பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்), எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, விலை 225ரூ. “மூன்றெழுத்தில் மூச்சு இருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்” என்று பாடியவர் எம்.ஜி.ஆர். அவரது மூச்சுக்காற்று முடிந்தபிறகும் அவரைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவே இல்லை. இன்னும் சொன்னால், அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘எம்.ஜி.ஆருக்கு சாவு கிடையாது’ என்பது கிராமத்து ஐதீகங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரைப் போல எத்தனையோ கதாநாயகர்களைத் தமிழ் சினிமா பார்த்துவிட்டது. […]

Read more

தாதுமணல் கொள்ளை

தாதுமணல் கொள்ளை, முகிலன், ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், விலை 160ரூ. இயற்கையின் கொடையை சுயநலச்சக்திகள் சூறையாடவதை அம்பலப்படுத்தும் ஆவணம் இது. தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலோரப் பகுதியில் இருக்கும் தாதுவளம், கடந்த 20 ஆண்டுகளாக கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. பேருக்கு அரசின் அனுமதியை வாங்கிகொண்டு பெருமளவு அள்ளி கணக்கில்லாத கோடிகளைக் கொண்டுபோய்விடுகிறார்கள். இவை அரசின் சொத்து, அதாவது நாட்டின் சொத்து. இன்னும் சொல்லப்போனால் மக்கள் சொத்து. ஆனால் இதனைத் தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி காக்கிச் சட்டைகள் […]

Read more

விகடன் இயர்புக் 2013

விகடன் இயர்புக் 2013, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் கல்வியும் அறிவும் ஒரு சேரப் பெற்ற மனிதனே வெற்றிபெற முடியும். கல்வியையும் பட்டங்களையும் கொடுக்கும் கல்லூரிகள், அறிவைக் கொடுக்கிறதா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், அறிவு ஆயுதத்தை விகடன் பிரசுரம் தயாரித்துள்ளது; ஆண்டுதோறும் தயாரிக்கவும் உள்ளது. ‘புறத்தை அறிந்துகொள்ளப் பயன்படுவது தகவல். தன் அகத்தை ஆராய்ந்து தெளிவதற்கு முற்படுவது அறிவு. வாழ்வின் இருப்பை விளங்கிக்கொள்ள வழிவகுப்பது ஞானம்’ என்று, […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம்

தமிழ் மக்கள் வரலாறு – சோழப் பேரரசின் காலம், க.ப. அறவாணன், வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029. விலை ரூ. 250 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவ பண்டாரத்தா, கே.கே.பிள்ளை – ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் சோழர் பேரரசு பற்றிய முதன்மை வரலாற்றை எழுதியதில் முக்கியமானவர்கள். இதில், பெரும்பாலும் சோழ அரசர்களின் வரலாறு முழுமையாகவும், சோழர்காலச் சமூக வரலாறு சற்றே குறைவாகவும் இருக்கும். மன்னர்களின் வரலாற்றைவிட, மக்களின் வரலாற்றைச் சொல்வதே உண்மையான வரலாறாக இருக்க […]

Read more

நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை)

நடந்தது நடந்தபடி… (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்துவந்த பாதை), ஏ.எம். சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100 ஆதாயம் தேடுவோரும் ஆள்காட்டிகளும் அதிகார வர்க்கத்தில் அதிகமாகிப்போன இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு புத்தகம் வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். என்ற உயரிய பொறுப்பை தனக்கான கௌரவமாகக் கருதாமல், மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிச் செயல்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஏ.எம். சுவாமிநாதன். தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று சொல்லாமல், ஐ.ஏ.எஸ். அலுவலர் என்றவர். […]

Read more

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40 பி, இரண்டாவது தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 61. விலை ரூ. 200 அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் […]

Read more

மாவீரன் தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை, உடுமலை பி.எஸ்.கே. செல்வராஜ், தன்னம்பிக்கை வெளியீடு, 10, சாஸ்திரி வீதி எண் 1, பி.என்.புதூர், கோவை – 41. விலை ரூ. 100 ‘சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையே ஆண்ட தீரன் சின்னமலை’ என்று அம்பிகாபதிப் புலவரால் பாடப்பட்ட மன்னனின் கதை இது! மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை, ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன். ஹைதர் அலி இறப்புக்குப் பிறகு, மைசூர் மன்னராகப் […]

Read more

அவர்தான் கலைவாணர்

அவர்தான் கலைவாணர், சோழ. நாகராஜன், தழல் பதிப்பகம், 25, பாண்டியன் நகர் 3-வது தெரு. கரிசல் குளம், மதுரை – 18. விலை ரூ. 50 கலையில் கஷ்டமானது, சிரிக்க வைப்பது என்பார்கள். அதைவிடக் கஷ்டமானது சிரிப்போடு சிந்திக்கவும் வைப்பது. இரண்டையும் ஒருசேரச் செய்து காட்டிய கலைஞன், என்.எஸ். கிருஷ்ணன். கலைக்காக மட்டுமல்ல அவரது கொடைக்காகவும் இன்று வரை நினைக்கப்படுகிறார். ‘எப்போது ஒருவன் லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவனிடம் இருக்கும் கலைத்திறமை போய்விடும்’ என்று சொன்ன மகத்தான மனிதனின் சுருக்கமான […]

Read more

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பாத்திமா டவர் (முதல் மாடி), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே எதிரில், சென்னை – 5. விலை ரூ. 50   பார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது. தமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. ‘தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, ‘இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே… பங்கேற்பாளர்கள் ஆகக்கூடாது’, ‘திராவிடன் என்று […]

Read more

நஞ்சாகும் நீதி

நஞ்சாகும் நீதி, அ. முத்துக்கிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 18, விலை ரூ. 120 ‘படித்தவன்தான் இன்று உலகின் மிகப்பெரும் ஊழல் பேர்வழியாக விளங்குகிறான். படித்தவன்தான் இந்த நாட்டில் உள்ள வனங்கள் தனக்காகவே வளர்ந்திருப்பதாக நினைக்கிறான். படித்தவன்தான் இன்று மலைச் சிகரங்களில் வழிந்தோடும் ஆறுகளின் நீர் முழுவதும் தான் வாழும் நகரங்கள் நோக்கிப் பாயவேண்டும் என்கிறான். படித்தவன்தான் தனக்கு வேண்டிய அலுமினியத் தாதுக்களின் (பாக்சைட் மலைகள்) மீது, ஏன் பழங்குடிகள் குடியிருக்கிறார்கள் என்று கேட்கிறான். படித்தவன்தான் தன்வீட்டு […]

Read more
1 2