தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை, சு. சீனிவாசன், அறிவில் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, பக். 264, விலை 250ரூ. இன்றைய சூழலில் கணினி நம் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆயினும் தமிழ்வழிக் கல்வி கற்ற ஒருவர் கணினிகளை எங்ஙனம் இயக்க இயலும் என்பதும், மொழி குறித்த ஆய்வுக்கு கணினி எவ்வகையில் துணைபுரியும் என்பதும் நீண்ட நாள்களாக நிலவிவரும் ஐயங்களாக இருக்கின்றன. இந்தப் பொருண்மையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிக […]

Read more

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம், (தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்), சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக். 160, விலை 120ரூ. இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் (ஙஅட) வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை […]

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை, பி.எல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக்.143, விலை 60ரூ. பாரதியின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க. , டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ., வையாபுரிப்பிள்ளை, ம.பொ.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனகலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதிபற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப்பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாக மறுமுறை […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக். 272, விலை 160ரூ. சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (ஏ.என்) அவர்களின் நட்பு வட்டம் எத்துணை பெரியது? எத்தகைய சான்றோர்களுடன் அவர் பழகி இருக்கிறார்? ஓர் உற்ற நண்பனாக, உடன் பிறவாச் சகோதரனாக, சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்குபவராக, திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்குவிக்கும் ஆசானாக, எளியோர்களை வளர்த்துவிட்ட வழிகாட்டியாக என பல்வேறு ரூபங்களில், எண்ணற்ற இதயங்களில் வியாபித்திருக்கும் அவரின் வாழ்க்கைப் பயணத்தின் வரலாற்றுப் பதிவாக மலர்ந்திருக்கிறது […]

Read more

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார், இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த […]

Read more

தினமணியின் தமிழ்ப்பணி

தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர் கு. வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ. தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது. தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை […]

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்,

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ. நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மூன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும் வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘ என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் […]

Read more

நோய் தீர்க்கும் சிவாலயங்கள்

நோய் தீர்க்கும் சிவாலயங்கள், டாக்டர் ச. தமிழரசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் நோய் தீர்க்கும் தலங்களாகக் கருதப்படும் ஆலயங்களுக்கு நேரில் சென்று தெய்வீகச் செய்திகளைச் சேகரித்து அதை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.மேலும் அந்த நோய்கள் குறித்த மருத்துவக் கருத்துகளையும் கூறுகிறார். இந்த நூலில் பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன், தோல் நோய் தீர்த்த திருத்துருத்தி, சனி பகவானின் வாத நோய் போக்கிய திருவாதவூர், வலிப்பு நோய் விரட்டிய திருவாசி, சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர், புற்று நோயைக் […]

Read more

உடலும் உணவும்

உடலும் உணவும், டாக்டர் எஸ். அமுதகுமார், தினத்தந்தி பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவரும் குடும்ப மலரில் டாக்டர் எஸ்.அமுதகுமார் 100 வாரங்கள் எழுதிய ‘உடலும் உணவும்’ என்ற மருத்துவக் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல். நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது. அதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகளில் எது சிறந்தது; உடல் நலம் பேண எவ்வளவு தண்ணீர் தேவை; கோதுமை உணவு, அரிசி உணவு இவற்றில் எது […]

Read more
1 5 6 7