ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்

ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்,  சுப.உதயகுமாரன், வல்லமை, பக்.95, விலை ரூ.90. சமூகத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? வீடுதான் மனித வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. அனைத்து வீடுகளையும் சேர்த்துதான் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புகிறோம். அன்பையும், அறத்தையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் இடங்களாக வீட்டை மாற்ற வேண்டும். அப்போதுதான் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இன்றைய வீடு எப்படி இருக்கிறது? வீட்டில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள, […]

Read more

ஞான மூலம்

ஞான மூலம், அண்ணன் ஜெயகாந்தனுடன் இளமைப்பருவம்,  த.நடராஜன், வேமன் பதிப்பகம், பக்.160; விலைரூ.100. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் தம்பி எழுதிய நூல். இளமைக் காலத்திலிருந்து ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்களை இந்நூலில் அவர் பதிவு செய்துள்ளார். சிறுவயதிலேயே சண்டை போடும் குணம் ஜெயகாந்தனுக்கு இயல்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது தம்பியை (நூலாசிரியரை) நாய் கடித்துவிட்டதைத் தெரிந்து கொண்ட ஜெயகாந்தன், அந்த நாயை வளர்ப்பவருடன் சண்டைக்குப் போயிருக்கிறார். ‘நாயைக் கட்டிப் போட்டு வ ளர்க்க வேண்டும்; ரோட்டுல போறவங்க, வர்றவங்க எல்லாரையும் கடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தீங்களா?‘ என்று கோபத்துடன் சண்டைக்குப் […]

Read more

சித்தம் அழகியார்

சித்தம் அழகியார், சுகி.சிவம், கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.100. சமூக அக்கறையுடன் கூடிய ஆன்மிகக் கருத்துகளை இந்த பூமியில் விதைத்து வரும் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான நூலாசிரியரின் கருத்துக் குவியலே இந்நூல். மனவிகாரம் உடைய இந்த மனித சமூகத்தில் ‘சித்தம் அழகியவர்கள்‘ நம் கண்களுக்குப் பளிச்சென தெரிவதை தனக்கே உரித்தான பாணியில் 24 தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். இறையடியார்கள் எந்தப் புகழுக்கும் மயங்காதவர்கள். அவர்கள் ஆணவம் தலைக்காட்டாது அடக்கம், பணிவு, எளிமை, ஒடுக்கம் உள்ளிட்ட பண்புகளின் உறைவிடமாய் திகழ்பவர்கள். அப்படிப்பட்ட உதாரண புருஷர்கள்தான் சித்தம் […]

Read more

காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது

காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.264, விலை ரூ.200. ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் என்கிற நூலை முன்மாதிரியாகக் கொண்டு தமிழில் படைக்கப்பட்ட நூல் இது. சூரியனை மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட பல கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த அகிலத்தின் தோற்றம் எப்படி ஏற்பட்டது? அதன், தன்மை குறித்து கி.மு.340 காலத்தில் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில், இந்திய விஞ்ஞானி பாஸ்கரா, தாலமி, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர், நியூட்டன் , ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல […]

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன், மேன்மை பதிப்பகம், விலை 140ரூ. கல்வி முறை, மக்கள் தொகை, மனிதநேயம், மதுவின் தீமைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இந்த நூலில் புதைந்துள்ளன. ஆசிரியர் உதயை மு. வீரையன் 30 தலைப்புகளில் எழுதி உள்ள தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. சமுதாயத்துக்கு தேவையான அனைத்து கருத்துகளும் ஒரு சேர கிடைக்கின்றன. நன்றி: தினத்தந்தி,16/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026693.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

இந்தி ஏகாதிபத்தியம்

இந்தி ஏகாதிபத்தியம், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், விலை 240ரூ. நாடு விடுதலை அடைந்த பின் தமிழகம் கண்ட புரட்சியில் மிக முக்கியமானது மொழிப்போர் என்பதை தமிழ்ப் பேசும் நல்லுகம் நன்கறியும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலுக்கட்டாயமாக நடந்த இந்தி திணிப்பையும், அதற்கு எதிராக தமிழகம் மேற்கொண்ட போராட்டங்களையும் கச்சிதமாக விவரிக்கிறது இந்த நூல். ‘ஒரு இனத்தை அடிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மொழியை அழித்து விட வேண்டும்’ என்ற சூழ்ச்சியின் அடிப்படையிலேயே, பாரதத்தின் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் இந்தியை திணிக்க […]

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. இந்தியாவில் வசிக்கும் தனிநபர் ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆதார் பதிவு ஆதாரமாக ஆகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆதார் சட்டத்தை முழுமையாக விளக்கிக் கூறும் நூல். அனைவரும் தெரிந்து பயனடைய வேண்டிய தகவல்கள் ஆதார் சட்டம் ஓர் அறிமுகம், வகைமுறைகள், ஒழுங்குமுறை விதிகள் என 3 தலைப்புகளில் பயனுள்ள வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டு உள்ளன. ஆதார் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் வகை செய்வதற்காக நமது அரசு 2016-ம் ஆண்டு […]

Read more

அன்பின் பிரபந்தம்

அன்பின் பிரபந்தம், உலகக் கவிதைகள், மெொழிபெயர்ப்பாளர் கிருஷ்ண பிரசாத், காவ்யா, விலை 950ரூ. பிறமொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்று பாடினார் பாரதி. அந்த முண்டாசு கவிஞனின் அவாவை நிறைவேற்றும் வகையில் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் புகழ்பெற் கவிதைகளும், பாப்லோ நெருடா, அகமத் பராஸ் போன்ற உலக புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளும் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள பெருநூல் இது. உலக கவிஞர்களின் நவரசம் ததும்பும் பாடல்களை ஒருசேர படிக்கும்போது வாசகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுப்பது திண்ணம். […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more

தொழில் முனைவோர்

தொழில் முனைவோர், இரத்தின நடராசன், ஏகம் பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. பண்டைய காலந்தொட்டு உழவு மற்றும் நெசவு தொழில்கள் மிக முக்கியமாகக் கருதப்பட்டு வந்தன. திரைகடலோடியும் திரவியம் திரட்டு என்பர். நாம் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்நுால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் செய்பவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும், அனுபவங்களையும், ஆலோசனைகளையும் உள்ளடக்கிய அறிவுப் பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 2 3 4 5 6 7