கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை

கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை, என்.ராமகிருஷ்ணன், மதுரை புத்தக மையம், விலை 15ரூ. உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதைமார்க்ஸியத் தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எளிய முறையில் எழுதிய அனுபவம் கொண்ட என்.ராமகிருஷ்ணன், ‘கார்ல் மார்க்ஸ் – உலகிற்குப் புத்தொளி தந்த மாமோதை’ என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநூல் மார்க்ஸின் வாழ்க்கையைவிடவும் அவருடைய கொள்கைகளை, அடிப்படைகளைச் சுருக்கமான வகையில் தருகிறது. அறிமுக நூல் என்ற வகையில் இதுவும் குறிப்பிடத்தக்கதே. – ஆதி வள்ளியப்பன், நன்றி: தி இந்து, 5/5/2018. இந்தப் […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும், தா. பாண்டியன், என்.சி.பி.எச். வெளியீடு, விலை 140ரூ. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தா.பாண்டியன், ‘கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைக் கூறும் அதே நேரம், இந்தியா குறித்து மார்க்ஸ் கூறிய முக்கிய பகுதிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இந்தியாவின் வறுமை குறித்து ஆராய்ந்த தாதாபாய் நௌரோஜியும் மார்க்ஸும் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் அடுத்தடுத்த அறைகளில் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு ஆராய்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சோஷலிச […]

Read more

நங்கை உந்தன் ஜோதி முகம்

நங்கை உந்தன் ஜோதி முகம், ரமணிசந்திரன், அருணோதயம், விலை 150ரூ. சுதந்திர போராட்ட காலத்தில் நிகழ்ந்ததாக தனது கற்பனையில் உருவானதை நெடுங்கதையாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர் ரமணிசந்திரன். ஜமீன்தார் ஒருவருக்கும், ஜமீன்தார் முறையை ஒழிக்க நினைக்கும் புரட்சிகர பெண்ணுக்கும் இடையேயான காதலை விவரிக்கிறது இந்த கதை. நாவல் பிரியர்களுக்கு இந்த புத்தகம் நல்ல விருந்து. நன்றி: தினத்தந்தி, 9/5/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026680.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை

அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக்கலை, தொகுப்பாசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1000ரூ. “அ.ச.ஞா.” என்று அன்புடன் அழைக்கப்படும் அ.ச.ஞானசம்பந்தனார் மிகப்பெரும் தமிழறிஞர். கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன், நாவலார் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் இவருடன் படித்தவர்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 14 ஆண்டுகள் பணியாற்றியபின், சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகவும், பின்னர், தமிழக அரசு செய்தித் துறையில் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர், தமிழ் வெளியீட்டுத்துறை இயக்குனர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் முதலிய பதவிகளை வசித்தார். ஏராளமான நூல்களை […]

Read more

ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்கதரிசனம்)

  ஓஷோ 1000, ஒரு ஞானியின் தீர்க்கதரிசனம், தொகுப்பாசிரியர் மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலை 140ரூ. உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஓஷோவின் 1000 பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். பொன்மொழிகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. மாதிரிக்கு சில பொன்மொழிகள் கையில் மாற்று மருந்து இருக்கிறது என்பதற்காக, யாரும் விஷத்தை சாப்பிட்டு சோதனை செய்து கொள்ள வேண்டாம். அச்சம், கவலை, நோய் ஆகிய மூன்றும் மனிதனின் வலிமையை அழிப்பவை. வாள் தன் உறையை வெட்டாது. நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன், தன் கைக்கு ஒரு பாம்பின் வால் கிடைத்தாலும் […]

