திரவுபதியின் கதை

திரவுபதியின் கதை, ஒரியா மூலம் பிரதிபாராய், ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா, தமிழில் இரா. பாலச்சந்திரன், சாகித்திய அகாதெமி, விலை 275ரூ. மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று திர்வுபதி. விதி வசத்தால் ஐந்து பேரை கணவர்களாகப் பெற்ற திரவுபதி, பத்தினி என்று சிலரால் போற்றப்பட்டாலும் வேறு சிலரால் வேசி என்று இகழப்பட்டாள். இதன் மூலம் அவள் அடைந்த இன்னல்களை விவரமாகவும் உருக்கமாகவும் தந்து இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதக் கதையை அதிக அளவில் பயன்படுத்தி, அத்துடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கோர்த்து அருமையான நாவல் போல […]

Read more

அக்னிசாட்சி

அக்னிசாட்சி, மலையாளம் லலிதாம்பிகை அந்தர்ஜனம், தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக். 128, விலை 100ரூ. கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, வழிபாடு, சடங்குகளைச் செய்து கொண்டு வாழ்பவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு நம்பூதிரியின்மனைவி, அங்கிருந்த அடக்குமுறைகள் பிடிக்காமல், கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீடு […]

Read more

கந்தர்வன்

கந்தர்வன், ஜன நேசன், சாகித்திய அகாதெமி, பக்.112, விலை 50ரூ. எழுத்தாளர் கந்தர்வனின் இயற்பெயர் க. நாகலிங்கம் என்பதாகும். வானம் பார்த்த வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் கந்தர்வன். 60 ஆண்டு காலமே வாழ்ந்த எழுத்தாளர் கந்தவர்வன் எழுதிய, 30 ஆண்டுகளில், 62 கதைகள், 100கவிதைகள் மற்றும் நாடகம், கட்டுரை, நூல் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். கந்தர்வனின் கடிதங்களும், சிறப்புத் தன்மை வாய்ந்தவை. சி.ராஜநாராயணன், தி.க.சி., வல்லிக்கண்ணன், செயப்பிரகாசம் முதல், இன்று சிறந்த படைப்பாளிகளாகக் கருதப்படும் வண்ணதாசன் உட்பட எண்ணற்ற […]

Read more

ஒன்ஸ் அபான் ய டைம்

Once upon A Time, சேது, மொழிபெயர்ப்பு கே.டி. ராஜகோபாலன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 180ரூ. மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். மொழிபெயர்த்திருப்பவர் கே.டி.ராஜகோபாலன். குறிப்பாகத் தளங்கள் எதையும் புனையாவிட்டாலும், கேரளாவில் நடப்பதாக களங்கள் சித்தரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து மகளோடு வாழும் கதையின் நாயகி, ஒரு மாபெரும் கூட்டாண்மை நிறுவன குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும்கூட. பெரும் போராட்டங்களுக்கு இடையே, […]

Read more

பையன் கதைகள்

பையன் கதைகள், மலையாளம் வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்திய அகாதெமி, விலை 365ரூ. சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூல். இதில் 73 கதைகள் இடம் பெற்றள்ளன. ஒளி வீசும் கண்கள் படைத்த பையன், எண்ணெய் மின்னும் முகத்தில் எப்போதும் ஒரு தியாகியின் பாவம், ஒவ்வொரு நிமிடமும் அவசியமின்றி மரணிப்பது போலவும், எத்தனை முறை மரணித்தாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது போலவும் ஒரு பாவனை, கற்பனையில் ஓர் இரும்புச் சிலுவையை தூக்கி சுமப்பது போன்ற உணர்ச்சி வெளிப்பாடு, இவர்தான் பையன். […]

Read more

நூறு வடமொழிக் கதைகள்

நூறு வடமொழிக் கதைகள், பத்ம சாஸ்திரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 150ரூ. வடமொழிக் கதைகள் என்பதை சம்ஸ்கிருத கதைகள் என்று புரிந்து கொண்டு படித்தாலும், இந்தக் கதைகள் எந்த வட்டத்துக்குள்ளும் பொருந்தவில்லை. மரபுவழிக் கதைகளா, நீதிக்கதைகளாக, புனைவுகளா, வேற்றுமொழிக்கதைகளா, பஞ்ச தந்திர கதைகளின் மாற்றுருவா? எதையும் நூலாசிரியர் சொல்லவே இல்லை. வாசகனே அவரவர் வாசிப்பின் பரப்புக்கேற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். நூறு கதைகளில் அதிகபட்சமாக 4 கதைகளை “நன்று‘’ எனச் சொல்லலாம். குறிப்பாக, “இரும்பு வியாபாரி”, “அரசனின் […]

Read more

வங்க மொழிச் சிறுகதைகள்

வங்க மொழிச் சிறுகதைகள், (தொகுப்பு 3), அஷ்ரு குமார் சிக்தார், சாகித்திய அகாதெமி, விலை 400ரூ. அரிவாள் மணையில் நறுக்கிய மீன் பாரத தேசத்தில் வளமான இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்ததில் வங்கமொழிக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட இடமும் பெருமிதமும் உண்டு. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு அந்தப் பெருமிதத்துக்குச் சான்று பகிர்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு சிறுகதைகளையும் எழுதியவர்கள் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்கிறது முன்னுரை. பெரும்பாலும் பாரதம் விடுதலை பெற்ற சமயத்தில் வங்காளம் இருந்த அவலமான நிலையைப் […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, தொகுப்பாசிரியர் இரா. காமராசு, சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. சாகித்திய அகாதெமி சென்னை நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். கால்டுவெல்லின் தமிழ் நோக்கு, அவரின் தமிழ்ப் பங்களிப்பு, திராவிடக் கருத்தியல் எனப் பல்வேறு பரிமாணங்களில் கால்டுவெல்லின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து அவரின் பெருமையை நிலை நாட்டும் இந்நூல் தமிழ் ஆய்வு நூல்களில் முக்கியமான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —– மனிதனும் தெய்வமும், புத்தகப்பூங்கா, விலை 125ரூ. புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் முதலியவற்றை […]

Read more

விடுதலை

விடுதலை, சமன் நாஹல், தமிழில் பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதெமி, பக். 384, விலை 200ரூ. புகழ்பெற்ற எழுத்தாளர் சமன் நாஹல், ‘ஆஸாதி’ என்ற பெயரில் எழுதிய நாவலின் தமிழ் வடிவம். சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசப் பிரிவினையின்போதும் உருவான அரசியல் மாற்றங்களைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இந்த நாவல், சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நாட்டை பிளவுபடுத்தியதால் விளைந்த ரணங்களையும் வேதனைகளையும் கதையினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் லாலா கன்ஷிராம் என்ற தானிய […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு, விலை 200ரூ. ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பையும், ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பையும் விளக்கும் நூல். ஆதிசைவர்களின் வரலாற்றை இதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 30/3/2016.   —- தந்தை கோரியோ, சாகித்திய அகாதெமி, விலை 220ரூ. 19ம் நூற்றாண்டில் பாரிசு நகரத்தின் நாகரீக வாழ்வு யார் யாரை எப்பாடுபடுத்தியது என்பதை விளக்குவதே இந்நாவலின் நோக்கம். பாரிசு நகர மக்களின் பண்பாடு, பழக்க […]

Read more
1 2 3 4 5 6 7