பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், பேராசிரியர் இரா.மோகன், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. நெஞ்சை அள்ளும் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பல்வேறு பகுதிகளைச் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம், காப்பியத்திறன் என அனைத்தையும் எளிய தமிழில், இனிய நடையில் பதம் பிரித்து, இதமாய்த் தந்திருக்கும் புத்தகம். படிக்கப் படிக்க சிலம்பின் சிறப்பு மனதுக்குள் மகுடமாய் உயர்கிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027591.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120, இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.முத்தமிழ், மூவேந்தர்,மூன்று தலைநகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.பண்டிய மன்னன் அரசவையில் […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2)

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2), உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், விலை 180ரூ. ஏற்கனவே வெளியான சோழ சிரஞ்சீவி கரிகாலன் என்ற நாவலின் 2 வது பாகமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் முடிவடைந்ததில் இருந்து தொடங்கி, சோழத்தில் உத்தம சோழரின் ஆட்சி தொடங்கியது வரை பயணிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினை சிறப்பாக விவரித்து உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 120, விலை ரூ.80. திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது, அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார். காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? என்று கூறும் அப்பெண்மணி, அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி, இவர்களைப் போல […]

Read more

தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. அருந்தமிழ் அன்று முதல் இன்றுவரை கவிதையாய் நடைபோட்டு வந்திருக்கும் நல்லிலக்கிய நூல்களில் இடம்பெற்ற தனிச்சிறப்பான வரிகளின் வர்ணனையாய் விளக்கக் கட்டுரைகள். செந்தமிழ்த் தேரில் செம்மாந்து உலாவரும் உவகை, பக்கங்களைப் புரட்டுகையில் மனதைப் பரவசப்படுத்துகிறது. அருந்தமிழ் விரும்பிகளுக்கு அற்புதமான விருந்து. நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027343.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள் குறித்து அவர் எழுதிய ‘ஒழுக்கம்‘ தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு ‘ஒளவையார்‘ ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி‘ உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது. உதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும்வாழ்க்கைத் தேவை […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஒழுக்கத்தின் மேன்மை, திருக்குறளின் பெருமை, அவ்வை பாட்டியின் தமிழ்த்தொண்டு உள்ளிட்டவை கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான ஆசிரியர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துரைத்துள்ளது அழகு. நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்,வானதி பதிப்பகம், பக்.504, விலைரூ.400. குறிப்பிடத்தக்க இஸ்லாமிய படைப்பாளிகளான ஜெய்புன்னிசா, தாழை மதியவன், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப், மு.சாயபுமரைக்காயர், நசீமா பானு, மீரான் மைதீன், சல்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலருடைய படைப்புகளில் காணக் கிடைக்கும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி பேசும் நூல். 77 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் பெண்ணுரிமை தொடர்பான இஸ்லாமிய நெறி என்ன என்பதைப் பல கட்டுரைகள் விளக்குகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில் நிறைய ஆண்கள் கொல்லப்பட்டதால், பெண்கள் […]

Read more

காக்க காக்க உடல் நலம் காக்க

காக்க காக்க உடல் நலம் காக்க, டாக்டர் பெ.போத்தி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ. கால்நடை மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இந்நூலாசிரிர், மனிதனைத் தாக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள், உடல்நலம் காக்க உன்னத வழிகள், நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்’ போன்ற நூல்கள் வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் இந்நூலையும் இயற்றியுள்ளார். பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள், […]

Read more
1 5 6 7 8 9 22