Read more

சங்கீத மும்மணிகளின் திரையிசைப் பாடல்கள்

சங்கீத மும்மணிகளின் திரையிசைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் ஆர்.ரெங்கராஜன், மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. மதுரையில் பிறந்தவரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, 10 வயதிலேயே இசைத் தட்டில் பாடி புகழ் பெற்றவர். பிறகு சேவா சதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் கச்சேரிகள் நடத்தி, மகாத்மா காந்தி, நேரு உள்பட தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார். “பாரத ரத்னா” பட்டம் பெற்று புகழின் சிகரத்தைத் தொட்டார். டி.கே.பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகியோர் சினிமாவில் பின்னணி பாடகிகளாக விளங்கினர். மூன்று பேரும் சினிமாவில் பாடிய பாடல்கள் இப்புத்தகத்தில் […]

Read more

தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள்

தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள் (பதிப்பு, கற்கைநூல், ஆளுமை, ஆவணம் சார்ந்த எட்டுக் கட்டுரைகள்), அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. வெவ்வேறு பொருள் சார்ந்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட விலாச நாடகங்கள் 19-ஆம் நூற்றாண்டில் அச்சு நாடகப் பிரதியாக இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றன. அப்போது பதிப்பிக்கப்பட்ட நளவிலாசம், சகுந்தலை விலாசம், டம்பாசாரி விலாசம் உள்ளிட்ட பல விலாச நாடகங்களின் சமூகப் பின்னணியை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். டம்பாசாரி விலாசம் போன்ற நாடகங்கள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறுகிறார். […]

Read more

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி,  சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.504, விலை ரூ. 450. சாணக்கியர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்‘ நூல், அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றிப் பொதுவாகப் பேசினாலும், ஓர் அரசனின் கடமைகளில் தொடங்கி, கீழ்மட்ட அரசு அலுவலர்களின் பணிகள் வரை தெளிவாக விவரிக்கிறது. அரசனின் பாதுகாப்பு, அரச ஊழியம், வாரிசு முறை, அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள், கருவூல அதிகாரிகள், வேளாண்மை, காடு வளர்ப்பு, சட்டமும் நீதியும், மண வாழ்க்கை, குற்றப் புலனாய்வு, பாலியல் குற்றங்கள், ராணுவ அமைப்பு போன்ற எல்லாப் பிரிவுகள் […]

Read more

முல்லை மண்-மக்கள்-இலக்கியம்

முல்லை மண்-மக்கள்-இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.200, விலை ரூ.150. சங்கத் தமிழ் இலக்கண-இலக்கியங்களில் பல சந்தேகங்களும், சிக்கல்களும், முரண்பாடான கருத்துகளும் இருக்கின்றன. அந்தவகையில், முல்லைத் திணைப் பாடல்களில் உள்ள பல வகை சிக்கல்களும் ஐயங்களும் ஆய்வுப் பொருளாகியுள்ளன. அவை களையப்பட வேண்டும் என்ற நோக்கில் ‘முல்லைத் திண‘யில் இருக்கும் ஐயங்களுக்கான விடைகளை இந்நூல் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறது. முல்லைத் திணைப் பாடல்கள், உலக இலக்கியங்களான கிரேக்க, லத்தீன் முல்லைத் திணைப் பாக்களோடு ஒப்புநோக்கப்பட்டுள்ளது. பல பொருள் தரும் ஒரு சொல் […]

Read more

மரபணு என்னும் மாயக்கண்ணாடி

மரபணு என்னும் மாயக்கண்ணாடி, இரா.சர்மிளா, காவ்யா, பக்.112, விலை ரூ.120. உயிரினங்களின் இயக்கத் திறனுக்கு காரணமாக இருக்கும் மரபணு குறித்து இந்நூல் பேசுகிறது. மரபணு ஆராய்ச்சி நடைபெற்றது எப்போது? அதைக் கண்டறிந்தது யார்? என்பன போன்ற பல சுவாரசியமான தகவல்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. மரபணுவின் அமைப்பு, குரோமோசோமின் அமைப்பு, புரத உற்பத்தி, மரபணு மாற்றத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் என பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் மரபணு ஆராய்ச்சி எந்த அளவுக்கு உதவும் என்பது குறித்து இந்நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ள […]

Read more
1 2 3 7