அகலாது அணுகாது

அகலாது அணுகாது, ஆ.மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக்.156, விலை 100ரூ. காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்… மதுரை காவல் உதவி ஆணையாளரும், எழுத்தாளருமான முனைவர் மணிவண்ணனின் கைவண்ணத்தில் உருவான முத்தான கவிதைகளின் தொகுப்பு இது. வாழ்வியல், அறம், மனம், இறைவன், பொருள், காதல், தன்னம்பிக்கை என, பல பக்கங்களை ஒரே நுாலில் தொட்டிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராய மண்டபத்தில் திடீர் தீ விபத்தில் உயிர்துறந்த புறாக்களுக்கு இந்நுால் சமர்ப்பணம்’ என்ற வித்தியாசமான சிந்தனையுடன் ஆரம்பிக்கும் நுாலின் முதல் […]

Read more

ஏர்வாடியம்

ஏர்வாடியம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 176, விலை 125ரூ. பிரபல எழுத்தாளரும், கவிதை உறவு ஆசிரியருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய பார்வையை தரும் எளிமையான நுால் இது. அவரோடு நெருங்கி பழகிய இலக்கிய இணையர்கள், இரா.மோகனும், நிர்மலா மோகனும், ‘ஏர்வாடியம்’ படைத்திருப்பது இன்னும் தனிச்சிறப்பு. இதுவரை, 104 புத்தகங்கள் எழுதியுள்ள, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை ஏர்வாடியார். நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை என, பல பரிமாணங்களில் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் கோலோச்சுகின்றன. அதை தனித்தனி அத்தியாயங்களாக பிரித்து படிக்க […]

Read more

ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள்

ஸ்ரீ அழகிய சிங்கனின் அற்புத ஆலயங்கள், கைலாசம் சுப்ரமண்யம், சீ.சுந்தரம், வானதி பதிப்பகம், விலை 300ரூ. திருமாலின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாகக் கருதப்படும் நரசிம்மருக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் அமைந்துள்ள 200 -க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பற்றிய அரிய தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. பிரகலாதனை காத்தருளவும், ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும் அவதரித்த நரசிம்மர் பற்றிய விஸ்தாரமான குறிப்புகள், நரசிம்மர் ஆலயங்களின் தனித்தன்மை ஆகியவற்றைத் தந்து இருப்பதோடு, நரசிம்மர் நிகழ்த்திய அற்புதங்கள், நரசிம்மரை வழிபடுவதற்கான ஸ்தோத்திரங்கள் ஆகியவையும் இடம் பெற்று […]

Read more

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஆர்.மோகன், வானதி பதிப்பகம், பக். 862, விலை 1000ரூ. சாதனையாளர்களின் பண்புகள் பற்றிய பெட்டகம். ஏர்வாடியார் தன் இதழான கவிதை உறவில் தொடர்ந்து வெளியிட்டு வரும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ என்ற கட்டுரைத் தொடர் அவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. அக்கட்டுரைத் தொடர் பிரபலங்கள் பலரைப் பற்றியது. நடைச் சித்திரமாக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் சிறக்கப் பணியாற்றுகிற பிரபல பிரமுகர்கள் குறித்த, சின்னஞ்சிறு தகவல் களஞ்சியமாக இந்நுால் தொகுக்கப்பட்டு உள்ளது. பெருந்தகையோர், அரசியல் தலைவர்கள், ஆன்மிகச் சுடர்கள், இலக்கிய ஆளுமைகள், […]

Read more

பேசும் பரம்பொருள் – பகுதி-2

பேசும் பரம்பொருள் – பகுதி-2, சுதா சேஷய்யன், வானதி பதிப்பகம், பக். 480; ரூ.350 ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார். இதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை […]

Read more

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தமெல்லாம் சிவமயம், சம்பத்குமார், வானதி பதிப்பகம், விலை 180ரூ. சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்? அவர்களின் பாடல்களில் மறைந்து இருக்கும் பொருள் என்ன? சித்தர்களின் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகள் யாவை? அவர்கள் வசிக்கும் குகைகள் எங்கே இருக்கின்றன? நமது பூமிக்கு அவர்கள் வருவது எப்படி? என்பது போன்ற அனைத்து வினாக்களுக்கும் இதில் ஆச்சரியமூட்டும் விளக்கம் இருக்கிறது. அனைத்து சித்தர்களின் பிறந்த ஊர், நட்சத்திரம், சமாதி அடைந்த இடம், மற்றும் சமீபகாலத்தில் வாழ்ந்த சித்தர்களின் விவரங்கள் ஆகியவையும் இந்த நூலில் தரப்பட்டுள்ளதால் […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம்,வானதி பதிப்பகம், பக. 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர்,2/12/18.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

யூஏஏ எனும் ஆலமரம்

யூஏஏ எனும் ஆலமரம், டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. நாடக திலகம் ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக குழுவினர் பற்றியும், அவர்கள் அரங்கேற்றி உள்ள நாடகங்கள் பற்றியும் பல்வேறு அரிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாடக ஆர்வலர்கள் ஒவ்வொருவரையும் படிக்க தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று,  கவிக்கோ ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், பக்.216. விலை ரூ.150. இஃது ஒரு தன் வரலாற்று நூல். நூலாசிரியரின் அறுபதாண்டு தமிழ்ப்பணியில் அவருக்கு நேரிட்ட சில நிகழ்வுகளைப் பற்றிய, அவர் சந்தித்த சில மனிதர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எம்.ஜி.ஆர். கையால் இந்நூலாசிரியர் பொற்பதக்கம் பெற்ற நிகழ்வோடு தொடங்குகிறது இந்நூல். மதுக்கூர் என்ற சிற்றூரில் நடந்த நூலாசிரியரின் திருமணத்திற்கு ம.பொ.சி. நேரில் வந்து வாழ்த்திப் பேசியது, நூலாசிரியர் ஒரத்தநாடு […]

Read more
1 4 5 6 7 8 22