இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று, ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் தம் மனத்திற்கு நியாயம் என்று எது படுகிறதோ? அதன்படியே வாழ்ந்து, தன் வரலாற்று நூலை தமிழர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் படைத்து உள்ளார். இதில் சமகாலத் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என எண்ணற்றோர் பெயர்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், அபூர்வ தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றங்களின் இன்றைய நிலை பற்றி நூலாசிரியர் கூறிய கருத்துகள் சிந்திக்க தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027097.html இந்தப் புத்தகத்தை […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழகத்தில் அவ்வையார் என்றால் டி.கே.ஷண்முகம். டி.கே.ஷண்முகம் என்றால் அவ்வையார் என்று மிக ரத்தினச் சுருக்கமாக, ராஜாஜியால் பாராட்டப்பட்டவர், தமிழ் நாடக மேடையில், அந்த காலத்தில் ஆண்கள், பெண் வேடம் தரித்து நடிப்பது வழக்கமானது தான். ஆனால், வயதில் மிக இளைஞரான, டி.கே.எஸ்., வயது முதிர்ந்த அவ்வை பாட்டியாக வேடம் தரித்து, அதே குரலில் பேசி நடித்த பாங்கு, அவருக்கு அளவில்லாத புகழை ஈட்டித் தந்திருக்கிறது. டி.கே.எஸ்.,சின் நாடக வாழ்க்கை, ஆறு வயதிலேயே […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர் (அவ்வை டி.கே.சண்முகம்),  டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 248, விலை ரூ. 200. நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகத்தின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு பரிமாணங்களில் சுவைபடத் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர். 2012-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட அவ்வை சண்முகம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், கலைஞர்களின் கருத்துகள் மற்றும் பத்திரிகைகளில் இடம் பெற்ற கருத்துகளை ஆண்டு வரிசைப்படி இந்நூல் தொகுத்தளித்திருப்பது சிறப்பு. கொத்தமங்கலம் சுப்பு, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், கி.வா.ஜகந்நாதன், வாலி போன்ற பல்வேறு கவிஞர்கள் அவ்வை சண்முகம் பற்றி எழுதிய […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழ் நாடக உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் டி.கே.சண்முகம். இளைஞரான அவர்,அவ்வை மூதாட்டிய நடித்து “அவ்வை சண்முகம்” என்று போற்றப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், எம்.எஸ்.திரவுபதி உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இவரது நாடகக் குழுவில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் புகழ் பெற்றனர். அவ்வை சண்மகத்தின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் டி.கே.எஸ்.கலைவாணன் சிறப்பாக எழுதியுள்ளார். டி.கே.சண்முகத்தின் ஆற்றலைப் புகழ்ந்து, தலைவர்களும், தமிழறிஞர்களும் தெரிவித்த கருத்துக்களும் இந்த நூலில் […]

Read more

எல்லோரும் நலம் வாழ

எல்லோரும் நலம் வாழ, தொகுப்பாசிரியர் பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 170ரூ. கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களது சிந்தனையில் விளைந்த கவிதை மலர்களில் இருந்து, தேன் துளிகள்போல் தேர்ந்தெடுத்துக் கோத்திட்ட கவிதைகளின் தொகுப்பு நூல். நகைச்சுவை இழையோடுவது, வாசிப்பை நேசிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026610.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

நொய்யல் நதிக்கரைத் தீரன்

நொய்யல் நதிக்கரைத் தீரன், விண்மீன் மைந்தன், வானதி பதிப்பகம், பக். 280, விலை 200ரூ. இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும், காலக்கோட்டு அடிப்படையிலும் கிடைத்தவற்றைப் பல்லோரும் புனைந்தனர். அவற்றைத் தழுவி, வீரமும், விவேகமும், தீரமும், தியாகமும் நிறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கையைக் கற்பனைக் கதாபாத்திரங்களோடு புனையப்பட்ட […]

Read more

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும், பிரியா இராமச்சந்திரன், வானதி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற வழக்கு போல, சில கம்பராமாயண விவாதங்கள் தலைமுறைகளைக் கடந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட வாலி வதை விவாதத்துக்கு, இந்நுால் வழி புதிய பங்களிப்பு செய்திருப்பவர், மருத்துவர் பிரியா இராமச்சந்திரன். ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். கிட்கிந்தா காண்டத்தில் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய இலக்கணமாக திகழ்ந்து வழிகாட்டிய இல்லறத்தாளின் பங்களிப்பை, ‘மனைவி அமைவதெல்லாம்’ என்ற வாழ்வியல் நுாலாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கணவனும், மனைவியும் படித்து பயன் பெறும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026692.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கல்கியின் யுகப்புரட்சி

கல்கியின் யுகப்புரட்சி, வானதி பதிப்பகம், விலை 140ரூ. “கல்கி” பத்திரிகையை 1942-ம் ஆண்டில் கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தியும், அவர் நண்பர் டி.சதாசிவமும் தொடங்கினார்கள். அதற்குமுன், “ஆனந்த விகடன்” பத்திரிகையின் பொறுப்பாசிரியராக “கல்கி” பணியாற்றினார். அப்போது, ஆனந்த விகடனில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இதுவரை நூல் வடிவம் பெறாமல் இருந்தன. அவற்றை “யுகப்புரட்சி” என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் இப்போது புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. புன்சிரிப்புடன் வாசகர்களைப் படிக்கச் செய்வது கல்கியின் பாணி. அந்த பாணியை […]

Read more

சேய்த் தொண்டர்கள்

சேய்த் தொண்டர்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், பக்.446, விலை ரூ.350. ஐந்து வயது வரை பேச்சு வராதிருந்த குமரகுருபரர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்று முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம். முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு […]

Read more
1 6 7 8 9 10 22