திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்,  கீழப்பாவூர் ஆ.சண்முகையா, ராஜ கோகிலா அறக்கட்டளை, பக். 150, விலை ரூ.100. திருமூலர் அருளிய திருமந்திரம் சிவபெருமானைப் போற்றிப்பாடும் வகையில் தோத்திர நூலாகவும், சைவ சித்தாந்தங்களைக் கூறுவதில் சாத்திர நூலாகவும், யோகங்களை விரித்துரைப்பதில் யோக நூலாகவும் திகழ்கிறது. ஏழு தந்திரங்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாம் தந்திரம் பற்றிய பாடல்களுக்கு வெறும் விளக்கம் மட்டும் தராமல், சங்க இலக்கியங்கள், பன்னிரு திருமுறைகள், திருக்குறள் முதலியவற்றோடு ஒப்பிட்டுக் கூறி, சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் […]

Read more

புத்திக் கொள்முதல்

புத்திக் கொள்முதல் (சிறுகதைகள்), ஜனநேசன்,பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.90. தினமணி கதிர், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, வண்ணக்கதிர் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 17 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பங்குச் சந்தையில் ஈடுபட்டு பெரிய அளவுக்கு நஷ்டமடைந்த சொக்கலிங்கம், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பின்பு அதிலிருந்து மீண்டு எழுந்ததைச் சொல்லும் ‘புத்திக் கொள்முதல்‘ சிறுகதை, பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ‘பாடம்‘ மற்றும் ‘உதிர்வதற்கல்ல முதுமை‘ கதைகள், காதல் திருமணம் பற்றி கூறும்‘கெளரவம்‘, மதநல்லிணக்கத்தை […]

Read more

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு, எஸ்.அன்பழகன், அன்பு பப்ளிசிங் ஹவுஸ், பக்.384, விலை ரூ.250. திருமணப்பொருத்தம் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திருமணப்பொருத்தங்களான தசவித பொருத்தங்கள், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம், திருமணத்திற்கு நாள் குறிப்பது போன்றவற்றை எளிய முறையில் ஜோதிடரல்லாதோரும் அறிந்துகொள்ள எழுதப்பட்ட அரிய நூல். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைக் குறித்தும் அதில் நிற்கும் கிரகங்கள், ஏழாம் ஸ்தானத்தின் மதிப்பு, இந்த ஸ்தானத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை தெளிவு படுத்தியிருக்கும் ஆசிரியர், ஆயுள் ஸ்தானம் குறித்தும் […]

Read more

மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார், ஹென்றி வோல்கவ், தமிழில் நா.தர்மராஜன், அலைகள் வெளியீடு, விலை 160ரூ ரஷ்ய எழுத்தாளர் ஹென்றி வோல்கவ் எழுதிய ‘பர்த் ஆஃப் அ ஜீனியஸ்’ புகழ்பெற்ற நூலை ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற கவித்துவத் தலைப்புடன் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்ததன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் ரஷ்யாவில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வெளியான நூல் இது. உலகத் தத்துவச் சிந்தனைகளுக்குப் புதிய கண்களைத் தந்த மார்க்ஸின் ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் எப்படி வளர்ந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்த நூல் அலசியிருக்கிறது. […]

Read more

பழைய யானைக் கடை

பழைய யானைக் கடை (சங்கம் முதல் சமகாலக் கவிதைகள் வரை),  இசை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.168, விலை ரூ. 195. சங்க காலம் முதல் சமகாலக் கவிதைகள் வரை உள்ள கவிதைகளில் ‘விளையாட்டு‘ (நகைச்சுவை) எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. தனிப்பாடல் திரட்டில்தான் முதன் முதலாக நிறைய நகைச்சுவை, பகடி, சிலேடை, அங்கதச் சுவையுடைய பாடல்கள் உள்ளன. தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாக நகை (சிரிப்பு) இடம்பெறுகிறது. ‘அங்கதம்‘ பற்றிய இலக்கணத்தையும் அது குறிப்பிடுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களில் நகைச்சுவைப் […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழ் நாடக உலகில் முடிசூடா மன்னராக விளங்கியவர் டி.கே.சண்முகம். இளைஞரான அவர்,அவ்வை மூதாட்டிய நடித்து “அவ்வை சண்முகம்” என்று போற்றப்பட்டார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சுப்பையா, எம்.என்.ராஜம், எம்.எஸ்.திரவுபதி உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இவரது நாடகக் குழுவில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் புகழ் பெற்றனர். அவ்வை சண்மகத்தின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் டி.கே.எஸ்.கலைவாணன் சிறப்பாக எழுதியுள்ளார். டி.கே.சண்முகத்தின் ஆற்றலைப் புகழ்ந்து, தலைவர்களும், தமிழறிஞர்களும் தெரிவித்த கருத்துக்களும் இந்த நூலில் […]

Read more

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், தமிழில் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், விலை 70ரூ. மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது “நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்” என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலைகள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன. மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற […]

Read more

நேரு சொன்ன நூறு

நேரு சொன்ன நூறு, திருக்குடந்தை பதிப்பகம், விலை 50ரூ. நவஇந்தியாவை உருவாக்கியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திரப் போராட்டத்தின் போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 17 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். அவர் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கூறிய 100 விஷயங்கள், இந்த நூலில் உள்ளன. அண்மையில் காலமான திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் இதை எழுதியுள்ளார். சிறிய நூல்தான். ஆனால் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026856.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம்

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. சீனாவிலுள்ள புத்தமத நூல்கள் பலவற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கண்டு, புத்தர் அவதரித்த இந்தியாவிற்கே சென்று உண்மை நிலையை அறிய விரும்பி, கி.பி.629-ல் பயணத்தை மேற்கொண்டவர் சீனத் துறவி யுவான் சுவாங். 20 வயதிலேயே தனது நாட்டை விட்டு வெளியேறி, காடுகள், மலைகள், பாலைவனம், சீதோஷ்ணம், காட்டு விலங்குகள், கெள்ளையர் கூட்டம்… என்று பல இடர்களையும், தடைகளையும் கடந்து கால்நடையாகவே இந்தியாவிற்குள் வந்தார். பாடலிபுத்திரத்திலுள்ள நாளந்தா பல்கலைக் […]

Read more

புலவனும் பொல்லாதவனும்

புலவனும் பொல்லாதவனும், பரிக்கல ந.சந்திரன், ஆர்த்தி பதிப்பகம், விலை 120ரூ. வாழ்க்கையில் எல்லோருக்குமே அனுபவங்கள் ஆயிரம் இருக்கும். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வல்லவரான நூலாசிரியர், பல ஊர்களுக்கும் சென்றபோது தாம் பெற்ற அனுபவங்கள் சிலவற்றை எளிய தமிழில் எள்ளல் இழையோட நாடக வடிவாக்கித் தந்திருக்கிறார். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 7