பண்பாடும், அ. பகத்சிங், எதிர் வெளியீடு, விலை 50ரூ. பழங்குடி வாழ்க்கைக்கு உள்ளே… To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022649.html பழங்குடிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகின் இரண்டாவது நாடு. ஆப்பிரிக்க கண்டத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மக்கள் தொகையில் எட்டு சதவீதத்துக்கும் மேலே பழங்குடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரையறைகள் ஒன்றும் அவ்வளவு அக்கறையுடன் கூடிய துல்லியமானவையாக இல்லை. அவர்களுக்கான திட்டங்களோ சட்டங்களோ போதுமான அளவுக்கு அமலாவதில்லை. இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களும் தமிழகத்தில் 36 வகையான பழங்குடி இனங்களும் […]

Read more

அந்த நாள் ஞாபகம் கலைமாமணி சி.டி. ராஜகாந்தம்

அந்த நாள் ஞாபகம் கலைமாமணி சி.டி. ராஜகாந்தம், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், உடுமலைப்பேட்டை, பக். 55, விலை 100ரூ. சி.டி. ராஜகாந்தம் : திரை வரலாற்றின் ஒரு பகுதி எம்.ஜி.ஆரால் ஆண்டவனே என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகையால் தயாரிக்கப்பட்ட வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட தியாகராஜ பாகவதர் மரணப்படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழைம்பெரும் நகைச்சுவை […]

Read more

பேராசிரியர் நன்னர்

பேராசிரியர் நன்னர், பேராசிரியர் ப. மருதநாயகம், ஏகம் பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நன்னனைத் தெரிந்துகொள்ள… தமிழ் மொழி இலக்கணம், கல்வியியல், பெரியாரியல், உரைநடையியல் என 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் நன்னன். தூய்மையான தமிழில் பேசுவது மற்றும் எழுதுவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவரும்கூட. அவரது ஆளுமை, புலமை, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை உள்ளடக்கி பேராசிரியர் ப. மருதநாயகம் இந்த நூலை எழுதியுள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணை நூல்களை மட்டுமே எழுதிவந்தவர் நன்னன். தனி […]

Read more

ரசிகமணி ரசனைத் தடம்

ரசிகமணி ரசனைத் தடம், தொகுப்பாசிரியர் பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 250ரூ. கம்பராமாயணத்தை இன்று தமிழக மக்கள் அறிவதற்கும் ரசிப்பதற்கும் காரணமாக இருந்தவர் ரசிகமணி டி.கே.சி. 1881ல் பிறந்து 1945ல் மறைந்த டி.கே.சிதம்பரநாத முதலியார் தமிழிசை இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்.கடித இலக்கியம் மற்றும் கட்டுரைகளால் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தவர். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசியில் வசித்படி, தமிழகம் முழுவதும் இருந்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ரசனையாளர்களை தன் வீட்டில் வரவேற்று உபசரித்து மகிழ்ந்த புரவலரும்கூட. தமிழில் கடித இலக்கியம் […]

Read more
1 23 24 25 26 27 36